Thursday 15 May 2014

உசுரு போல் ஒட்டு

உசுரு போல ஒட்டு.

உசாரய்யா உசாரு
ஓரஞ்சாரம் உசாரு
உசுரு போல ஓட்டொண்ணும்
உணரவேணும் கண்ணுன்னும்.

அலட்சியமா பாக்காதே
அக்கம் பக்கம் தேடாதே
அம்மா காத்த ரெட்டஇலை
அதுல குத்து நச்சுன்னு.

ஓட்டுப்பெட்டி முன்னால
வீட்டைப்பற்றி தன்னால
எண்ணிப்பாரு பின்னால
ரெட்ட இலைக் கண்ணால.

அம்மா மட்டும் தெரியுதா?
அவள நல்லாப் புரியுதா?
உனக்காக வாழுறா
உசுரு ரெட்ட இலையவா.

புள்ளகுட்டி நீதான்னு
உள்ள அம்மா அவதான்னு
நல்ல காலம் நமக்குன்னு
சொல்லு ரெட்ட இலையின்னு.

வியாபாரமா எண்ணுவான்
விலைக்கு உன்ன வாங்குவான்.
ஏமாந்தாக் கொள்ளதான்
இருக்க மண்ணும் இல்லதான்.

அம்மா சொன்னா கேக்கணும்.
அவள மட்டும் நம்பணும்.
அம்மான்னா அம்மாதான்
அழுத்து ரெட்ட இலையத்தான்.

கொ.பெ.பி.அய்யா.


http://aiadmkpaadalkal.blogspot.in/


No comments:

Post a Comment