Monday 19 May 2014

அம்மா உன்னைப் பாட.....

அம்மா உன்னைப் பாட...........

அம்மா உன்னைப் பாட நான்
ஆயுள் கொண்டேனே! அது
சும்மா இல்லை எந்தன்
நன்றிக்கடன் தானே.

பள்ளியில் பிள்ளையை சேர்த்தது
மட்டும் நானம்மா! அவனை
படிக்க உதவியது நீயம்மா!
பட்டம் தருவதும் நீயம்மா!.

பெண்ணை அவளை பெற்றது
தானே நானம்மா! அவளை
கண்ணாக வளர்த்ததும் நீயம்மா!
கண்ணாலம் செய்ததும் நீயம்மா!.

மனிதன் என்னை ஈன்றது
தானே தாயம்மா! என்னை
மனிதனாக மதித்ததும் நீயம்மா!
மனைகட்டிக் கொடுத்ததும் நீயம்மா!.

பிள்ளை குட்டி பெற்றது
தானே நானம்மா! வாழ
ஆடுமாடு அளித்ததும் நீயம்மா!
ஆதாரம் தந்ததும் நீயம்மா!.

கடனும் பட்டுக் கெட்டது
தானே நானம்மா! கடனை
கட்டிமுடித்து வாழவைத்ததும் நீயம்மா!.
நட்டிய பசுமையும் நீயம்மா!.
                                  
நோயாய் அன்று நொந்தது
தானே நானம்மா!நோயை
போக்கிய தாயே நீயம்மா!
புண்ணிய மாதா நீயம்மா.!

வெறும் வீடு மட்டும் கட்டியது
தானே நானம்மா!நிறைந்த
வீட்டில் மங்களம் நீயம்மா!
வேண்டிய தெல்லாம் நீயம்மா!

ஏழை என்றே பட்டேன் 
தானே நானம்மா! ஏழை
உயர ஏணியானது நீயம்மா!
உண்மை தெய்வம் நீயம்மா!


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment