Saturday 3 May 2014

வழியறியா விழி.

வழியறியா வழி

விளங்காதவனை விளங்க வைப்பது வீண்வேலை.
விளங்கியவனை விளக்குவது வெட்டி வேலை
விளங்குபவனை விளக்கினால் அறிவு  வேலை.
விளங்கி நீ விளக்கினால் நல்ல வேலை.

ஆகாத காரியங்கள் தொடர வேண்டாம்
அறைகுறை ஞானம்கொண்டு தொடங்க வேண்டாம்.
ஆத்திரத்தில் அவசரமும் கொள்ள வேண்டாம்.
நேத்திரம் மூடிக்கொண்டு பயணம் வேண்டாம்.

பாத்திரம் அறியாமல் இணைவ தெப்படி?
வாத்தியம் பழகாமல் முனைவ தெப்படி?
வேகாத கல்லை ஏனோ வேக வைப்பாய்
வேகுமுன் பருப்பை ஏனோ இறக்கி வைப்பாய்.

இருமுனை தொடாத காதல் எதற்கு?
மறுமுனை அறியாத ஏவல் எதற்கு?
திருப்பங்கள் செய்யாமல் திருப்பு முனையா?
விருப்பங்கள் நிகழாமல் விளைவும் வினையா?

ஆகும் என்றறி வதையே ஆய்ந்து தொடு
ஆவதையும் அளந்தறிந்து தேர்ந்து எடு
விழியறியா வழிகளையும் விலக்கி விடு.
மொழியறிந்து செயல் வினையை முடுக்கி நடு.

கொ.பெ.பி.அய்யா.




No comments:

Post a Comment