Thursday 15 May 2014

வெற்றிக்கொடி

நாளையும் நமதுதான்.நாற்பதும் நமதுதான்.
------------------------------------------------------------------------
தமிழ் நாட்டின் தனிப்பெருங்கட்சி அஇஅதிமுக எனும் கருத்திற்கு யாரும் மாற்றுக்கருத்து கூறமுடியாது.இந்தத் தேர்தலில் நம்மை எதிர்த்து நிற்பவர்கள் நான்கு அணிகளாக இருந்தாலும்.அந்த நான்கு அணிகளின் ஒட்டு வங்கியை தனித்தனியே எழுதிப்பார்க்கும் பொழுது எந்த அணியின் ஒட்டு வங்கியின் சதவிகிதமும் நமது தனிப்பெரும் இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓட்டுவங்கியை மிஞ்சுவதாக இல்லை.நமது புள்ளி 43%சதவிகிதமாக இருக்கும் உச்சத்தில் மற்ற எதிர் அணிகளின் புள்ளி கள் முறையே 23%,21%,16%,5% என்ற நிலையில் நம்மை எட்டித் தொடமுடியாத தூரத்தில்தான் பின்தங்கிக் கிடக்கின்றன.ஆகவே வாக்குப்பதிவு அணைத்து வாக்குச்சாவடிகளிலும் நியாயமான முறையில்தான் நடந்திருக்கும் என்றால் ஏறத்தாழ லட்ச ஒட்டு வித்தியாசங்களில் நாற்பது தொகுதிகளிலும் நாம்தான் வெல்ல வேண்டும் என்பதுதான் தர்மம்.அப்படி இல்லாமல் ஒன்றிரண்டு குறையுமானால் எங்கேயோ ஏதோ தவறு நிகழ்ந்திருக்கலாம் என்றுதான் நாம் சமாதானம் ஆகிக்கொள்ளவேண்டியதுதான்.அல்லது சட்டப்படியான வேறு நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டியதுதான் வேறென்ன செய்யமுடியும்?
.
சரி!எது எப்படியோ அடுத்த பதினெட்டு மணி நேரமும் ஆண்டவனை வேண்டிக்கொண்டு நம்பிக்கையோடு காத்திருப்போம்.தர்மம் அவ்வளவு எளிதில் ஏமாந்துவிடாது.

நன்றி.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment