Sunday 4 May 2014

தாலாட்டு

தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ
அன்னக்கிளி கண்ணுறங்கு
ஊராரும் தூங்கிவிட்டார்
ஒருச்சாமம் ஆயிடுச்சு
உன்விழிகள் துஞ்சலியோ
உற்றதென்ன கண்மணியே.

கள்ளிப்பால் ஊட்டுவேனோ
கட்டித்தங்கம் ராசாத்தி!.
அள்ளிவீசிப் போடுவேனோ
அரசாள பிறந்தவளே!
காலம் கூடிக் கனியுதடி
கண்ணுறங்கு பொன் மகளே!.

பெண்ணாகப் பிறந்தோமென்று
பிஞ்சுக்கொடி கலங்காதே
கண்ணாலச் சந்தையெண்ணி
கவலைப்பட்டும் மயங்காதே
கல்விகற்று உயர்ந்துவிட்டால்
கால்தொழுவார் கண்ணுறங்கு!

வீரம்பெற்று பெண்களின்று
வித்தைகளும் கற்றுவிட்டார்
தீரமுற்றுப் பெண்களின்று
திசையெங்கும் வென்றுவிட்டார்..
பெண்ணடிமை  ஒழியுதம்மா
பெண்ணரசி கண்ணுறங்கு.

ஈழங்கூடி மலருதம்மா
இளந்தளிரே கண்ணுறங்கு!
நாளுங்கொடி உயருதம்மா
நன்மணியே கண்ணுறங்கு!
வேளையதும் வளருதம்மா
விடிகிறது கண்ணுறங்கு!

அம்மாவின் காலமிது 
எம்ஜியாரின் ஆட்சியிது.
உன்போலே பெண்ணாளும்
உண்மைப் பொற்காலமிது.
மண்ணாளப் பிறந்தவளே 
மாதரசி கண்ணுறங்கு.

பெண்ணாக பிறந்த உன்னை 
தன்னாக எண்ணிப் பொன்னே
என்ன நீ ஆக வேண்டும் 
அன்னையவள் ஆக்கிடுவாள்
எந்நாளும் இரட்டை இலை 
கண்ணே உன் காவலம்மா.

கொ.பெ.பி.அய்யா. 



No comments:

Post a Comment