Saturday 12 November 2016

ஏழையில்லா தமிழ் நாடு

ஏழையில்லா தமிழ்நாடு நோக்கி..........(1)

ஏழைக்கான அரசு.

“நல்ல விளக்குக்கு வெளிச்சம்.
நல்ல வயலுக்கு விளைச்சல்.
நல்ல ஆட்சிக்கு மக்களின் நிம்மதி”.எனும் அறிஞர்.அண்ணாவின்
தாரக மந்திரத்தின் முனைப்போடும்
“பசி பிணி பகை இல்லாதிருப்பது நல்லநாடு”.எனும் வான்புகழ்
வள்ளுவனின் இலட்சிய நோக்கோடுந்தான்,
தமிழக மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்யும் விதமாகத்தான் எனது தலைமையிலான கழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வெறும் பொருளாதார வளர்ச்சியாக மட்டும் பார்க்காமல் நாட்டின் முன்னேற்றத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சியையும் மேம்படுத்தி சமுதாய அடித்தட்டில் வாழும் ஒவ்வொரு ஏழையையும் சென்றடையும் விதமாகத்தான் கழக அரசு என்பது ஏழைகளுக்கான அரசாகவும்,ஒடுக்கப்பட்ட மக்களைப் பாதுகாத்து கைதூக்கிவிடும் அரசாகவும் எனது தலைமையில் சீராக செயல்பட்டு வருவதை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் வெளியில் உண்மைக்குப் புறம்பாகப் பேசிவருகிறார்கள்.இதை அறிவார்ந்தவர்கள் நம்ப மாட்டார்கள்.

-------------------------------------------------------------------------------------------------------------- 
ஏழையில்லா தமிழ்நாடு நோக்கி..........(2)

ஆரோக்யமான வளர்ச்சி.(கல்வி)

அமைதி,வளம்,ஆரோக்யமான வளர்ச்சி என்பதுதான் எனது தாரக மந்திரம்.ஒரு மாநிலம் அது தனது ஆரோக்யமான போக்கில் வளமான பொருளாதார வளர்ச்சியை எட்டி மக்களின் வாழ்வில் அமைதியை நிலைப்படுத்த வேண்டுமானால்  அந்த நாட்டு மக்கள் கல்வியிலும்,உடல் நலத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதும் இன்றியமையாததாகும்.அப்படிப்பட்ட வளர்ச்சித்தான் நாட்டின் சமுதாய வளர்ச்சிக் குறியீட்டை நிர்ணயிக்கும்.சமுதாய வளர்ச்சிக்க்குறியீட்டின் வேகத்தைப் பொறுத்துத்தான்
சமுதாய ஏற்றத்தாழ்வுகள் என்றநிலை மாறி எல்லோரும் எல்லாமும் பெறமுடியும்.அப்போத்துதான் “எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் நிலை”எனும் குறிக்கோளை நாம் எய்த இயலும்  என்பதால்தான் எனது தலைமையிலான அரசு கல்விக்கும் உடல்நலத்திற்கும் முக்கியத்வம் தந்து குறிப்பாக கல்விக்கு மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 84,568 கோடிரூபாய் ஒதுக்கீடு செய்ததது.ஆனால் தி.மு.க அதன் ஆட்சிக்காலத்தில் கல்விக்காக செலவிட்டது 39,058 கோடி ரூபாய்தான் என்பதையும் நான் இங்கே குறிப்ப்பிட்டுச்சொல்கிறேன்.எனவேதான்தொடக்கக்கல்வி,நடுநிலைக்கல்வி,இடைநிலைக்கல்வி,மேனிலைக்கல்வி.என அனைத்து நிலைகளிலும் மாணவர் சேர்க்கைவிகிதம் வெகுவாக நிறைந்தும் இடைநிற்றல் விகிதம் கணிசமாகக் குறைந்தும் உள்ளது என்பதும் நாம் பெருமைப்படவேண்டிய அம்சமாகும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஏழையில்லா தமிழ்நாடு நோக்கி..........(3)

கல்லாமை இல்லாமை.
கல்விப்பருவ மாணவக் குழந்தையை கட்டாயப்படுத்தி பள்ளிக்கு அனுப்பி வைப்பதை விட அக்குழந்தைக்கு பள்ளியின் மீது ஈர்ப்பினை உருவாக்கி அக்குழந்தை தானாகவே பள்ளிக்கு செல்லும் விருப்பத்தையும் கல்விகற்கும் ஆர்வத்தையும் தூண்டும்விதமாகவே கல்விகற்கும் குழந்தைக்குத் தேவையான விலையில்லா பாடப்புத்தகங்கள் ,விலையில்லா பைக்கூடு,இரண்டு சோடி சீருடைகள்,காலணிகள்,கணிதப்பெட்டி,பென்சில்,பேனா,எழதுபலகை,முதலிய கல்விக்கான கருவிகள் தொடக்கம் மற்றும் நடுநிலைக்கல்வி நிலைகளிலும் மேலும் தொடர்ந்து மேல்நிலைக்கல்விக்கு வரும்பொழுது சைக்கிள் ,மடிக்கணினியும் விலையின்றி வழங்குவதோடு ஐயாயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. மேலும் புத்தம்புதிய பள்ளிக்கட்டிடங்கள்,காற்றோட்டமான வகுப்பறைகள்,கணினி வசதிகள்,மாணவியர்க்கு சுகாதாரமான தனிக்கழிப்பிட வசதிகள்,விளையாட்டு மைதானங்கள்,முதலிய அனைத்து வசதிகளுடன்கூடிய தனியார்பள்ளிகளுக்கு இணையான உட்கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளது.மேலும ஆங்கில வழிக் கல்வியும் கற்பிக்கப்படுகிறது.எனவேதான் நாம் மேனிலைக் கல்வியில் முதன்மை பெற்ற மாநிலமாகத் திகழ்கிறோம் என்று எண்ணும் போது நமக்குப் பெருமையாக உள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------



Saturday 22 October 2016

அம்மா அம்மா!

அம்மா அம்மா அன்பே அம்மா
அன்பே தெய்வம் அம்மா அம்மா.
அம்மா அம்மா பாசம் அம்மா
பாசம் பக்தி அம்மா அம்மா.

அம்மா அம்மா மொழியே அம்மா.
மொழியும் தமிழே அம்மா அம்மா.
அம்மா அம்மா குருவே அம்மா
அறியும் உலகே அம்மா அம்மா.

அம்மா அம்மா நீயே அம்மா
அநாதை ஏது அம்மா அம்மா.
அம்மா அம்மா கருணை அம்மா
ஆதி சக்தி அருளே அம்மா.

ஏழை இல்லா தமிழ்நாடு அம்மா.
வேலை இல்லார் இல்லை அம்மா
பசியே இல்லா தமிழகம் அம்மா.
பசுமை வாழ்வு வளமை அம்மா.

அமைதி பூங்கா நாடே அம்மா.
அகிலம் வியக்கும் ஆட்சி அம்மா.
தீவிரவாதம் தீர்த்தாய் அம்மா.
பாவியர் தீதும் தூர்த்தாய் அம்மா.

கவிஞர்.கொ.பெ.பி.அய்யா.

.







Tuesday 27 September 2016

இரட்டை இலைக்கே வாக்கு.

வாக்களிப்போம் இரட்டை இலைக்கே!

வாழ்வு செழிக்க ஆடு மாடு.
வசதி கொழிக்க பசுமை வீடு.
ஏழ்மை ஒழிக்க எல்லோர்க்கும் வேலை.
இரட்டை இலைக்கே வாக்களிப்போமே!

கல்லார் இல்லா காணும் நல்லாட்சி.
கற்றார் கற்போர் பேணும் நம்மாட்சி.
இல்லார் இல்லா ஏற்றம் அம்மாட்சி.
இரட்டை இலைக்கே வாக்களிப்போமே!

படிக்கும் மட்டும் படிப்பது உரிமை.
முடிக்கும் மட்டும் அம்மாதான் கடமை.
மடிக்கணினி சைக்கிள் மற்றெல்லாம் தந்த
இரட்டை இலைக்கே வாக்களிப்போமே!

பட்ட கடனெல்லாம் பாடெனத் தள்ளி
இட்ட பொருளெல்லாம் ஏலமின்றி மீட்டி
பட்ட விவசாயம் பாழ்மீட்டிக் காத்த
இரட்டை இலைக்கே வாக்களிப்போமே!

தாலிக்குத் தங்கம் தந்தவர் அம்மா.
ஏழைக்கு எல்லாம் கொடுத்தவர் அம்மா.
தொட்டில் குழந்தை திட்டம் கண்ட 
இரட்டை இலைக்கே வாக்களிப்போமே!

கவிஞர்.கொ.பெ.பி.அய்யா.

Friday 9 September 2016

கதம்பம்.

கிழிபடத்தான் வெளிநடப்பு.
வெளியிலென்ன கிடைக்குமென்று-தினம்
வெளிநடப்பு செய்யுந்துண்டு.
கிழிபடத்தான் வெளிநடப்போ—பாவம்
பலிகடா மக்கள்தானோ!
==============================

கர்ஜிக்கும் கண்ணகி.

முத்துப்பறல் தெறிக்கத்தான்-அந்த
ஒத்தைக்குரல் சிங்கந்தான்.
கர்ஜித்த கண்ணகிதான்-அந்தக்    
காட்சியின்று அம்மாதான்.
===================================

அச்சமென்ன துச்சாதானா?

கொச்சைமொழிக் கோமாளி-இழி
லட்சைக்கஞ்சா பேமானி!
அச்சமென்ன துச்சாதானா!—வா!வா!
வஞ்சந்தீர்க்க மிஞ்சமாட்டோம்.


பாடம் படிக்கத்தான்.

வகைமுறை தெரியாமத்தான்-ஒருவன்
வாய்த்ததைக் கோட்டைவிட்டான்.
ஆடுமுங்கள் கூட்டங்கூட-அந்தப்
பாடம் படிக்கத்தான்.




Saturday 3 September 2016

மக்கள் திலகம் நூறாம் ஆண்டு.

மக்கள் திலகம் நூறாம் ஆண்டு.

எங்கள் தங்கம் இதயக்கனி
அன்பே வாவா-இன்றும்
கொண்டாடும் நூறாம் ஆண்டும்
நம்நாடு பார்பார்!

மண்ணாண்ட மக்கள் திலகம்
மன்னாதி மன்னவா-இன்றும்
விண்ணாளும் வள்ளல் உலகம்
எந்நாளும் எம்நெஞ்சமே!.

சத்தியத்தாய் ராஜராஜ பாசமகனே
ஸ்ரீமுருகா தமிழழகா-இன்றும்
முத்தமிழின் குடும்பத் தலைவா
மூத்த தனையனே!

நேற்று இன்று நாளையென்றும்
வாழும் யோகியே-இன்றும்
மாற்றில்லை உன்னை வென்றும்
ஆள எம்மையே!

நாமென்றும் நாடென்றும் வாழ்ந்தவா
தாமொன்றும் நாடாமலே-இன்றும்
நானென்றும் யாரென்றும் நீயாகவே
தானென்றாய் அம்மாவே!

புரட்சியாம் புதுமையாம் பித்தனே
பிறவியாய்த் தமிழனே-இன்றும்
வரந்தந்தாய் வாரிசாய் அம்மாவை
நிரந்தரம் முதல்வரே!

வாழ்கிறாய் தமிழோடு வாழ்கவே!
ஆள்கிறாய் அம்மாவாய்-இன்றும்
நீள்கிறதும் என்றும் உனதரசே
வாழ்கநீ புகழாக!

கொ.பெ.பி.அய்யா.


Wednesday 24 August 2016

கதம்பம்2

கிழிபடத்தான் வெளிநடப்பு.

வெளியிலென்ன கிடைக்குமென்று-தினம்
வெளிநடப்பு செய்யுந்துண்டு.
கிழிபடத்தான் வெளிநடப்போ—பாவம்
பலிகடா மக்கள்தானோ!
==============================

கர்ஜிக்கும் கண்ணகி.

முத்துப்பறல் தெறிக்கத்தான்-அந்த
ஒத்தைக்குரல் சிங்கந்தான்.
கர்ஜித்த கண்ணகிதான்-அந்தக்
காட்சியின்று அம்மாதான்.
===================================

அச்சமென்ன துச்சாதனா?

கொச்சைமொழிக் கோமாளி-இழி
லட்சைக்கஞ்சா பேமானி!
அச்சமென்ன துச்சாதனா!—வா!வா!
வஞ்சந்தீர்க்க மிஞ்சமாட்டோம்.
===================================

பாடம் படிக்கத்தான்.

வகைமுறை தெரியாமத்தான்-ஒருவன்
வாய்த்ததைக் கோட்டைவிட்டான்.
ஆடுமுங்கள் கூட்டங்கூட-அந்தப்
பாடம் படிக்கத்தான்.
=====================================

Thursday 4 August 2016

வயக்காட்டு பொம்மைகள்.

வயக்காட்டு பொம்மைகள்.

குழுக்கள் ஏதும் எமக்குள் இல்லை.
பலமே எல்லாம் அம்மா தில்லே!
எதிர்க்கும் இலக்கில் எதிரிகள் எவரே!
சிலிர்க்கும் வியர்வை உதிரிகள் அவரே!

வயக்காட்டு பொம்மைகள் பயங்காட்டும் வேலை
பயக்காது அம்மா படைமுன் வீணே!
நரிஊளைக் கூச்சல் இழிகோழை வாய்ச்சொல்.
நெறியாளும் அம்மாமுன் தெறித்தோடும் ஈசல்.

பதினெட்டுக் கணக்கு எத்தனைநாள் உம்மோடு?
மதிகெட்ட பிணக்கும் விதிவழி உம்கேடு.
பண்பற்ற செயல்முறை பாழான பாடமும்
படிப்பதும் நடைமுறை பயிற்றும் காலமும்..

எதிர்க்கவும் பலமுண்டு என்றும்நீ நம்பினால்
சதிக்கென்ன கதியுண்டு சரித்திரம் புரட்டினால்.
பொய்யான சிரிப்பாலே மெய்யழிந்து போகாது.
செய்யாத தரிசாலே சீர்தரலாகாது.

கவிஞர்கொ.பெ.பி.அய்யா.

Wednesday 13 July 2016

பாலாறு கட்டுரை.

பாலாறு பிரச்சனை மாண்புமிகு முதல்வரம்மா விளக்கம்.

காவேரி நதிநீர், முல்லைப்பெரியாறு அணை பிரச்னைகளில் தமிழ்நாட்டின் உரிமைகள் தம்மால் எவ்வாறு நிலைநாட்டப்பட்டதோ, அதேபோன்று, பாலாறு நதிநீர் பிரச்னையிலும் தமிழகத்தின் உரிமைகள் நிச்சயம் நிலைநாட்டப்படும் என மாண்புமிகு தமிழக முதல்வரம்மா  உறுதிபடத் தெரிவித்துள்ளார். பாலாறு நதிநீர் பிரச்னை குறித்து, ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, எவ்வித நடவடிக்கையும் எடுக்காத கருணாநிதி, ஆட்சி அதிகாரத்தையும், மக்கள் செல்வாக்கையும் முற்றிலும் இழந்த சூழ்நிலையில் அதுபற்றி அறிக்கை வெளியிட்டிருப்பது தமிழக மக்களை முற்றிலும் ஏமாற்றும் செயல் என கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் ; தமிழக மக்கள், கருணாநிதியை இனி எக்காலத்திலும் நம்பத் தயாராக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 

தமிழகத்தின் விடிவெள்ளி அம்மா அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது, உறவுக்கு கை கொடுப்பதும், ஆட்சி அதிகாரம் இல்லாத போது, உரிமைக்கு குரல் கொடுப்பது போல் நடிப்பதும் தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதிக்கு கை வந்த கலை என்றும், அந்த வகையில், ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடவோ, முல்லைப் பெரியாறு பிரச்சனையில் தமிழக நலன்களை பாதுகாக்கவோ, நடவடிக்கைகள் எதையும் எடுக்காத திரு. கருணாநிதி, ஆட்சி அதிகாரத்தையும், மக்கள் செல்வாக்கையும் முற்றிலும் இழந்த சூழ்நிலையில், தற்போது பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது குறித்து அறிக்கை வெளியிட்டு இருப்பது கேலிக்கூத்தாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 

“முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது” என்ற பழமொழிக்கேற்ப, பாலாற்றின் குறுக்கே தடுப்பணை என்ற ஆந்திரப் பிரதேச அரசின் அத்துமீறிய செயலை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று, அங்கு தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்தியதே தமது தலைமையிலான அரசுதான் என்பதை முற்றிலும் மறைத்து விட்டு, இந்தப் பிரச்சனையில் தான் ஏதோ மிகப் பெரிய சாதனையை செய்துள்ளது போல் தனது அறிக்கையில் தன்னை சித்தரித்துக் கொண்டிருக்கிறார் திரு. கருணாநிதி – திரு. கருணாநிதியின் அறிக்கை, தான் இன்னமும் அரசியலில் இருக்கிறேன் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக விடுக்கப்பட்ட அரசியல் ஆதாயம் தேடும் அறிக்கை போல் தான் அமைந்துள்ளது என முதலமைச்சர் அம்மா குற்றம்சாட்டியுள்ளார். 

இந்தச் சூழ்நிலையில், பாலாறு நதிநீர்ப் பிரச்சனை குறித்த உண்மை நிலையை விளக்குவது தமது கடமையென கருதுவதாக குறிப்பிட்டுள்ள முதல்வரம்மா அவர்கள், பன்மாநிலங்களுக்கிடையே பாயும் நதிகளில் ஒன்றான பாலாறு, கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகி, ஆந்திர மாநிலம் சித்தூர் வழியாகவெறும் நாற்பத்தைந்து கி.மீ தூரம் மட்டும் ஓடி, தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மாவட்டத்தில் நுழைந்து, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக ஏறத்தாழ இருநூற்று இருபத்து இரண்டு கி.மீ.தூரம் அதாவது தமிழகத்தில்தான் வெகுதூரம் ஓடி  வங்காள விரிகுடாவில் கலப்பதாகத் தெரிவித்துள்ளார். 

1892-ஆம் ஆண்டைய சென்னை-மைசூர் ஒப்பந்தத்தின் அட்டவணை ‘A’-வில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் 15 முக்கிய நதிகளில் பாலாறும் ஒன்றாகும்- இந்த ஒப்பந்தத்தின்படி, மேற்பகுதியில் உள்ள மாநிலங்கள் கீழ்ப்பகுதியில் உள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல் புதிய அணை கட்டவோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானங்களையோ, அல்லது நீரைத் திருப்புவதற்கும், நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

சித்தூர் மாவட்டத்தில் குப்பம் என்னும் பகுதிக்கு அருகே பாலாற்றின் குறுக்கே 2 TMC அடி நீரைத் தேக்கும் வகையில் ஓர் அணையினை ஆந்திரப் பிரதேச அரசு கட்ட இருப்பதாகவும், அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன எனவும் தகவல்கள் செய்தித் தாள்களில் தமது ஆட்சிக் காலத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி வெளிவந்தவுடன், அடுத்த நாளே 1892 ஆம் ஆண்டைய ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி, பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி ஆந்திரப் பிரதேச முதலமைச்சருக்கு விரிவான கடிதம் ஒன்றை அன்றைய தமிழக முதலமைச்சராக இருந்த தாம் எழுதியதையும் முதல்வரம்மா  சுட்டிக்காட்டியுள்ளார். 

இதன் தொடர்ச்சியாக, கடந்த 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ம் தேதியன்று மத்திய நீர் வளத் துறை அமைச்சகத்திற்கும் ஒரு கடிதம் தமது அரசால் அனுப்பப்பட்டது – அந்தக் கடிதத்தில் 1892-ஆம் ஆண்டைய ஒப்பந்தத்தின்படி, ஆந்திரப் பிரதேசத்தின் வழியாக பன் மாநிலங்களுக்கு இடையே பாயும் நதியான பாலாற்றில் எந்த விதமான பாசனத் திட்டத்தையும் ஆந்திரப் பிரதேச அரசு நிறைவேற்றுவதை தடுத்து நிறுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது – தம்முடைய கடிதத்திற்கு ஆந்திர முதலமைச்சரிடமிருந்தோ அல்லது ஆந்திர அரசிடமிருந்தோ எவ்வித பதிலும் வராத சூழ்நிலையில், தமிழக மக்களின் நலன்களை காப்பதற்காக, பாலாற்றின் குறுக்கே அணை கட்ட திட்டமிட்டு இருக்கும் ஆந்திரப் பிரதேச அரசின் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமது முந்தைய ஆட்சிக் காலத்திலேயே, வழக்கு தொடரப்பட்டது – தாம் 2006-ஆம் ஆண்டு ஆட்சியில் இருக்கும் வரை, ஆந்திர அரசு இந்தத் திட்டத்தை தொடங்கவில்லை என்றும் அம்மா அவர்கள் வெகு அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார். 

கடந்த 2006-ஆம் ஆண்டுக்கு பின்னர் போதாத காலமாக, தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினை அடுத்து, மைனாரிட்டி தி.மு.க அரசு திரு. கருணாநிதி தலைமையில் அமைந்த பின், ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் பிரச்சனையை அவ்வப்போது எழுப்பி வந்தது – அத்துடன் திட்டம் குறித்த வடிவமைப்பை தயார் செய்யும் நடவடிக்கையையும் எடுத்தது – அதனை அப்போதைக்கப்போதே, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தாம் சுட்டிக்காட்டி, இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசை தாம் வலியுறுத்தியதையும் தமிழக நிரந்தர முதல்வரம்மா அடித்துக் கூறியுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், 2009-ஆம் ஆண்டு ஜூலை மாதம், பாலாற்றின் குறுக்கே குப்பம் பகுதியை அடுத்த கணேசபுரத்தில் தடுப்பு அணை கட்ட வசதியாக, அந்தப் பகுதியில் மின்சார நிலையம் அமைக்கப்பட்டு உள்ளதாகவும்; தார்ச்சாலை போடப்பட்டு உள்ளதாகவும்; அணை கட்டும் பகுதியில் பாறைகளின் தன்மைகளை கண்டறியும் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும்; முதல்கட்டமாக கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும்; இது குறித்த தகவல்கள் தமிழ்நாடு அரசின் பொதுப் பணித் துறைக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன – அப்போது, மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திரு. கருணாநிதி, இதைப் பற்றி ஆந்திர அரசைஏன் தட்டிக் கேட்கவில்லை என்றும்  முதல்வரம்மா ஆணித்தரமாக குற்றம் சாட்டியுள்ளார். 

தமிழ்நாட்டில் 2006 முதல் 2011 வரையிலும், மத்தியில் 2013 வரையிலும் ஆட்சியிலிருந்த தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதி, இந்தப் பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் மூலம் விரைந்து தீர்வு காணவோ; அல்லது அப்போது மத்திய அரசில் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவோ எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை – தாம் மூன்றாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 16-ம் தேதி பொறுப்பேற்ற பிறகு, உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி, மத்திய அரசின் நீர்வளத் துறை செயலாளரால் அதே ஆண்டு மே மாதம் 26-ம் தேதி கூட்டப் பெற்ற கூட்டத்தில், தமது உத்தரவின் பேரில் ஆந்திரப் பிரதேச மாநிலப் பகுதியில் பாலாற்றில் எவ்விதமான புதிய திட்டத்தையும் ஆந்திர அரசு மேற்கொள்ளக் கூடாது என தமிழக அரசின் சார்பில், ஆணித்தரமாக எடுத்துரைக்கப்பட்டது – இதனைத் தொடர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கை, தாம் டெல்லி சென்று சந்தித்து, பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட உத்தேசித்துள்ள திட்டத்தை மேற்கொள்ளக் கூடாது என ஆந்திர மாநில அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டதையும் முதலமைச்சர் பட்டவர்த்தனமாக விளக்கம் கேட்டார்.. 

இதனையடுத்து, கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, இரு மாநிலங்களும் தங்களது வாதங்களில் உள்ள நியாயத்தை எடுத்துரைக்கும் வகையில், சாட்சிகளை நியமித்துள்ளன – தமிழ்நாடு அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட சாட்சியிடம் தற்போது குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது – அடுத்த குறுக்கு விசாரணைக்கான நாள், வரும் ஜூலை மாதம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது – இரு மாநிலங்களைச் சார்ந்த சாட்சிகளின் குறுக்கு விசாரணை முடிந்த பிறகு, தமிழ்நாடு அரசு, ஆந்திரப் பிரதேச அரசு மற்றும் மத்திய அரசு ஆகியவற்றின் வாதங்களை கேட்டறிந்து, அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

இந்தச் சூழ்நிலையில், ஆந்திரப் பிரதேச மாநிலம் குப்பத்தில், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அறிவித்து இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன – இந்தப் பிரச்சனை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலும்; பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டக் கூடாது என்று மத்திய நீர்வள ஆணையம் ஆந்திர பிரதேச அரசுக்கு அறிவுறுத்தியுள்ளதாலும்; பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது என்பது சாத்தியமற்ற செயல்- எனினும், இந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளிவந்த உடனேயே, அரசு உயர் அதிகாரிகளுடன் தாம் இதுகுறித்து ஆலோசித்ததாகவும், தமது அறிவுரையின்படி, தமிழ்நாடு அரசால் தொடரப்பட்டுள்ள வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கும் வரை, அங்கு எந்தத் திட்டத்தையும் மேற்கொள்ளக் கூடாது என ஆந்திரப் பிரதேச அரசுக்கு அறிவுரை வழங்குமாறு, மத்திய அரசுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கடந்த 20-ம் தேதியே கடிதம் எழுதியுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

இந்தப் பிரச்சனையை தாம் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், காவேரி நதிநீர்ப் பிரச்சனையிலும், முல்லைப் பெரியாறு நதிநீர்ப் பிரச்சனையிலும், எப்படி தமிழ்நாட்டின் உரிமை தம்மால் நிலைநாட்டப்பட்டதோ, அதே போன்று பாலாறு நதிநீர்ப் பிரச்சனையிலும் தமிழ்நாட்டின் உரிமை நிலை நாட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளார். 

பாலாறு நதிநீர்ப் பிரச்சனை குறித்த தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதியின் அறிக்கை, ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது “கோட்டை விட்டுவிட்டு,” ஆட்சி அதிகாரத்தை இழந்த சூழ்நிலையில், எதையோ நினைத்து “மனக்கோட்டை” கட்டுவது போல் அமைந்துள்ளது – திரு. கருணாநிதியின் மற்ற அறிக்கைகளைப் போலவே, இந்த அறிக்கையும் தமிழக மக்களை ஏமாற்றும் செயல் என்றும், திரு. கருணாநிதியை இனி எக்காலத்திலும் நம்பத் தமிழக மக்கள் தயாரில்லை என்றும் தமிழகத்தின் நிரந்தர முதல்வரம்மா தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Wednesday 29 June 2016

கட்டுரை

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகு

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகு அதே போன்ற ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை தமிழக அம்மா  தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்கியுள்ளார்கள். அம்மா என்றும் மக்கள் பக்கம் தான், மக்கள் என்றும் அம்மா பக்கம் தான் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. அம்மா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தியுள்ளது.
அதற்கு மக்கள் அளித்த அங்கீகாரம் தான் இந்த தேர்தல் வெற்றி. தி.மு.க ஊடகங்கள் வாயிலாகவும், பிரச்சாரங்கள் மூலமும் பல்வேறு பொய்களை கட்டவிழ்த்துவிட்டனர். அவர்களது பொய் குற்றசாட்டுகளை மறுத்து விளக்கங்களை அளித்தாலும், அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், கோயபல்ஸ் பாணியில் தாங்கள் சொன்ன பொய்களை திரும்ப திரும்ப சொல்லி வந்தனர். அம்மா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசை பற்றி கற்பனை குற்றசாட்டுகளை அள்ளி வீசினர். ஆனால், இவ்வாறெல்லாம் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என்பதை இந்த வெற்றியின் மூலம் தமிழக மக்கள் நிரூபித்துள்ளார்கள். தமிழக மக்களை, அதிலும் குறிப்பாக ஏழை, எளிய மக்களை காக்கும் இயக்கம் அ.தி.மு.க தான் என்பதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்த காரணத்தால் தான் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை அம்மாவுக்கு வழங்கியுள்ளார்கள்.
தேர்தல் நடைபெற்ற 232 சட்டமன்ற தொகுதிகளில் 134 இடங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை வெற்றி பெற செய்துள்ளார்கள். அம்மா மீது தளராத நம்பிக்கை வைத்துள்ள தமிழக மக்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை வழங்கியதற்காக அம்மாவின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியினை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மா ஏற்கெனவே சொல்லியதைப் போல தமிழக மக்கள் பால் அம்மாவுக்குள்ள நன்றியுணர்வை வெளிப்படுத்த அகராதியில் போதிய வார்த்தைகளே இல்லை. தமிழக மக்கள் நலனுக்காக அம்மா புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு தனது நன்றியை செயலில் காண்பிப்பார் என்ற உறுதியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தேர்தல் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு உழைத்த எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான, அம்மாவின் உயிரினும் மேலான அருமை கழக உடன்பிறப்புகளுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், தோழமை கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் அம்மாவின் சாட்சியாக நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

வரலாற்றைத் தீர்மானிப்பது மக்களே ! மக்களை முட்டாள்கள் என்று நினைப்பவர்கள்தான் முட்டாள்கள்! தமிழகத்தில் மக்களின் சமூக உளவியல் மிக வியப்பாக இருக்கிறது. சாதி, மதம், சினிமா ஆகியவை வேறு... அரசியல் வேறு என்று தெளிவாக இருக்கிறார்கள். ஒருவர் ஒரு நடிகரின் தீவிரமான ரசிகராக இருக்கலாம். ஆனால் அதற்காக அந்த நடிகரின் அரசியலை ஏற்றுக்கொள்பவராக இருக்கமாட்டார். திருமணம் போன்ற குடும்ப உறவுகளில் தனது சாதியை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் அதற்காகத் தேர்தல் அரசியலில் தனது சாதியின் பின்னால் சென்றுதான் ஆகவேண்டும் என்று நினைக்கமாட்டார். அதுபோன்றுதான் குறிப்பிட்ட மதத்தில் பற்றுடையவரும். இது வேறு .. அது வேறு என்று தெளிவாக மக்கள் இருக்கிறார்கள். எனவேதான் சாதிகளை அடிப்படையாகக்கொண்ட சில கட்சிகள் தாங்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்று கூறுவதை இன்று நாம் பார்க்கலாம். பிரபலமான நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்குப் பயப்படுவதும் அதனால்தான்!. மதத்தை அடிப்படையாகக்கொண்ட கட்சிகள் தாங்கள் அவ்வாறு இல்லை என்று காட்டிக்கொள்ள முயலுவதையும் பார்க்கலாம். இன்றைய தேர்தல் அரசியலில் மதம், சாதி, சினிமா ஆகியவற்றின் சில பாதிப்புகள் காணப்பட்டாலும், அவை பிரதானமான அம்சமாக இல்லை என்பதே உண்மை. ஆராயப்படவேண்டிய ஒரு சமூக உளவியல் அம்சம் இது!

இன்று நம் உயிரினும் மேலான அதிமுக தனிப்பெரும் கட்சியாக 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது என மகிழ்வான இந்த நேரத்தில் நம் கழகத்தின் முக்கிய நபர்கள் தோல்வியை தழுவியுள்ளனர். ஏன் இந்த தோல்வி என்பதை நாம் சுய பரிசோதனை செய்வது முக்கியமான ஒன்று. மக்கள் நல திட்டங்கள் என அம்மா அவர்கள் செய்த சாதனைகளையும் தேர்தல் அறிவிக்கையையும் கழக நிர்வாகிகளும் வேட்பாளர்களும் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. மேலும் பதவி வந்தவுடன் கர்வத்துடனும் தார்மீக நடவடிக்கையுடனும் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் தொண்டனை மதிக்காததும் தான் முதல் காரணம். மேலும் மாநகராட்சி மேயராக பதவி வகித்த சிலரும் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பலரும்  அம்மா அவர்கள் நல திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியினை பெற்றும் அந்த நல திட்டங்களை விரைந்து செய்யாததும் ஒரு காரணம்தான்.இன்னொன்றும் நான் சொல்லித்தான் ஆகவேண்டும்.உள்ளாட்சி உறுப்பினர்கள்  தங்கள் பகுதி மக்களிடம் நெருக்கமான அணுகுமுறை வைத்துக்கொள்வதற்கு பதிலாக அவர்களின் ஆதரவும் அனுகூலமும் இல்லாமல் நாம் மீண்டும் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இயலாதது என்பதை மறந்தும் தங்கள் கடமையை புறக்கணித்தும் முகம் சுளிக்கும் விதத்திலும் நடந்துகொண்டதும்தான் நகரப்பகுதிகளில் நடுநிலை மக்களின் ஆதரவை இழக்கக் காரணமாக அமைந்துள்ளது என்பதும் மறுப்பதற்கில்லை.ஆகவே இன்று மக்களின் எண்ணங்களில் இவ்வாறாக ஆட்சிக்கு அவப்பெயரை உருவாக்கும்இப்படிப்பட்ட எதிர்வினை உள்ளாட்சி அமைப்புகள் தேவைதானா எனற பொதுவான கருத்தும் நிலவி வருகிறது என்பதும் உண்மை.ஆகவே அரசியலை ஒரு தொழிலாகக் கருதாமல் மக்கள் தொண்டாகக் கொண்டு செயல்பட முனைபவர்களை அடையாளம் கண்டு பொதுவாழ்வுக்கு கொண்டுவர அம்மா ஆலோசிப்பதையும் நான் உணர்கிறேன்.  எனவே இனிமேலாவது வெற்றி பெற்ற நம் கழக உறுப்பினர்கள் பதவி வந்து விட்டதால் மமதை இல்லாமல் உங்கள் பணிவை மக்களிடம் காட்ட தயாராகுங்கள். இரவு பகலாக உங்களுக்காக பாடுபட்ட என்னை போல் தொண்டனுக்கு எதுவும் செய்ய வேண்டாம். அன்புடனாவது பேச பழகுங்கள் அடுத்த தேர்தலில் 234 ம் நமதே.

கொ.பெ.பி.அய்யா.

Monday 27 June 2016

கல்வி சிறந்த தமிழ்நாடு.

கல்வி சிறந்த தமிழ் நாடு.

"இந்தியாவில் கல்வி சிறந்த நாடு
சந்தியாவின் புதல்வி அரசாளும் தமிழ்நாடு"
என்பதற்கு முன்னுதரணமாக இன்று அம்மாவின் தமிழாட்சி மாநிலம்
தமிழ்நாடு விளங்குகிறது.

எந்தவொரு நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறதோ அந்தவொரு நாடுதான் சகல துறைகளிலும் சிறந்துவிளங்கும் என்ற கோட்பாட்டிற்கு இணங்க தமிழ்நாடு கல்வி உயர்ந்த நாடு என்ற பெருமையை எட்டும் வகையில் அம்மாவின் அரசு கல்விக்கு முக்கியத்வம் கொடுத்து வருகிறது.

அனைவர்க்கும் கல்வி. கல்லாரே இல்லார் என்ற குறி நோக்கோடு நூறு சதவிகிதம் கல்வி பெற்ற மாநிலம் தமிழ்நாடுதான் எனும் பேரு பெற பலப்பல திட்டங்களை அம்மா தீட்டி செயல்படுத்தி வருகிறார்.அவற்றில் சில இங்கே காண்போம்:-

1)கல்வி முன்னேற்றத்திற்குப் பெரும் இடையூறாக இருப்பது வறுமைப்பட்ட மாணவர்கள் தொடர்ந்து கல்வி பெற முடியாமல் சமூகம் மற்றும் குடும்பச்சூழலின் காரணமாக இடைநிற்றல் என்பதாகும். அவ்வாறான இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் மாணவர்கள் கல்விச்சாலைகளுக்கு சென்றுவரத் தேவையான விலையில்லாச்சைக்கிள்,பாடங்களைப் பதிவிறக்கம் செய்து கற்கத் தேவையான மடிக்கணினி,விலையில்லாப் பாடப் புத்தகங்கள்,காலணிகள்,சீருடைகள்,மற்றும் காலையில் உணவுக்காக காத்திராமல் சரியான வேளைக்குப் பள்ளிக்கு செல்ல ஏதுவாக ஆரம்பக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு காலைச்சிற்றுண்டி வழங்கவும்,மதிய வேளை முட்டையுடன் சத்தான உணவு பள்ளிகளில் தொடர்ந்து வழங்கிடவும் அம்மா ஆணை பிறப்பித்துள்ளார்.

2)ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஒரு உயர்நிலைப்பள்ளி என்ற நிலை நூறுசதவிகிதம் எட்டும் நிலையை அடைய மேலும்மேலும் உயர்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு அம்மா உத்தரவிட்டுள்ளார்.

3) மாநிலத்தில் உள்ள 5265 பள்ளிகளிலும் கணினி வழியாக ஸ்மார்ட் வகுப்புக்களை இந்த கல்வி ஆண்டுக்குள் தொடங்கிடவும் கல்வித்துறை அம்மாவின் ஆணையால் முடுக்கி விடப்பட்டுள்ளது..

4)அரசுப்பள்ளிகளில் 5865 ஆசிரியர் காலிப்பணியிடங்களும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிராக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடித்து வைக்கப்பட்டவுடன் உடனடியாக நிரப்ப நூறு சதவிகிதம் அரசு தயார் நிலையில் உள்ளது.

5)9,மற்றும் 10 ம் வகுப்புக்களில் தொழிற் கல்வி பாடத்திட்டம் கொண்டு வர அம்மாவின் அரசு முடிவு செய்துள்ளது.இதன்மூலம் ஏட்டுச்சுரைக்காய் வீட்டுக்கு உதவாது என்ற நிலை மாறி இளைஞர்கள் சுயகாலில் நிற்பார்கள் என்பதும் உறுதியாகிறது.

6)அம்மாவின் ஆணைக்கிணங்க வெளியூர்களில் கல்விபயிலும் மாணவர்க்கான அரசு விடுதிகள் அனைத்தும் அனைத்துவசதிகளுடன் கூடிய
அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் இயங்கும் வேகத்தில் கட்டிடப்பணிகள்
நடைபெற்று வருகின்றன.மேலும் 845 பள்ளிகளில் ரூபாய் ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கட்டிடப்பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளன.

ஒரு மாநிலம் தன் வளர்சிப்பாதையில் சென்றடையும் வேகம் சிதை படாமல் இருக்கவும், சென்றடையும் இலக்கும் எட்டப்பட வேண்டுமானாலும் ஆட்சி மாற்றம் எனும் தடங்கல் இல்லாமல் தொடரும் பட்சத்தில்தான் வளர்ச்சி என்பதும் சாத்தியமாகும் என்பதை சரியாகப் புரிந்து கொண்ட தமிழக மக்கள் அம்மா மீண்டும் ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்க கடந்த தேர்தல் மூலம் சரியான தீர்ப்பை வழங்கியமைக்கு தமிழக மக்களுக்கு கோடானுகோடி நன்றி சொல்வோமாக!

அம்மாவின் தீர்க்க தரிசனம் 2023- 100%வெற்றியடையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

நன்றி தமிழ்ச்சொந்தங்களுக்கு.

கொ.பெ.பி.அய்யா.


Sunday 26 June 2016

கட்டுரை.பெட்ரோல்

விலைவாசியின் ஆணிவேர்?

பெட்ரோலும், டீசலும்தான் விலைவாசியை நிர்ணயிக்கும் ஆணிவேர் என்றால் யாராலும் மறுக்க முடியுமா?கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பெட்ரோல்-டீசல்விலை ஆறுமுறை உயர்த்தப்பட்டுள்ளது.ஆனாலும் ஒருமுறைகூட கடந்த ஆறு ஆண்டுகளில் அம்மாவின் தமிழ் நாடரசு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியதுண்டா?.எதற்கெல்லாமோ காட்டுக்கூச்சல் போடும் எதிர்க்கட்சிகள் அவ்வப்போது உயர்த்தப்படும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிரான அம்மாவின் சவாலை பாராட்டும் பக்குவம் உண்டா?

சில விவசாய விளை பொருட்களின் விலை அவ்வப்போது பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் விலை ஏற்றங்கள் என்பதும் தவிர்க்க முடியாதுதான்.அதுவும் தற்காலிகமானதுதான் என்பதும் எல்லோர்க்கும் தெரிந்த உண்மைதான்.தக்காளி ஒருகிலோ ஆறு ரூபாய்க்கு விற்றால் நுகர்வோர்க்கு சேமிப்பு மிஞ்சுகிறது.அதேவேளை அது விவாசாயிக்கு பொருளாதார இழப்பு என்பதையும் நம்மில் எத்தனை பேர் உணர்கிறோம்?

பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயம் செய்துகொள்ள அதை விநியோகம் செய்வோர்க்கு அதிகார உரிமை வழங்கியுள்ள நடுவண் அரசு உணவுப்பொருட்களை உற்பத்திசெய்யும் விவசாசியிக்கு தங்கள் விளை பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்யும் உரிமை பெற அனுமதிக்குமா?ஏனிந்த பாரபட்சம் என்று கேட்கும் தைரியம் அம்மாவைத் தவிர எவர்க்கிருக்கும் இந்த இந்திய நாட்டில்?

விலைவாசி உயர்வுக்கு மூன்று அடிப்படைக் காரணங்கள் உள்ளன.அவை
பணவீக்கம்,பற்றாக்குறை,மற்றும் போக்குவரத்து.சரக்குப் போக்குவரத்துக்குப் பயன்படும் கனரக வாகனங்கள் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு ஏற்படும் போதெல்லாம் அதன் பாதிப்புக்கு ஏற்றாற்போல் கட்டணத்தை ஏற்றிக்கொள்ளும் போதெல்லாம் விலைவாசி உயர்கிறது என்பதைக்கருத்தில் கொண்டுதான் மாண்புமிகு அம்மா தமிழக முதல்வர் அவர்கள் சிறு குறு விவசாயிகளின் விளைபொருட்களை குறைந்த கட்டணத்தில் பேருந்துகளில் சந்தைகளுக்கு எடுத்துச்செல்வதில் பாதகம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற தாயுள்ளத்தோடு அரசுக்கு ஏற்படும் இழப்பைத்தாங்கிக் கொண்டு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாமல் விலைவாசியும் ஓரளவு கட்டுக்குள்ளிருக்க வகை செய்துள்ளார் என்பதை வெற்றுக்கூச்சல் வேலைக்கு ஆகா எதிர்க்கட்சியினர் ஒப்புக்கொள்வார்களோ இல்லையோ!ஆனால் தமிழக மக்கள் புரிந்து கொண்டுதான் முப்பத்தி இரண்டுகால சரித்திர நிகழ்வாக மக்களுக்காக ஆண்ட அம்மாவின் அரசையே மீண்டும் ஆளுங்கட்சியாக்கி ஆறாவது முறையாக அரியணை ஏற்றி தர்மத்தை நிலைநிறுத்தியுள்ளார்கள்.அப்படித்தான் உலகமும் பேசிப்பாராட்டுகிறது.வாழ்க தமிழ் மக்கள்.

கொ.பெ.பி.அய்யா.

Sunday 12 June 2016

பிறந்த நாள் வாழ்த்து.

(பிறந்த நாள் வாழ்த்து)

வளரும் வாலிபம் நீள்கவே!
புலரும் காலமும் போல்கவே!
மலரும் சூழலும் ஆள்கவே!
ம் பொழுதும்!

பெற்றவர் ஏற்றும் வாழ்வறமே!
மற்றவர் ஆற்றும் போல்கவே!
கற்றவர் போற்றும் நூல்வகமே!
உற்றவர் காமேஸ் வாழ்கவே!

காலம் கொடுக்கும் பாடமே!
ஞாலம் படிக்கும் போல்கவே!
ஆழம் அறியும் அறிவினையே!
கோலம் காமேஷ் நெறிவழியே!

வாழும் இயக்கம் வாழ்கவே!
நாளும் தொடக்கம் போல்கவே!
ஆளும் அம்மா பாதையே!
நீளும் காமேஷ் வாழ்க்கையே!

மனிதம் கொண்டாடும் ஆளாக!
இனிதம் என்றாடும் போலாக!
இதயம் வென்றாடும் பேராக!
உதயம் காமேஷ் நாளாக!

கொ.பெ.பி.அய்யா.

Tuesday 24 May 2016

புதியபாதை.

புதிய பாதை புதிய பயணம்.

எதிரிக் கட்சிகள் தமது மூக்கின் மீது விரல் வைத்து வியக்கும் வண்ணம் அம்மாவின்  புதிய பயணம் புதியபாதையில்பயணிக்கத்தொடங்கியுள்ளது.
இனி எவரும் எக்காரணத்திற்காகவும் அம்மாவை நோக்கி விரல் நீட்டி பேசமுடியாத அளவிற்கு வாயடைத்துப் போயுள்ளனர்..தங்கள் இஷ்டத்திற்கும் எழுதியும் விமர்சித்தும் மக்களை ஏமாற்றி வந்த ஊடகங்கள் இப்போது பாராட்டு மழை பொழிந்து பாசம் காட்டுகின்றன.

ஆறாவது முறையாக அம்மா பதவி ஏற்றுக்கொண்ட நாளில் தங்களின் விஷமத்தனமான விமர்சனங்களுக்கு என்ன தீனி கிடைக்கும் என்றே சில கோயாபெல்ஸ் ஊடகங்கள் தேடித்தேடி அலைந்தன.அனால் அம்மாவின் புதிய பாதையில் புதிய பயணத்தின் ஆச்சர்யம் கண்டு அயர்ந்து மயங்கி வீழ்ந்தன.

அம்மாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்திலிருந்து பதவி ஏற்கும் பல்கலைக்கழகம் நூற்றாண்டு மண்டபம் வரைஆறு கிலோமீட்டர் வழி நெடுகிலும் அம்மாவின் பதவியேற்பு சம்மந்தமான எந்தவொரு பதாகைகளும் எழுத்தும் இடம்பெறவில்லை.அதே சமயம் போக்குவரத்து நெருக்கடிகளும் இல்லை.அது மாத்திரம் அல்ல கழகத் தலைவர்களின் பௌவியாமான பணிவுத் துதிபாடுகளும் இல்லை.இவ்வாறான துதிபாடுகள் அம்மாவின் விருப்பமும் அல்ல.ஆனால் கழகச்சொந்தங்கள் தங்கள் உள்ளம் எழும் உணர்சிப்பூர்வமான மரியாதை நிமித்தமாக தங்களையே அறியாமல் நிகழும் அனிச்சைச்செயல் என்று வாய்மலர்கிறார்கள்.ஆகவேதான் பதவியேற்பின் போது எப்படி யெல்லாம் நடந்து கொள்ளவேண்டும் என்றும்  கழக உடன்பிறப்புக்களுக்கு முன் பயிற்சி கொடுத்தும் அம்மா அழகு செய்தார்.

மரியாதை என்பது வேண்டிப்பெறுவதல்ல.அது உதிரத்தில் தோன்றிப் பெறுவது.லட்சத்தில் ஒருவருக்குத்தான் அப்படிப்பட்ட அபூர்வ தெய்வீக இலட்சணம் இயற்கையாக அமைந்து இருக்கும்.அப்படியொரு மரியாதைக்குரிய முகராசி அம்மாவுக்கே ஆண்டவன் அருளிய அதிசயம்.அந்த அம்மானுச்யமான அம்மாவின் ஆளுமைத்தோற்றம் அவரைப் பார்த்த மாத்திரமே பணிந்து தொளச்செய்கிறது என்பதுதான் சத்தியம்.அவ்வாறான சுய எழுச்சியை மாற்றுவது என்பதும் சாத்தியமே என்பதையும் அம்மா சாதித்துக்காட்டினார்.

அம்மாவின் வாழ்க்கைஎன்பதும்மக்களுக்காகவேஅர்ப்பணிக்கப்பட்டது.தமிழக மக்கள்தான் அவர் சொந்தம்.அம்மாவின் பிறப்பும் ஒரு அவதாரம்.அவதாதாரம் எடுத்த அத்தனை மனிதர்களும் சோதனைகளுக்கும் உள்ளாக்கப்பட்டதும் உள்ளாக்கப்படுவதும் இறைவனின் திருவிளையாடல்கள்தான்.இறைவனின் திருவிளையாடல்கள் அனைத்தும் இறுதியில் திருவினைகளாகவே திருவடிவங்களாகும் என்பதே திருமறைகளின் சத்தியம்.அப்படித்தான் அம்மாவும் இன்று புடம்போட்ட தங்கமாக தங்கத்தாரகையாக மிளிர்கிறார்.இனி அவரை அசைக்க எந்த சக்தியாலும் இயலாது.இது வெறும் கூற்றல்ல,இதுதான் அம்மாவின் வரலாறு.இது இறைவனால் எழுதப்பட்டது.இதை மாற்றும் வல்லமை எவர்க்கும் இல்லை.மக்களால் அம்மா.மக்களுக்காகவே அம்மா.இதுதான் அம்மாவின் அவதார நோக்கம்.

இனி காணப்போகும் அம்மாவின் ஆட்சி.இந்திரலோகத்தின் காட்சி.சுவர்க்கம் என்பதை இப்பூவுலகிலேயே கண்டுணரலாம்.இனி பசுமைக்குப் பஞ்சமிருக்காது.பசியென்ற சொல்லிருக்காது.இனி மழைநீர் ஒரு சொட்டுக்கூட கடல்நீரைக்காண முடியாது.ஆறு குளங்கள் அனைத்தும் தரை காட்டாது.இனி ஏழை எனும் பெயர் சுமந்து எவனும் இருக்கமாட்டன்.இனி இரவும் பகலும் வேற்றுமையின்றி எப்போதும் ஒளிரும் தமிழகம் ஒரு அடையாள பூமியாக அம்மாவின் ஆட்சி முத்திரையாக அகிலம் போற்ற விளங்கும் என்பதும் சத்தியமே.

அம்மா என்றால் தமிழகம்.
தமிழகம் என்றால் அம்மாதான்.
என்றென்றும் தமிழாட்சி-அது
ஒன்றென்றும் நிலையாட்சி.

ஆளப் பிறந்தவர் அம்மாதான்.
அவர்தான் தமிழே அம்மாதான்.
தமிழாம் தவமே அம்மாதான்.
தமிழின் ஆட்சி அம்மாதான்.

கொ.பெ.அய்யா.

Saturday 21 May 2016

சாதனைப் பெண்மணி கட்டுரை.

சாதனைப் பெண்மணி சரித்திர நாயகி அம்மா.

சாதிக்கப் பிறந்த அம்மா பல சாதனைகளில் சரித்திரம் படைத்தது சாதாரண விடயம் அல்ல.அம்மாவின் சாதனைகள் சிலமட்டும்தான் இங்கே காண்போம்.

#நமது புரட்சித் தலைவர் 1987ல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தபோது அப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நமது கழகம் தலைமை ஏற்று நடத்த பொறுப்பான தலைமையின்றி தடுமாறிய அந்த இக்கட்டான காலக்கட்டத்தில் புரட்சித் தலைவி அம்மாதான் துணிந்து முன்னின்று பட்டி தொட்டி கிராமங்கள் தோறும் சென்று கண்துஞ்சாது அரும்பாடுபட்டு பரப்புரை செய்து வெற்றிக்கனியை வென்றெடுத்து சிகிச்சை முடித்து வந்த நம் பொன்மனச்செம்மலிடம் காணிக்கையாகப் பரிசளித்தார் என்பதை யாரும் சாமான்ய விடயமாகக் கருதி மறந்திடவும் முடியுமா?.

#புரட்சித்தலைவர் மறைவுக்குப்பின் எதிரிகளின் சூழ்ச்சிச் சதியால் நமது இயக்கம் இரண்டாக உடைக்கப்பட்டு நமது வெற்றிச்சின்னம் இரட்டை இலையும் அண்ணாவின் முத்திரை பதிக்கப்பட்ட நமது இயக்கத்தின் வெற்றிக்கொடியும் முடக்கப்பட்டன.ஆனால் அம்மா தனது ஓயா உழைப்பாலும் திறமையாலும் அயரா முயற்சியாலும் உடைபட்ட இயக்கத்தை ஒன்றிணைத்துக் காத்து இழந்த கொடியையும் சின்னத்தையும் மீட்டெடுத்த பெருமையும் புகழும் அம்மாவின் சாதனைதான் என்பதையும் எவராலும் மறுக்க முடியுமா?இந்திய அரசியல் வரலாற்றில் எந்தவொரு அரசியல் இயக்கமும் தான் இழந்த சின்னத்தையும் கொடியையும் மீட்டெடுத்த வரலாறு உண்டா?நூறாண்டுகளுக்கும் மேல் காங்கிரஸ் பேரியக்கத்தால் கூட தான் இழந்த இராட்டை முத்திரை பதித்த மூவண்ணக்கொடியையும் இரட்டை மாட்டு சின்னத்தையும் மீட்டெடுக்க வக்கின்றி எத்தனையோ சின்னங்கள் மாறி மாறி இன்று கை சின்னத்தில் வந்து நிற்கின்றது.சிதறுண்ட அக்கட்சி இன்னமும் சிதறிக்கொண்டுதான் சிதைகின்றது என்பதும்தானே உண்மை?.

#புரட்சித்தலைவர் காலத்தில் கூட கால்பதிக்க முடியாதிருந்த சென்னையைத் தனது கோட்டைக் கொத்தளமாக்கி மாநகரத்தையும் கைப்பற்றி இன்று பெருநகரமாக்கிய சாதனை அம்மாவின் அற்புதம் என்பதையும் யாரால் மறுக்க முடியும்?

#தமிழமெங்கும் விரிந்து பரந்திருந்த ரௌடிகளின் சாம்ராஜ்யத்தை வேரறுத்து கட்டப்பஞ்சாயத்து,நில அபகரிப்பு,கந்துவட்டிக் கட்டாய வசூல் ஆகிய கொடுமைகளை ஒழித்து தமிழகம் ஒரு அமைதி பூங்காவாக அழகு பெற்றதும் அம்மாவின் அருஞ்சாதனை அல்லாது யாருடைய சாதனை?

#அன்று வயிற்றுக்குச்சோறில்லையெனில் இச்செகத்தினை அழித்திடுவோம் என்றும் மகாகவி கோவக்கனல் தெறிக்கப் பாடினான்.அவன் ஏக்கத்தை உணர்ந்தஅம்மாதான்இன்றுதமிழகத்தில்பிச்சைக்காரகள்இல்லை.பட்டினிச்சாவில்லைஎன்ற நிலையை உருவாக்க.ஆலயங்களில்  அன்னதானம்.அம்மா உணவகம் ஆகிய அன்னதான மையங்களை அமைத்து அன்னபூரணித் தாயாக அம்மா விளங்குகிறார்.இதைவிட ஏழைகளின் வயிறு குளிர வேறென்ன சாதனை இவ்வுலகில்?

#இது வரை அரசியல் வரலாற்றில் எந்தவொரு அரசியல் இயக்கமும் தனது வாக்கு சதவிகிதத்தை நிலை நிறுத்திகொண்டதில்லை.ஆனால் அம்மாவின் தலைமையில் உள்ள அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக இயக்கம் மட்டும்தான் தேர்தலுக்குத் தேர்தல் தனது வாக்கு சதவிகிதத்தை உயர்த்திக்கொண்டே உள்ளது.இதைவிட அம்மாவின் சாதனைக்கு வேறென்ன
சாட்சி வேண்டும்?

#அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அம்மாவின் மீது சுமத்தப்படும் அத்தனை பொய் வழக்குகளையும் சட்டபூர்வமாகவே சந்தித்து அவற்றை பொடிப்பொடியாக்கி வெற்றி காண்போதோடு மட்டும் அல்லாமல்.தனது மாநிலத்தின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்ப்படும்போதெல்லாம் அவற்றையும்வழக்குமன்றங்களில்போர்வழக்காடிவென்றெடுத்துள்ளார்.
முல்லைப் பெரியாற்று நீர்மட்டத்தை உயர்த்தியதும் மற்றும் காவேரி நீர்மேலாண்மை வழக்கு மற்றும் கச்சத்தீவு மீட்டெடுக்கும் வழக்கு போன்ற சட்டரீதியான போராட்டங்களையும் அஞ்சா நெஞ்சுறுதியோடு முன்னெடுக்கும் சாதனையாளர் அம்மாவைத் தவிர தமிழக அரசியலில் வேறொருவர் எவருளார்?

#தமிழக அரசியல் வரலாற்றில் கர்மவீரர் காமராசர்,புரட்சித்தலைவர் எம்ஜியார் போன்ற அமரத் தலைவர்களுக்குப்பின் ஆளுங்கட்சியாக இருந்துகொண்டு தொடர்ந்தும் ஆட்சியை தக்கவைத்துக்கொண்ட அரிய சாதனை நிகழ்த்த அம்மாவைத் தவிர எவரினி பிறப்பார்?

கொ.பெ.பி.அய்யா.

Thursday 12 May 2016

அம்மாவின் பிள்ளை நீ

அம்மாவின் பிள்ளை.

அம்மாவின் பிள்ளை நீ!
அவரது கடனே நீ!
புரட்சியாரின் செல்வம் நீ!
நிரந்தரம் அரசு நீ!

சிங்கம் நீ தங்கம் நீ!
செந்தமிழ் சொந்தம் நீ!
தங்கத் தாரகை புகழே நீ!
பொன் மனத்தின் கண்மணி நீ!

அண்ணாவின் தி.மு.க நீ!
அன்னையின் நம்பிக்கை நீ!
எண்ணும் அளவில் இதயம் நீ!
இன்னும் சொன்னால் சரித்திரம் நீ!.

அன்பில் விளைந்த தொண்டன் நீ!
பண்பில் நிறைந்த பாசறை நீ! .
அம்மாவின் ஆன்மா நீ!
செம்மலின் சீரே நீ!

தொட்டு வளர்த்த தோழமை நீ!
கட்டிக் காத்த கன்னியம் நீ!
அம்மா நிழலின் அனுபவம் நீ!
எம்ஜிஆர் புகழ் ஏந்தல் நீ!

காலம் முன்னே கவனம் நீ!
வாழும் பின்னே வாழ்வும் நீ!
அம்மா அரசின் அச்சாணி நீ!
எம்ஜிஆர் இயக்கம் இயக்கம் நீ!!

கவிஞர்கொ.பெ.பி.அய்யா.


அதிமுக கொடி

அதிமுக கொடியை வடிவமைத்த நடிகர்


நகைச்சுவை நடிகர் பாண்டு என்றாலே, அவரின் விசித்திரமான உச்சரிப்பும், வாயசைவும்தான் நினைவுக்கு வரும். அ.தி.மு.க. கொடியை வடிவமைத்தவரும், இரட்டை இலைச் சின்னத்தை வரைந்து கொடுத்தவரும் இவர்தான். இது இந்தத் தலைமுறையினருக்குத் தெரியுமா என்பது சந்தேகமே. தனது அனுபவங்களைப் பற்றி அவர் நினைவு கூர்ந்ததாவது:
 அதிமுக தொடங்கப்பட்ட 1972-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி இரவு 10 மணிக்கு தன்னைச் சந்திக்க வருமாறு அழைத்தார் எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கி இருக்கிறேன் தெரியுமா... என்றார். தெரியும் பத்திரிகையில் பார்த்தேன் என்றேன் நான். கட்சிக்கு பேர் என்ன எனக் கேட்டார். அதிமுக என்றேன். கட்சிக்கான கொடியை நீங்கள்தான் வரைய வேண்டும். இன்றிரவே இங்கேயே தங்கி வரைய வேண்டும் என்றார். அங்கே இருந்த அறைக்குள் என்னை அனுப்பிவிட்டு, வெளியில் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு போய்விட்டனர். அதிமுக ஆரம்பிக்கப்பட்டதால் பரபரப்பான சூழ்நிலை அப்போது தமிழகத்தில் இருந்தது. எம்.ஜி.ஆரின் வீடு இருந்த இடத்தை திரைப்பட சண்டைக் கலைஞர்கள்தான் காவல் காத்தனர்.
 அப்போதுதான் சென்னை ஓவியக் கல்லூரியில் படித்து முடித்திருந்தேன். எனது சகோதரர் இடிச்சபுளி செல்வராஜ், எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். அவர் மூலமாக என்னைப் பற்றி தெரிந்து கொண்டே என்னை அழைத்திருந்தார் எம்ஜிஆர். 
 இரவு 10 மணிக்கு அறைக்குள் சென்ற நான் 10.30-க்குள் கருப்பு- சிவப்பு நிறங்களில், நடுவில் அண்ணா சிரிப்பது போல ஒரு கொடியை வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்த எம்.ஜி.ஆர் தொண்டர்களை உசுப்பிவிடுவது போல இந்தக் கொடி இல்லையே. சிரிப்பில் போர்க்குணம் இருக்காது. கட்சியின் போர்க் குணத்தை வெளிக்காட்டும் விதத்தில் கொடியை வடிவமைத்துத் தர வேண்டும் என்றார். 
 அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் சிலையை மனதில் வைத்து, அவர் கை நீட்டிப் பேசுவது போல கொடிக்கான படத்தை வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்த அவர் இந்தப் படத்தைக் கொடியாக மாற்றும்போதும் கை வெட்டுப்பட்டுவிடும் என்றார். கையைச் சுருக்கி நேராக இருப்பது போல வரைந்து கொடுத்தேன். அது பார்ப்பதற்கு, அண்ணாவின் கையில் துப்பாக்கி இருப்பது போல இருந்தது. அதைப் பார்த்தவர். ஏன் எம்.ஆர்.ராதா என்னை சுட்டது போதாதா என்றார். உடனே கையை சிறிது மேலே இருப்பது போன்ற இப்போதைய கொடியை வரைந்து கொடுத்தேன். கட்டித் தழுவி, மிகவும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டார். 
 அதேபோல, இரட்டை இலைச் சின்னத்தையும் நான்தான் வரைந்து கொடுத்தேன். அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியவுடன் நடைபெற்ற வெற்றிக் கூட்டத்தில் என்னை அறிமுகப்படுத்தி, 5 பவுன் தங்கச் சங்கிலியும், ரூ.10,000 ரொக்கப் பரிசும் கொடுத்தார் எம்ஜிஆர். 
 தமிழகம் முழுவதும் நான் வடிவமைத்த கொடி பட்டொளி வீசிப் பறப்பதைப் பார்க்கும் வேளைகளில் எல்லாம் மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஒரு கலைஞனுக்கு இதைத் தவிர வேறு என்ன வேண்டும் என்றார் அவர். http://media.dinamani.com/2016/05/10/42.jpg/article3424493.ece/alternates/w620/42.jpg
நன்றி :தினமணி.

கொ.பெ.பி.அய்யா.

Tuesday 10 May 2016

வெற்றி நிச்சயம்.

வெற்றி நிச்சயம்.

தங்கங்களே அம்மா சிங்கங்களே!-நீங்கள்
ஒன்றில் இல்லை கோடிகளே!
ஒருவருக் கொருவர் பொறுப்பு-உங்கள்
உழைப்பில் இருக்கணும் நெருப்பு.

உங்களுக்  குள்ளே தாயாய்-தூண்டும்
கங்கதுக் குள்ளே தீயாய்
எரியும் நெருப்பாய் துடிப்பு-அம்மா
விளையும் துணிவாய் உழைப்பு.

புரட்சித் தலைவரின் பாதை-அன்று
புறப்பட்ட பயணம் தொடர
தலைவர் தானே தேர்ந்தார்-அம்மா
தலைமை தானே நேர்ந்தார்.

எதிரிகள் எல்லாம் ஒன்றே-தீய
சக்திகள் என்று கண்டே,
கூட்டம் அதனை கொள்கையில்-விரட்டும்
வேட்டை ஒன்றே இலட்சியம்.

இரட்டை இலைதான் எண்ணம்-அது
புரட்சித் தலைவரின் சின்னம்.
வெற்றியின் வெற்றி திண்ணம்-அம்மா
பற்றிய பச்சை வண்ணம்.

மீண்டும் அம்மாவின் ஆட்சி--என்றும்
வேண்டும் என்பதே சாட்சி.
தொடராய் தொடரும் நீட்சி-அம்மா
வரமாய் படரும் மாட்சி.

நல்லாட்சி என்றும் சிறக்க-அம்மா
தில்லாட்சி கொண்டும் நிலைக்க!
அம்மாட்சி நின்றும் தொடர-மொத்த
உள்ளாட்சி வென்றும் உழைக்க!

கவிஞர்கொ.பெ.பி.அய்யா.
   

Saturday 7 May 2016

கொடி பறக்குது.

கொடி பறக்குது.,

கொடி பறக்குது கொடி பறக்குது
கோட்டை ஏறி கொடி பறக்குது-புரட்சித்
தலைவர்களின் புகழ் பாடி
இரட்டை இலைக் கொடி பறக்குது.(கொடி)

இரட்டை இலைச் சின்னம்
விரட்டும் பசி வண்ணம்-வள்ளல்
எம்ஜி யாரின் புகழே
என்றும் பாடி பறக்கும்.(கொடி)

வறுமை ஓட்டி முடுக்கும்.
வளமை வாழ்த்தி அழைக்கும்-அம்மா
பெருமை போற்றிப் படிக்கும்.
திருமை நாட்டிப் பறக்கும்.(கொடி)

புரட்சித் தலைவர் புகழே!
ஸ்ரீ ரங்கத் தமிழே!-தமிழக
நிரந் தரத்தின் அரசே
இருந்து ஆளப் பறக்கும். (கொடி)

வள மெல்லாம் இங்கே.
நல மெல்லாம் இங்கே-தமிழ்
புகழெல்லாம் பாடிப்பாடி
யுகயுகமாய் பறக்கும்.(கொடி)

கொ.பெ.பி.அய்யா.


Friday 6 May 2016

அன்னை அறிவார்

அன்னைக்குத்தான் தெரியும்..

பிள்ளைக்கென்ன வேண்டும்-ஒரு
அன்னைக்குத்தான் தெரியும்.
சொல்லியதும் கொஞ்சம்-அம்மா
சொல்லாததும் செய்தார்.

அம்மா திட்டம் இன்றும்-மக்கள்
அலையும் போக்கை தவிர்த்தார்.
மக்களைத் தேடி அரசு -குறை
முறைகைகளைக் கேட்க  பணித்தார்.

படிப்படியாய் மதுவை-அம்மா
முடித்திடுவார் ஒழித்து.
திருந்துவதும் பொறுப்பு-திருத்தம்
பொருந்துவதும் நடப்பு.

அடிப்படையாம் கல்வி-அதை
அடைவதுதான் செல்வம்.
படிக்கமட்டும் படிக்க-அம்மா
கொடுக்குந்துணை தெய்வம்.

ஒடுக்கப்பட்ட பெண்ணும்-தன்னை
விடுக்கவழி முனைந்தார்.
பயணத் தானி தந்தும்-அம்மா (தானி--auto)
பயிற்றப் பெண்ணை அழைத்தார்..

தூணாய் தாங்கும் உழவன்-கடனில்
வீணாய் ஏங்கும் நிலைமை.
தானாய் நீங்கவும் கடன் நீக்கி-அம்மா
மாணாய் பாங்கும் அமைத்தார்..

காலை உண்டியும் பள்ளியில்-அதி
காலை வந்திடும் பிள்ளைகள்.
காலைப் பசியை போக்கினார்-அம்மா
ஊழை வென்ற தாயரவர்.

கொ.பெ.பி.அய்யா.

Wednesday 4 May 2016

இரட்டை இலை நானடா!

இரட்டை இலை  நானடா!

இரட்டை இலை நானடா!
புரட்சி இலை தானடா
எதிர்ப பவரும் யாரடா!
எதிர் அணியும் ஏதடா!

எம்ஜியாரு பேரடா!
என்தலைவன் தானடா!
தெம்பிருக்கா கூறடா!
தீர்ந்த துந்தன் சாரடா!

அம்மா படை பாரடா!
ஆழி மடை தானடா!
சும்மா சும்மா ஏனடா!
சூழுரைப்பது வீணடா!

தலைவன் கண்ட அம்மாடா!
தமிழ்ச் சொந்தம் தானடா!
அம்மா தந்த தில்லடா!
அந்த பயம் கொள்ளடா!

அம்மா தமிழ் இனமடா!
அஞ்சா நெஞ்ம் தானடா!
நிரந் தரமாய் அம்மாடா!
இருந் தாள்வார் தமிழடா!

எழுச்சிக் கடல் அலையடா
புரட்சிப் படை தானடா!
வெற்றிப் பறை கொட்டடா!
ஏற்றிக் கொடி நட்டடா!


கொ.பெ.பி.அய்யா.

Tuesday 3 May 2016

நமது இலக்கு கட்டுரை.

நமது இலக்கு 234/234.

என் அன்புக்குரிய கழக நண்பர்களே!சகோகர்களே!பிள்ளைகளே!பிரியமானவர்களே! தேர்தல் வெகுவிரைவுடன் நம்மை நெருங்கி வருகிறது.இத்தேர்தலில் நமது வெற்றி நிச்சயிக்கப்பட்ட நிசமான ஒன்றுதான் என்றாலும் கூட அந்த மமதையில் மயங்கிக் கிடந்துவிடக் கூடாது.ஏனெனில் அரவமில்லா அந்தச்சந்தடி சாக்கில் நம்மைச்சுற்றி நம்மையே கண்காணித்துக்கொண்டு வேளை பார்த்து திருடக்காத்திருக்கும் திருட்டுப்பூனைகளிடமும் நாம் எச்சரிக்கையுடன் கவனமாக உசாருடன் விழிப்போடு விழித்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது.இவ்வாறு நான் தங்கள் உணர்வுகளை கிள்ளிவிடுவதும் எந்த அளவுக்கு அவசரமானது என்பதும் தற்போது நம்மைக் குழப்பிவிடும் தந்திர வேலைகளை விலை போகும் சில ஊடகங்களை தங்கள் கைக்குள் வைத்துக்கொண்டு சாதுர்யமாகச்செய்து கொண்டு எதிரிகளான அவர்கள் நம்மை முந்துவதுபோல் ஒரு பொய்யான மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு சித்துவேலை செய்துவருகிறார்கள்.அவ்வாறான படுபாதகச்செயல்களளுக்கு சில ஊடகங்களும் துணை போகின்றன என்பததுதான் வேதனையிலும் வேதனை. 
தினமலர் நியுஸ் 7 வெளியிட்டுள்ள கருத்து கணிப்பை பார்க்கும் போது கடந்த தேர்தலில் நக்கீரன் வெளியிட்ட கருத்து கணிப்பு தான் நினைவுக்கு வருகிறது... எக்சிட் போல் கருத்து கணிப்பு என்று திமுக கூட்டணி 180 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பு வந்தது. இரண்டு நாட்களில் தேர்தல் முடிவு வந்து நக்கீரன் முகத்தில் காறி துப்பியது.
அதையடுத்து முகத்தை துடச்சிட்டு நக்கீரன் வெளியிட்ட விளக்கம் தான் வரலாற்று சிறப்புமிக்கது. அதாவது நாங்க திமுகவுக்கு ஆதரவாக இருப்பதால் எங்களிடம் கருத்து தெரிவிப்பவர்கள் திமுக ஆதரவானவர்களாக இருந்ததால் திமுக வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பு வெளியிட வேண்டிய நிலை வந்தது...
***நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு என்பது எவ்வளவு தூரம் உண்மையாயிற்று என்பதை அறிந்தோமே..இந்த பத்திரிககளும் சரி தொலைக்காட்சி ஊடகங்களும் சரி..
த்தூ..நாளையே பாருங்கள் தேர்தல் வெற்றிக்கு பின்னர்..
அலச ஆரம்பிப்பார்கள்..எப்படி இப்படி ஓர் முடிவுகள் வந்தது என்று...நாலு கேனப்பயலுகள கொண்டுவந்து உட்காரவைத்து ..
அலசுவார்கள்..சுய கவுரவம் இல்லாத இந்த ஊடகங்கள்..
ஒருபோதும் அவைகள் நமக்கு ஆதரவாக ஒருபோதும் எழுதியதே கிடையாது..எம் ஜி ஆர் காலம்தொட்டு..இன்றுவரை..நமக்கு எதிரிகளே இந்த ஊடகங்கள்தான்..
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்..எதிர்பாருங்கள்..கடந்த கால வெற்றிகளை காட்டிலும்..இந்த தேர்தல் சரித்திர வெற்றியை அடையத்தான் போகிறது..
இந்த தேர்தல் முடிந்தும் இதை தான் இப்போது கருத்து கணிப்பு வெளியிடும் ஊடகங்கள் விளக்கமளிக்கும்..என்பதில் ஐயமில்லை.
தேர்தல் நிலவரம் குறித்து வெளிப்படையாகவே சில தகவல்களை நானும் சொல்லியாகவேண்டும்.. களப்பணியாளர்கள் தயவு கூர்ந்து இப்பதிவுகளை படித்து தெரிந்துக்கொள்ளவும். ஆரம்பத்தில் 186 தொகுதிகளை அஇஅதிமுக வெல்லும் என்ற நிலை இருந்தது. அந்த நிலை இன்று குறைந்துக்கொண்டே வருகிறது. அதற்காக திமுகவுக்கு அந்த தொகுதிகள் செல்கிறது என்று நினைக்கவேண்டாம். அவை இழுபரி தொகுதிகளாக மாறி வருகின்றன. இன்றைய சூழலில் அம்மா வந்து பேசிவிட்டார், இனி அம்மாவே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்ற ஒரு எண்ணம் அதிமுக நண்பர்கள் மத்தியில் வந்துவிட்டது. அதை மாற்றிக்கொள்ளுங்கள். அம்மா வந்தார், பேசினார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். தொகுதி மக்களிடம் நம்பிக்கை தரும்படியான வகையில் வேட்பாளர்கள் நடந்துக்கொள்ளவேண்டும். இன்றைய சூழலில் தமிழகத்தில் 40% தொகுதிகளில் அஇஅதிமுகவினர் களப்பணிகளை மேற்கொள்வதில் தோய்வு ஏற்பட்டிருக்கிறது. இதில் 14% களப்பணியாளர்கள் தங்களின் பணிகளை இன்னும் வேகமெடுத்து செய்யவேண்டும். அதைத் தவிர்த்து 26% களப்பணியாளர்கள் அம்மா வந்துவிட்டார், இனி அவரே பார்த்துக்கொள்வார் என்ற கருத்தை மாற்றிவிட்டு மீண்டும் களப்பணிகளை துவக்கவேண்டும். வெளிப்படையாக இப்போதைய சூழலில் அதிமுக களப்பணியாளர்கள் தங்களது பணிகளை நாளை முதல் சுறுசுறுப்புடன் மேற்கொள்ளாவிட்டால் மெஜாரிட்டி பெறுவதில் கூட கடினம் ஏற்படலாம். இது எச்சரிக்கை பதிவு. சுறுசுறுப்புடன் பணியாற்றினால் தாராளமாக 180 + என்ற நிலையை எட்டலாம். குறிப்பாக ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர் மாவட்டங்களில் களப்பணிகளை சுறுசுறுப்பாக செய்யவேண்டும். கடலூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நீலகிரி, விருதுநகர் பகுதிகளில் களப்பணிகளை தொண்டர்கள் மீண்டும் தொடங்கி ஆரம்பிக்கவேண்டும்.
-
புரியவேண்டிய கழக நண்பர்களுக்கு புரிந்தால் போதும். இன்றைய நிலையை நான் விளக்கிவிட்டேன். இனி எல்லாமே உங்கள் கைகளில் தான் உள்ளது.

தினமலர் 7 News செய்த கருத்து கணிப்பு உண்மையோ அல்லது பொய்யோ அது தேவை இல்லாத கதை.
ஆனால் ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு பொறுப்பாளர் முதல் தொண்டன் வரை உங்கள் கடமையை ஒழங்காக செய்யுங்கள்.
நமது லட்சியம் 234 தொகுதி யிலும் வெற்றி பெறுவது என்பது. வரலாறு படிப்பதற்காக.
இது ரொம்ப Easy method.
ஒவ்வொரு தொண்டனும் உங்க வாக்கை அஇஅதிமுக வுக்கு போடுங்கள் முதல் வேலையாக.
அப்புறம் ஒவ்வொரு தொண்டனும் இரண்டு வாக்காளர்களை அஇஅதிமுக வுக்கு ஒட்டு போட செய்யுங்கள்.
கிட்டத்தட்ட 2 கோடி தொண்டர்கள் நிறைந்த கட்சி அஇஅதிமுக.
2*2= 4 அதாவது 4 கோடி.
ஆனால் இதை ஒவ்வொரு தொண்டனும் செய்ய வேண்டும் அப்போ தான் இது சாத்தியம்.
ஒவ்வொரு பொறுப்பாளர்களும் விருப்பு வெறுப்பின்றி புரட்சித் தலைவி அம்மா தான் வேட்பாளராக ஒவ்வொரு தொகுதியிலும் போட்டி இடுவதாக எண்ணிப் பணி புரிய வேண்டும்..

நேற்று நமது நண்பர் ஒருவர் ஆட்டோ ஒன்றில் பயணம் செய்து இறங்கும்போது அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டாராம்..இந்த தேர்தலில் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று..
அதற்கு அவர் தயங்காமல் சட்டென்று ,"தமிழகம் பொறுத்தவரை அம்மாதான் ஆளும் மீனாட்சி"என்று  சொன்னாராம்.
மீண்டும்நண்பர்".சார் உறுதியாக அம்மாதான் பதவிக்கு மீண்டும் வருவார் என்று .நம்பிக்கையோடு சொல்கிறீர்கள் 
‪#‎அம்மா‬ என்றால் யாருங்க என்றாராம்.அதற்கு  அந்த ஆட்டோ ஓட்டுனர் சென்னைமொழி பிள்ளைத்தமிழில்,
"இன்னா சார் உலகம் முழுக்க #அம்மா என்றாலே நம்ம தமிழக முதல்வர் அவர்களைத்தான் சொல்வார்கள்", என்றாராம்.-அசந்துபோய்விட்டாராம் நமது நண்பர்.
மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி #அம்மா அவர்கள் சொன்னதுபோல..தனது பெயரையே மறந்துபோகும் அளவுக்கு #அம்மா என்கிற சொல் மட்டுமே இனி தமிழகத்தில் நிலைத்து நிற்கும்.
வரும் 2016 தமாழக சட்டமன்ற பொது தேர்தலில் இமாலய வெற்றி பெற்று #அம்மா அவர்கள் பதவி ஏற்ப்பு பிரமாணத்தின் போது உறுதியாக கூறுகின்றேன்..
ஜெயலலிதா எனும் நான் என்கிற வார்த்தையை மறந்து...
#அம்மா என்கிற நான் என்றே பதவி பிரமாணம் ஏற்பார் என்றே உறுதியாக நம்புகின்றேன்..
மக்களின் மனதில் #அம்மா நீக்கமற நிறைந்துவிட்டார்.
எந்த அரசு ஆண்டாலும் அதிருப்தி இருக்கத்தான் செய்யும். ஒரு குடும்பத்துக்குள்ளேயே எல்லோரையும் திருப்தி செய்வது கடினம் எனும்போது, ஏழரை கோடி மக்கள் வாழும் மாநிலத்தில் எல்லோரையும் திருப்தி செய்வது கடினம். அதிலும் பதவி வெறி கொண்டவர்கள் எதிரில் இருக்கும் நேரத்தில், மக்கள் திருப்தி அடைந்தாலும், எதிரிகள் விட மாட்டார்கள்.
ஆனால் ஆட்சி மீது வெறுப்பு ஏற்பட்டால் அது கண்டிப்பாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்.
அம்மா ஆட்சியில் ஒரு சிலருக்கு அதிருப்தி இருக்கலாம். ஆனால் பொதுவான மக்களுக்கு வெறுப்பு இல்லை. மாறாக நம்பிக்கை இருக்கிறது.
லஞ்சம் என்பது கடைகோடி ஊழியன் வரை புரையோடி இருக்கிறது. அதை ஒழிக்கவேண்டுமென்றால் மத்திய அரசு பல கடுமையான சட்டங்களை கொண்டுவரவேண்டும்.
ஆகையால் அது இப்போதைக்கு சாத்தியமில்லை. அப்படியிருக்க லஞ்சத்தை காரணமாக கொண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.
அதிமுகவைவிட திமுக சிறந்த ஆட்சியை தரும் என்கிற நம்பிக்கை மக்களுக்கு சுத்தமாக இல்லை.
அதிமுகவுக்கு முக்கிய பலம்
கட்சி ஓட்டு + ஏழை மக்களுக்கு சில அத்தியாவசிய திட்டத்திம் கொடுத்து கவர்ந்ததால் + திமுக போல் அராஜகம் செய்யாமல் அமைதியான ஆட்சி கொடுத்தது+ மின்சாரம் + தண்ணீர்
.
திமுக பலம்
கட்சி ஓட்டு + அதிமுகவின் எதிர்ப்பு ஓட்டு
.
மநகூ பலம்
எதிர்ப்பு ஓட்டு மட்டும் தான்... அந்த ஓட்டு திமுக கிட்ட இருந்து பிரிக்குற வேலைய பார்த்தா மட்டும் போதும் அதுக்குமேல யோச்சிக்கிற அளவுக்கு ஒர்த் இல்ல
அந்த தர்மபுத்திரனே ஆண்டாலும் அதிருப்தி என்பது இல்லாமல் போகாது...
அதுபோலவே அதிமுக ஆட்சியில் சில பின்னடைவு இல்லாமல் இல்லை.. அப்படி சொல்ல நான் ஒன்றும் நடுநிலையாளன் அல்ல..
ஆனால் அந்த அதிருப்தியையே மக்களின் வெறுப்பு அலையாக கற்பனை செய்து கொண்டு குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க அவை ஒன்றும் 1, 76000 கோடி ஊழல்கள் அல்ல.. எல்லா அரசுகளிலும் ஏற்படும் இயல்பான நிர்வாக சறுக்கல் மட்டுமே..
இந்த சாதாரண அதிருப்தியை மேலும் "தங்களுக்கு ஆதரவாக திரட்டுகிறேன் பேர்வழி " என போலி கருத்து திணிப்பு வெளியிட்டு அதன் மூலம் பெரிய ஆதரவு வளர்வதாக காட்டிக் கொண்டதில், அந்த திணிப்பில் பட்டவர்த்தனமாக தெரிந்த தவறுகளை கண்டு "மதில் மேல் பூனை" என நின்ற வாக்காளர்கள் "மீண்டும் இந்த குடும்பமா? "என்று அதிமுக பக்கம் தம் மனதை ஸ்திரப்படுத்தி விட்டனர்.பாவம்!
சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டதற்கு நன்றி.அம்மாவின் அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கை வந்தபின் நிலைமை தலைகீழ் மாற்றம் ஏற்படும் என்பதே உறுதி நன்றி!.
வெற்றி நிச்சயம்,
எம்ஜியார் நாமம் வாழ்க!
அம்மா சாதனை வெல்க!

கொ.பெ.பி.அய்யா.

குறிப்பு.நன்றி.பால்மீரன்,venkat swami natan,அசோக்,மற்றும் pirabuM