Wednesday 30 May 2018

பாரதச்செல்வி.

தமிழினத் தலைவி!
தனிநிகர் இறைவி!
ஊரது தமிழாம்!
நேரது செயலாம்!
பாரதச் செல்வி!
பேரது அம்மா!

அம்மா என்றே
தம்புகழ் கொண்டே
இம்மா நிலமே
செம்மாந்த தரமே.
தாய்வழி ஆட்சி
தமிழகம் தொடரும்.

மக்களின் நம்பிக்கை
மண்ணாண்ட அம்பிகை
தக்கோலம் தமிழிடம்
எக்காலும் சத்தியம்.
அம்மாவே கூறும்
ந்ம்மாளே ஆளும்.

கொ.பெ.பி. அய்யா

Sunday 13 May 2018

அம்மா படை!

அம்மா படை!

கிடுகிடுங்குது நடுநடுங்குது-பூமி
மொடுமொடுங்குது அதிர்ந்து.
மடை திறந்தது அலை தொடர்ந்தது-அம்மா
படை நெருங்குது நிறைந்து.

படபடங்குது தட தடங்குது-எதிரி
தொடை நடுங்குது பயந்து .
மனம் மகிழ்ந்தது பலம் உயர்ந்தது-அம்மா
களம் விரிந்தது நிமிர்ந்து.

கலகலக்குது விலுவிலுக்குது-துரோகம்
நிலைகுலையுது தலை தாழுது.
இரதமேறுது வலம்ஊறுது- அம்மா
விதமாகுது இயக்கம் நிலைத்து .

இடிஇடிக்குது மினுமினுக்குது-வானம்
புகழ் முழக்குது வியந்து.
கொடி ஏறுது தமிழ் வாழ்த்துது-அம்மா
விடி வெள்ளி பார்த்து.

கொ.பெ.பி. அய்யா.