நல்ல வேளை.
நல்ல வேளை எம்ஜியாரை
கண்டு கொண்டோமோ!.
இல்லை யெனில் நாடு என்ன
ஆகும் கண்டமோ!!
அள்ளிக் கொள்ளை தானேன்னு
அடித்திருப்பாரோ!-ஐயோ
கொள்ளிக் குடம் அந்நாளே
உடைத் திருப்பாரோ!
சரியான நேரம் எம்ஜியாரை
கண்டு கொண்டாமோ!--பூமி
சரித்திரத்தில் தமிழ் நாட்டை
வென்றெடுத்தோமோ!
நிரந்தரமாய் தமிழர் புகழ்
நிலைத்திருக்கவே—தர்மம்
நிறை அம்மாவை எம்ஜியார்
தெரிந்தெடுத்தாரோ!
நினைக்கும் பொழுதே நெஞ்சம்
எல்லாம் பதற்றமாகுதே!--கொஞ்சம்
எம்ஜியார் அசந்திருந்தால்
என்ன கதி நேர்ந்திருக்குமோ!
விசக்கிரிமி பரவி மோசம்
ஆகிருப்போமோ!-–ஐயோ
விடியாத இருளுக்குள்ளே
துடிச்சிருப்போமோ!
விடிஞ்சதையும் அடைஞ்சு போக
ஊதிப் பாத்தாங்க--கதை
முடிஞ்சாருன்னு பழையபடி
நுழைய வந்தாங்க.
அம்மா யாரு எம்ஜியாரு
தேர்ந்த பேருங்க—நம்மை
அம்மா தெய்வம் போல
காத்து வாராங்க.
கொ.பெ.பி.அய்யா.