Tuesday 27 September 2016

இரட்டை இலைக்கே வாக்கு.

வாக்களிப்போம் இரட்டை இலைக்கே!

வாழ்வு செழிக்க ஆடு மாடு.
வசதி கொழிக்க பசுமை வீடு.
ஏழ்மை ஒழிக்க எல்லோர்க்கும் வேலை.
இரட்டை இலைக்கே வாக்களிப்போமே!

கல்லார் இல்லா காணும் நல்லாட்சி.
கற்றார் கற்போர் பேணும் நம்மாட்சி.
இல்லார் இல்லா ஏற்றம் அம்மாட்சி.
இரட்டை இலைக்கே வாக்களிப்போமே!

படிக்கும் மட்டும் படிப்பது உரிமை.
முடிக்கும் மட்டும் அம்மாதான் கடமை.
மடிக்கணினி சைக்கிள் மற்றெல்லாம் தந்த
இரட்டை இலைக்கே வாக்களிப்போமே!

பட்ட கடனெல்லாம் பாடெனத் தள்ளி
இட்ட பொருளெல்லாம் ஏலமின்றி மீட்டி
பட்ட விவசாயம் பாழ்மீட்டிக் காத்த
இரட்டை இலைக்கே வாக்களிப்போமே!

தாலிக்குத் தங்கம் தந்தவர் அம்மா.
ஏழைக்கு எல்லாம் கொடுத்தவர் அம்மா.
தொட்டில் குழந்தை திட்டம் கண்ட 
இரட்டை இலைக்கே வாக்களிப்போமே!

கவிஞர்.கொ.பெ.பி.அய்யா.

Friday 9 September 2016

கதம்பம்.

கிழிபடத்தான் வெளிநடப்பு.
வெளியிலென்ன கிடைக்குமென்று-தினம்
வெளிநடப்பு செய்யுந்துண்டு.
கிழிபடத்தான் வெளிநடப்போ—பாவம்
பலிகடா மக்கள்தானோ!
==============================

கர்ஜிக்கும் கண்ணகி.

முத்துப்பறல் தெறிக்கத்தான்-அந்த
ஒத்தைக்குரல் சிங்கந்தான்.
கர்ஜித்த கண்ணகிதான்-அந்தக்    
காட்சியின்று அம்மாதான்.
===================================

அச்சமென்ன துச்சாதானா?

கொச்சைமொழிக் கோமாளி-இழி
லட்சைக்கஞ்சா பேமானி!
அச்சமென்ன துச்சாதானா!—வா!வா!
வஞ்சந்தீர்க்க மிஞ்சமாட்டோம்.


பாடம் படிக்கத்தான்.

வகைமுறை தெரியாமத்தான்-ஒருவன்
வாய்த்ததைக் கோட்டைவிட்டான்.
ஆடுமுங்கள் கூட்டங்கூட-அந்தப்
பாடம் படிக்கத்தான்.




Saturday 3 September 2016

மக்கள் திலகம் நூறாம் ஆண்டு.

மக்கள் திலகம் நூறாம் ஆண்டு.

எங்கள் தங்கம் இதயக்கனி
அன்பே வாவா-இன்றும்
கொண்டாடும் நூறாம் ஆண்டும்
நம்நாடு பார்பார்!

மண்ணாண்ட மக்கள் திலகம்
மன்னாதி மன்னவா-இன்றும்
விண்ணாளும் வள்ளல் உலகம்
எந்நாளும் எம்நெஞ்சமே!.

சத்தியத்தாய் ராஜராஜ பாசமகனே
ஸ்ரீமுருகா தமிழழகா-இன்றும்
முத்தமிழின் குடும்பத் தலைவா
மூத்த தனையனே!

நேற்று இன்று நாளையென்றும்
வாழும் யோகியே-இன்றும்
மாற்றில்லை உன்னை வென்றும்
ஆள எம்மையே!

நாமென்றும் நாடென்றும் வாழ்ந்தவா
தாமொன்றும் நாடாமலே-இன்றும்
நானென்றும் யாரென்றும் நீயாகவே
தானென்றாய் அம்மாவே!

புரட்சியாம் புதுமையாம் பித்தனே
பிறவியாய்த் தமிழனே-இன்றும்
வரந்தந்தாய் வாரிசாய் அம்மாவை
நிரந்தரம் முதல்வரே!

வாழ்கிறாய் தமிழோடு வாழ்கவே!
ஆள்கிறாய் அம்மாவாய்-இன்றும்
நீள்கிறதும் என்றும் உனதரசே
வாழ்கநீ புகழாக!

கொ.பெ.பி.அய்யா.