Tuesday 20 May 2014

இதுசத்தியம்.


இது சத்தியம்.

இரட்டை இலைக்கு ஒரு
சக்தி இருக்கு-.அம்மா
இரட்டை விரலுக்குள் ஒரு
வித்தை இருக்கு.
எம்ஜியார் சொன்னதிலும்
ஏதோ இருக்கு-அவர்
இன்றும் வாழ்வதாக
அர்த்தம் இருக்கு.

கண்ணில் கண்டதுமே
காந்தம் இழுக்கு.-வெற்றி
எம்ஜியார் என்றந்த
இரட்டை இலைக்கு.
எண்ணத்தில் வேறென்ன
சின்னம் இருக்கு?-என்றும்
மண்ணில் வேறென்ன
மாற்றம் இருக்கு?

பார்க்கும் இடம் எங்கும்
பச்சை இலைகள்-உண்மை
பாசத் தலைவனின்
நேச அலைகள் .
வண்ணம் போலவே
எண்ணம் நிலைகள்-என்றும்
சின்னம் வெல்லுது
இரட்டை இலைகள்.

விண்ணும் மண்ணும்
இருக்கும் மட்டும்—உயிர்
என்னும் இதயம்
துடிக்கும் மட்டும்
மனிதம் உலகினில்
வாழும் மட்டும்-எம்ஜியார்
இரட்டை இலைதான்
வெற்றி மட்டும்.


கொ.பெ.பி.அய்யா. கொ.பெ.பி.அய்யா. 

No comments:

Post a Comment