அம்மாவிற்கு இரங்கற்பா
அம்மா அம்மா வா என்றே
அகிலம் இன்று அழுகிறதே.
தாயே தாயே நீ என்றே
தமிழே உன்னை தொழுகிறதே.
அம்மா உன்னை இல்லை என்றால்
நம்ப மனமும் மறுக்கிறதே.
சும்மா சொல்லும் சொல்லாக்கி
அம்மா நீயும் எழுந்து வா!
ஜே என்றாலே ஜெயம் என்பார்.
ஜெயம் என்றாலே நீயென்பார்.
எமனிடம் தோற்றதும் பொய்தானோ!
இமயம் சாய்ந்ததும் மெய்தானோ!
புரட்சித் தலைவர் ஆன்மா நீ
புரட்சித் தலைவி புகழே நீ
உழைத்துக் களைத்து அவர்நிழலே
அழைத்து அமரம் ஆனாயோ!
நிரந்தரம் முதல்வர் நீ என்றோம்.
வரந்தரும் இறைவி தானென்றோம்
நிறைந்தும் தமிழகம் நீயாக
பரந்தும் துணைசெய் தாயாக.
கொ.பெ.பி.அய்யா.