Monday 29 October 2018

கனவு கண்டேன்.

கனவு கண்டேன்.

கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன்-அம்மா
கனவு நிறைவேறி வர
கனவு கண்டேன் நான்
கனவு கண்டேன். (கனவு)

தமிழன் தலை நிமிர்ந்து எழ
கனவு கண்டேன் அவன்
தலைமை அமர்ந்த உலகை
கனவு கண்டேன்.
அஞ்சி எவர் முன்னும் இனி
கெஞ்சியும் தொங்கும் இழி
ஒஞ்சும் கொடுமை ஒழிய
கனவு கண்டேன்(கனவு)
                   
ஏழ்மை என்னும் தாழ்மை
கீழ்மை என்பார் இல்லா
எல்லாம் சமமாய் மேன்மை
கனவு கண்டேன்.
நதிகள் கைகள் கோர்த்தோடி
நாடும் பசுமை போர்த்தியாடி
தொழில்கள் மையம் தமிழகமாய்
கனவு கண்டேன்(கனவு)
                   
ஆணும் பெண்ணும் பேதமில்லை
பேணும் உரிமை வாதமில்லை
தோணும் எண்ணம் சகோதரமாய்
கனவு கண்டேன்.
மனிதம் என்ற சொல்லுக்கு
புனிதம் தந்த அன்னைக்கு
உலகம் போற்றி வாழ்த்தவே
கனவு கண்டேன்(கனவு)
                   
கொ.பெ.பி.அய்யா.

Saturday 6 October 2018

காவிரித்தாய்.

காவிரித்தாய்.

தமிழகம் தலை நமிர்ந்தது.

தமிழக  அரசே-
நின்

தன்னிகரில்லா தன்மானம்

வென்றது.
இனி

காவிரித்தாய் கரை

நிறப்பி வருவாள்.

அரசிதழ் வெளியீடு

அபாரச் சாதனை.

காவிரி மேலாண்மை

தேவைக்குத் தீர்வு செய்யும்.-

பெரும்

முயற்சிகளே

திருவினையாச்சு.

நஞ்சை நனையட்டும்.

நாடு செழிக்கட்டும்.

தஞ்சை சேறானால்தான்

தமிழுக்குச் சோறுண்டு.

வேளாண்மை வாழட்டும்.

விலைவாசி குறையட்டும்.

தமிழகமே
இன்று நீ

தலை நிமிர்ந்தாய்.

அம்மா என்றால் சும்மாவா!

அசத்தி விட்டாயம்மா.

பின்னி விட்டாயம்மா.

பிறந்த நாள் பரிசாக.

வாழ்க நீ பல்லாண்டு.    

கொ.பெ.பி.அய்யா.     

Tuesday 2 October 2018

இலை துளிர்த்து இல்லம் செழிக்கட்டும்.

இலை துளிர்த்து இல்லம் செழிக்கட்டும்.

இளம் துளிர்த்து இல்லம் செழிக்கட்டும்/.

இலை துளிர்த்து இல்லம் செழிக்கட்டும்
வளம் கொழித்து வாழ்வு மலரட்டும்.
நிலை உயர்ந்து நெஞ்சம் நிறையட்டும்
நலம் நிகழ்ந்து நாடு சிறக்கட்டும்.

உழவு பிழைத்து உரிமை நிலைக்கட்டும்
பழமை படித்து பசுமை தழைக்கட்டும்
நதிகள் இணைந்து நன்செய் விரியட்டும்.
விதிகள் திருந்தி வேளாண்மை திரும்பட்டும்.

இருளும் அகன்று பகலும் போன்றாகட்டும்.
மருளும் மடிந்து அருளும் தோன்றட்டும்.
வறுமை தகர்ந்து அருமை ஊன்றட்டும்.
பெருமை நுகர்ந்து சிறுமை மாண்டாகட்டும்

காந்தி சொன்னதும் கனவில் வென்றாகட்டும்.
காட்சியில் கண்டதும்  நினைவில் நின்றாகட்டும்.
ஆழ்ந்த இரவிலும் அணிந்த கன்னியாகட்டும்
ஓய்ந்த தெருவிலும் உலாவலாம் என்றாகட்டும்.

ஆட்சித் திறனதும் மாட்சிமை அரணாகட்டும்.
ஆளுமை உரம்கண்டு அற்றது பயமாகட்டும்..
பொற்கையன் ஆட்சிபோல் போற்றவும் சிறப்பாகட்டும்.
பெற்றதாய் நேர்த்திபோல் பெற்றதும் வரமாகட்டும்..

கொ.பெ.பி.அய்யா.