Friday 27 April 2018

உன்னை நம்பித்தான்.

உன்னை நம்பித்தான்.

அம்மாவின் ஆருயிரே!
நம்பிக்கையின் வேர்நிகரே!
உன்னை நம்பித்தான்
தமிழ் தன்னை தேற்றுகிறது.

அம்மாவின் செல்வமே!
அன்னை வழி வெல்வமே!
கைகளை உயர்த்தி நீ
நம்பிக்கை ஊட்டுகிறாய்.
காலமும் உன் தோளில்
கனவுடன் தொடருதே!.

திசையெல்லாம் உன் பேச்சு
திரை பாடும் உன் வாழ்த்து.
தாய் வளர்த்த பிள்ளை நீ!
தமிழ் நிலத்தின் காவல் நீ!
செல்லமகன் உன்னை நம்பி
வல்ல தாய் கண்ணயர்ந்தாள்.

சதி செய்த கூட்டங்களை
விதி முடிக்க நீ இருக்க
கதியாக உந்தன் பக்கம்
கடலாக மக்கள் கூட்டம்.
வேராக அம்மா நிழல்
வினை முடிக்கத் துணை இருக்கும்.

கொ.பெ.பி.அய்யா.

Wednesday 25 April 2018

இலை துளிர்த்தது.

இலை துளிர்த்து இல்லம் செழிக்கட்டும்/.

இலை துளிர்த்து இல்லம் செழிக்கட்டும்
வளம் கொழித்து வாழ்வு மலரட்டும்.
நிலை உயர்ந்து நெஞ்சம் நிறையட்டும்
நலம் நிகழ்ந்து நாடு சிறக்கட்டும்.

உழவு பிழைத்து உரிமை நிலைக்கட்டும்
பழமை படித்து பசுமை தழைக்கட்டும்
நதிகள் இணைந்து நன்செய் விரியட்டும்.
விதிகள் திருந்தி வேளாண்மை திரும்பட்டும்.

இருளும் அகன்று பகலும் நின்றாகட்டும்.
மருளும் மடிந்து அருளும் கொண்டாகட்டும்..
வறுமை தகர்ந்து அருமை உண்டாகட்டும்.
பெருமை நுகர்ந்து சிறுமை சென்றாகட்டும்

காந்தி சொன்னதும் கனவில் வென்றாகட்டும்.
காட்சியில் கண்டதும்  நினைவில் கண்டாகட்டும்.
ஆழ்ந்த இரவிலும் அணிந்த கன்னியாகட்டும்
ஓய்ந்த தெருவிலும் உலாவலாம் என்றாகட்டும்.

ஆட்சி எம்ஜிஆர் மாட்சிமை அரணாகட்டும்.
ஆளுமை சீருமை பெற்றது வரமாகட்டும்..
பொற்கையன் ஆட்சிபோல் போற்றவும் சிறப்பாகட்டும்.
பெற்றதாய் நேர்த்திபோல் பெற்றதும் திறமாகட்டும்..

கொ.பெ.பி.அய்யா.