Sunday 25 May 2014

யார் ராஜபச்சே?

என்ன இது அநியாயம்

என்ன இது அநியாயம்
உன்னிடமும் இல்லை நியாயம்.       
சொன்னதெல்லாம் நிசந்தானோ!-உனக்கு.
சொந்தந்தானோ ராஜபச்சே!

கண்ணீரில் கடல் பெருக்கி
கப்பல் விடும் சண்டாளன்
உன் முடிசூட்டு விழாவிற்கு-பாவி
உற்ற திருஷ்டி பூசணிதான்.

செந்நீரில் குளம் நிறப்பி
செழிக்கக் குளித்தவன்தான்
காட்டேரி அவனேதான்--மனித
காவுபூஜை முடித்தவன்தான்.

பூதம் வந்து முடி சூட்ட
பாவம் என்ன செய்தாயோ!
வேதம் கற்ற நீ கூட—பாவம்
விதிவசம்ஆனாயோ!  

புண்ணியர் வாழ்த்தினால்
புகழ் இன்னும் கூடுமன்றோ!
பாவியரை அழைத்தாயோ!-தமிழ்
பாவம் உன்னைச் சூழுமன்றோ!

தமிழன் என்றால் ஏளனமோ!
தமிழினம் வேண்டாமோ!
தமிழ் இல்லா இந்தியாவோ!-அய்யா
தமிழ் செய்த பாவம் என்ன?

உடன் பிறந்த இந்தியனை
திடங்கொண்டு கொன்றவனை
கடன் என்று அழைப்பாயோ!-எம்மை
ஜடம் என்றும் நினைப்பாயோ!

அவன் செய்த இலாபம் என்ன?
நாங்கள் செய்த பாவம் என்ன?
எம்முணர்வைக் கொல்வதற்கு—நீயும்
எத்தனை நாள் தவமிருந்தாய்?

பாவியர்கள் தொலைந்தாரென்று
பகல்கனவா கண்டிருந்தோம்.
ஆவியாய் உன்னுருவில் –மீண்டும்
அவர் வந்தும் பூந்தனரோ!

என்றுதான் விடியுமோ!
எங்கள் தமிழ் ஆளுமோ!
அன்றுதான் பாரதம் –தமிழ்
வென்றும் ஒரு அங்கமாமோ!

கொ.பெ.பி.அய்யா.



Friday 23 May 2014

இனிமேல்தான் கவனம்!

 இனிமேல்தான் கவனம்!

நாம் மக்களின் வெற்றிக்காக உழைகிறோம்.மக்களின் வெற்றி என்றால் என்ன?மக்கள் சுயநல சுரண்டல்காரர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் விழிப்புடன் ஆரோக்யமான நிசமான சுதந்திரக் காற்றை சுவாசித்து உரிமை உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட்ட பாதுகாப்பான வாழும் வாழ்க்கைதான் மக்களின் வெற்றி.அவ்வாறு மக்களுக்காக தேர்தல் களம் எனும் ஜனநாயக அரசியல் களத்தில் போராடி நாம் பெற்ற வெற்றிகளும் சாதாரணமாக எண்ணிவிடக் கூடிய வெற்றிகள் அல்ல .வரலாற்றின் சுவடுகளாக பதியப்பட்டுவிட்ட சிறப்புமிக்க வெற்றிகள்.இது நமக்குள் நாமே பெருமைபேசிக் கொள்ளக்கூடிய வழக்கமான வெற்றிகள் அல்ல.இதற்கு முன்பும் நாமோ அல்லது மாற்று அணியினரோ நாற்பதையும் கூட வென்றிருப்போம் அல்லது தமிழக சட்டமன்ற தொகுதிகள் இருநூற்று முப்பத்து மூன்றுவரை பற்றியிருப்போம்..ஆனால் அது ஒரு கூட்டமாக கூடி வென்ற ஒரு கூட்டணி வெற்றிதான்.அவையெல்லாம் தனித்துநின்று வென்றோம் என்று பெருமைப்படக் கூடியது அல்லதான். ஆனால் இப்போது நாம் ஈட்டி வரும் வெற்றிகள் நமது சொந்த வெற்றி.இதில் யாருடைய பங்களிப்பும் இல்லை.இது புரட்சித் தலைவர் அருளி அம்மா மீட்ட இரட்டை இலை சின்னத்தின் வெற்றி.தனித்து நின்று எதிர் அணியினரை சுத்தமாக துடைத்து அனுப்பிய ஒரு உலக சாதனை என்றால் அது மிகையாகாது.இப்பெருமை எல்லாம் நமது அம்மாவிற்கே சேரும்

இனிமேல்தான் நாம் கவனமாக இருக்க வேண்டும்..உலகப்புழ் பெற்ற இச்சரித்திரப் பெருமையை அல்லது அம்மாவின் அரும்பெரும் சாதனையை எவ்வாறு கட்டிக்காப்பது என்று எண்ணும்போதுதான் நமக்குள் ஒரு பயம் நிறைந்த கவலை தோன்றுகிறது.அந்தப்பயமும் கவலையும் நம்முன்னுள்ள பொறுப்பின் சுமையை என்னென்றறிய உணர்த்துகிறது.நம்முடைய பலம் நாற்பத்து நான்கு புள்ளிகள் என்றால் நம்மை எதிர்க்கத் துணிந்தவர்களின் அதாவது பத்துப் பதினைந்து பேர்களின் மொத்தக் கூட்டுப்பலம் ஐம்பத்தாறு புள்ளிகள்.என்பதை நாம் கூட்டிக்கணிக்காமல் மெத்தனமாக இருந்துவிட முடியாது.அறுபத்து ஏழில் மொத்தமாகக் கூடி காமராஜரைக் கவிழ்த்துப் பாவம் செய்து தீர்த்த தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை பற்றி நாம் புரிந்து கொள்ளாமல் இல்லை.அதாவது தமிழ் நாட்டைப் பொருத்தமட்டில் கொள்கை கோட்பாடு என்ற மண்ணாங்கட்டி எல்லாம் எதுவும் கிடையாது.அதாவது தமிழ் நாட்டு அரசியல் என்ன தெரியுமா?மக்களுக்காக் யாரும் அரசியல் செய்தால் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு ஒவ்வாது.ஏனென்றால் அவர்கள் அப்படி அரசியல் செய்தால் இங்கே செழிப்பாக வாழ முடியாதே அதனால்தான். 
இந்தியா அளவில் ஜனநாயக அமைப்புள்ள கட்சிகள் அதாவது யாருக்கும் தனிஉடமை இல்லாத் அரசியல் கட்சிகள் என்று எடுத்துக்கொண்டால்  பொது உடமைக் கொள்கை உடைய இடது சாரிக்ககட்சிகள் மற்றும்.தேசிய கட்சி பாரதிய ஜனதா மற்றும் அஇஅதிமுக போன்ற ஒன்றிரண்டு இயக்கங்கள் மட்டுமே மக்கள் இயக்கமாக மக்கள் ஏற்றுக்கொள்ளும் தலைமை முறை பின்பற்றக்கூடிய இயக்கங்களாக உள்ளன.இப்போதுதான் இந்த உண்மையும் நாட்டுமக்கள் புரிந்து குடும்ப உரிமைக் கட்சிகளை பூஜ்யமாக்கினார்கள் அல்லது ஓரம் கட்டினார்கள்.அதனால்தான் இத்தேர்தலை வர்லாற்றுச்சிறப்புமிக்கது என்று நாட்டுமக்கள் கூறுகிறார்கள்.ஆகவே தின்று கொழுத்த திருட்டாடுகள் ஒன்று சேர்ந்து கட்டுக்காவலை மீறவும் முயர்சிக்கத்தானே செய்யும்.கவனமாக இருந்து நாடு எனும் நந்தவனத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்குத்தானே இருக்கிறது..வெற்றி பெற்றது எவ்வளவு உழைப்போ அதைவிட அதிகமான உழைப்பு அவசியமாகிறது.அதைக் கட்டிக்காப்பதற்கு.ஆகவே இனிமேல்தான் கண்ணும் கருத்தும் கவனமும் அதிகம் தேவை.

நாம் இந்த நாட்டு ஓட்டுவங்கி இருப்பில் பாதிக்கும் மேலான தனிப்பெரும்பாண்மை பெறுவதற்கு இன்னும் ஏழு புள்ளிகள் தேவை என்ற கட்டாயத்தில் உள்ளோம்.ஆகவே இன்னமும் மக்களுக்காகப் பெரும்பாடுபட்டு அவர்களின் வாழ்வு நிலையை உயர்த்த வேண்டும்.நம்முடைய உழைப்பிலும் பொறுப்பிலும் நம் மீது இன்னும் கூடுதலான நம்பிக்கை வைக்கவேண்டும்.

நாட்டின் முழுமையான மின்சாரத் தேவையை நாம் பூர்த்தி செய்தாக வேண்டும்.மின் தட்டுப்பாடு இல்லை என்ற நிலையை உருவாக்கவேண்டும்.
கிராமங்களில் குடி நீர் தாராளமாக கிடைத்திட வகை செய்தல் வேண்டும்.கூட்டுக்குடி நீர் திட்டங்களின் செயல் முறையை கண்காணித்து சீராக செயல்படுத்த வழிவகைகள் செய்திட வேண்டும்.

கிராம இணைப்புச்சாலைகள் அமைக்கும் பனிகள் முழுமை அடையவேண்டும்.இணைக்கப்படாத கிராமங்களைக் கண்டறிந்து இணைக்க வேண்டும்.

பேரூந்துகள் இயக்கப்படக் கூடிய கிராமச்சாலைகள் கூட தூர்ந்தும் சாலைகளின் இருபுறங்களும் முள்மரங்கள் மூடியும் பேரூந்துகளின் ஜன்னல் கண்ணாடிகளை உடைக்கின்றன. மேலும் தேவையான பாலங்கள் கட்டப்படாமல் மழைக்காலங்களில் பேரூந்துகள் இயக்குவது நிறுத்தப்படுகின்றன.

மழைக்காலங்களில் காட்டாற்று வெள்ளத்தால் சிக்கித்தவிக்கும் கிராமங்களை அடையாளம் கண்டு அவைகளின் இன்னலைப்போக்கவேண்டும்.

கிராமங்களை நகரங்களோடு பேரூந்து வசதிகள் மூலம் இணைக்கும் சேவையில் இன்னும் அதிகக் கவனம் செலுத்தவேண்டும்.குறிப்பாக இன்னும் பெரும்பாலான கிராம மக்கள் காலை மாலை நேரங்களில் வேலை வாய்ப்புக்காகவோ அல்லது கல்வி கற்பதர்காகவோ அல்லது மருத்துவ வசதிக்காகவோ செல்லும் அவசரத்திற்கு தகுந்தாற்போல் பேரூந்து வசதி இல்லாமல் அல்லல்படுகிறார்கள் என்பதும் உண்மைதான்.இன்னமும் இரவு நேரங்களில் வீடு திரும்ப பேரூந்து வசதி இல்லாத கிராமங்கள் உள்ளன எனபதும் உண்மையே. அது மாத்திரம் அல்ல இயங்கிக் கொண்டிருக்கும் ஒன்றிரண்டு பேரூந்து சுற்றுகளைக் கூட அதிகாரிகள் திரும்பப் பெற்றுக்கொள்கிறார்கள்.கேட்டால் உள்ளது உங்களுக்குப் போதும். என்று ஏளனம் பேசுகிறார்கள்.

இன்னமும் பெரும்பாலான கிராமங்களில் மகளீர் சுகாதார வளாகங்கள் செய்ல்படாமல்தான் மூடிக்கிடக்கின்றன.

நானும் ஒரு கிராம வாசிதான் என்பதால்தான் அனுபவித்துக்கூறுகின்றேன்.
என்னுடைய கிராமம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொல்லமபரம்பு எனும் கிராமம்.என்னுடைய கிராமத்தில் நான் மேலே கூறியுள்ள அத்தனை குறைபாடுகளும் உள்ளன.அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் செவிடன் காதில் ஊதிய சங்கொலியாகத்தான் வீண் முயர்சியாகிவிட்டன.
ஆகவே இப்படிப்பட்ட பொதுவான குறைகளைக் களைய வேண்டியது அவசியமாகும் போது அதற்கான சிறப்புப் படைகள் அமைத்து உண்மை நிலையை ஆராய்ந்து சீர்படுத்த வேண்டும்.இதற்கான பணிகளுக்கு பட்டதாரி இளைஞர்களைப் பயன்படுத்தலாம்.

நாம் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலுக்குமுன் இக்குறைகளை சரிசெய்ய அம்மாவை வேண்டுவோம்.அனைத்தையும் வெல்வோம்.
நன்றி
கொ.பெ.பி.அய்யா.



Thursday 22 May 2014

நூற்றுக்கு நூறு. கட்டுரை

நூறு விழுக்காடும்(அஇஅதிமுக) நாமாவோம்.

உண்மைதான். திருச்செந்தூர் முத்துசாமி சரவணன்  கூறும் அதே கவலைதான் எனக்கும்.அறுபத்து ஏழில் மாபெரும் சக்தியான காங்கிரசை வீழ்த்த தமிழ் நாட்டில் உள்ள அத்தனை கட்சிகளும் ஒட்டுமொத்தமாக ஒன்று சேர்ந்து கூட்டணி என்ற மாய சக்தியை உருவாக்கியதையும் அரசியல் புனிதத் துறவியான காமராஜரை தோற்கடித்த பாவத்தையும் அன்று தமிழகம்   செய்து தீர்த்தது என்பதையும் நாம் எண்ணித் துணிய மறந்துவிடக்கூடாது.தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகளைப் பொறுத்த மட்டில் கொள்கை என்ற கோட்ப்பாடு மண்ணாங்கட்டி எல்லாம் கிடையாது.இங்கு யாரும் பெருமை அடைந்து நல்லவர் வல்லவர் என்று பெயர் எடுத்துவிடக் கூடாது என்பதில்தான் இங்குள்ள அரசியல் கட்சிகள் சிந்தை கொண்டு அதை செயல் படுத்த எத்தனை கொடியவனான துரியோதனோ துட்சாதனோ எவனாக இருந்தாலும் அவனோடு கைகோர்த்து தர்மத்தை வீழ்த்த தயாராக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

இப்போது நம்முடைய ஓட்டுவங்கியின் கையிருப்பு நாற்பத்து நான்கு சதவிக்தம்தான்.எதிரிகளின் மொத்தத்தில் தனித்தனியே சிந்திக்கிடக்கும் மொத்தக் கூட்டல் ஐம்பத்தாறு சதவிகிதம் என்பதும் நாம் எழுதிப்பார்க்க வேண்டிய விடயம்.ஆகவே நாம் நம்மை எந்த வியூகத்திலும் வெல்ல முடியாத அல்லது எவரும் எதிர்க்கத் துணியாத  மகா சக்தியாக விஸ்வரூபம் எடுக்க வேண்டுமானால் நம் பலம் இன்னும் ஏழு விழுக்காடுகள் கூட்டப்பட வேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்தி அதற்காக செயல்பட வேண்டும்.நம்மையும் அறியாமல் நம்மிடம் ஏதாவது குறைபாடுகள் உள்ளதா என்பதை நம்மை நாமே சுயபரிசோதனைகள் செய்துகொள்ள நாம் தயாராக வேண்டும்.அரசு நிர்வாகத்தில் ஊழல் என்பது ஒரு தீராத தொற்று நோயாக உள்ளது. அதை குணப்படுத்தினாலே 
மற்றெல்லாம் தானாகவே சரியாகிவிடும்.ஆகவே அதற்கான சரியான மருத்துவம் என்ன என்பதைத்தான் நாம் தீவிரமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
அதற்காக நாம் முனைப்போடு செயல்படுவோம்.நம்மை நாமும் சுய பரிசோதனை செய்து நம்மை நாமே புனிதமாக்கிக்கொள்ள துணிவோம்.கவனமாக இருப்போம்.கடமைகள் ஆற்றுவோம்.மக்களுக்காக வாழ்வோம்.காவலாக இருப்போம்.மக்களின் நன்மதிப்பை நூறு விழுக்காடும்
பெற்றிடவே உழைப்போம் உயர்வோம்.

மக்கள் சேவையே மகேசன் சேவை எனும் புரட்சித்தலைவரின் மந்திரச்சொல்லை உச்சரிப்போம்.உண்மையான சேவையை உறுதியேற்று செய்வோம்.மக்கள் நம்மை எண்ணி இதயத்தில் பூரணமாக ஏற்றுக்கொள்ள மக்களுக்காக உழைப்போம்.மக்கள் மனங்களில் நிறைவோம்.சமயம் பார்த்துக் காத்திருக்கும் சண்டாளர்களையும் மனமாற்றம் செய்ய சேவையாற்றுவோம்.நமக்கு இங்கு எவரும் நமக்கு எதிராக சிந்திக்கக்கூடிய எதிர் சிந்தனையாளர்கள் இல்லை எனச்செய்வோம்.ராம் ராஜ்ஜியம் காண்போம்.

நேற்றுவரை நாம் வெற்றிக்காக உழைத்தோம்.இனிமேல்தான் நாம் கவனமாக காய்களை நகர்த்த வேண்டும்.வெற்றி பெற்றது எவ்வளவு உழைப்போ அதைவிட அதிகமான உழைப்பு அவசியமாகிறது.கவனம்.
1 hr · Like · 1

நன்றி.

கொ.பெ.பி.அய்யா.

நாங்க ரெடி நீங்க ரெடியா?

நாங்க ரெடி நீங்க ரெடியா?

நாங்க ரெடி நீங்க ரெடியா சொல்லுங்க
தூங்க மனமில்ல தூரமும் இல்லே
ஆங்குறதுக்குள் அது வந்துடும்போலே
அள்ளுவோம் இருநூத்தி முப்பத்து நாலே(நாங்க)

இரண்டு வருஷம் உருண்டுதானே
ஓடியும் போகும் நிமுசத்திலே
கரண்டுல மாட்டுன காக்காக் கூட்டம் 
கிரங்கிக் கிடக்குது பாவத்திலே
இருக்குது இன்னும் தெளியட்டும் கொஞ்சம்
அடிச்சுப் பாக்கலாம் நேரத்துலே (நாங்க)

கேட்கா தெல்லாம் கிடைக்கிறபோது
கேட்குற அவசியம் இருக்காது.
நெனைக்குற முன்னே அடைகிறபோது
நெஞ்சுல சுமையும் அழுத்தாது.
காக்குற அம்மா கடவுளா இருக்க
கருப்பனும் மாடனும் கறுப்புகள் எதுக்கு? (நாங்க)
      
வெளிநடப் புன்னுசொல்லி வீணாக்கூடி
வராண்டா நின்னு படிவாங்கிப் போற
பொறுப்பில்லா இவங்க பருப்பு ஏங்க
நெருப்புல கெடந்து அவிக்கணும் நாங்க.
ஏழைய நெனச்சு வேலையைப் பாக்குற
ஆளணும் அம்மா ஆண்டாண்டும் நீங்க! (நாங்க)

திருவரங்கத் தாயே திருவருள் தாயேன்
ஸ்ரீரங்க நாதன் ஒருமகள் நீயே
தமிழ்நாட்டு மக்கள் நம்பிக்கை ஒளியே
தரணியில் தர்மத்தின் தமிழ்கண்ட வழியே
கோட்டையின் அழகே கொடிமரப்புகழே
நாட்டாள இறையே வரமென்றான் உனையே!நாங்க)

கொ.பெ.பி.அய்யா.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvLs5dihAw7D1X9NTKbG7Bg0Cy3QxOS4H9RF5D58hIn8RqNpfCWVohyjs9OmMKnJBFqrpcZ1GMh01aq76TA7g0koGRNcFDFqikCKX4iR-X-NDIVE6Wrn4HXKmEJCI4nlM35PaOYJG3H67x/s1600/10401927_1476239849279216_8282357706895577770_n.jpg

Wednesday 21 May 2014

நமது இயக்கம்.

நமது இயக்கம்.

புரட்சித்தலைவர் எம்ஜியாரின் இதயத் துடிப்புக்களான இளைய இரத்தங்களே இனிய வெற்றிக்கால வாழ்த்துக்கள்.இன்றைய மகத்தான வெற்றி புதிய சிந்தனை நிறைந்த இளைஞர்களாகிய உங்களின் உழைப்பும் பேராதரவும் என்றும் நமது இயக்கம் நன்றாகவே புரிந்து கொண்டுள்ளது.

அஇஅதிமுக இயக்கம் தனிப்பட்ட யாருக்கும் சொந்தமென உரிமை கொண்டாடக் கூடியது அல்ல.இது ஒரு திறந்தவெளி ஜனநாயக இயக்கம்.ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் கைக்குள் சிக்கி அவர்களின் தலைமுறை வாரிசுகள் மட்டுமே மகன்கள்,பேரன்கள்,கொள்ளுப்பேரன்கள் என்று பழைய மன்னர் கால ஆளுமை முறை இயக்கம் அல்ல இது.இது நமது இயக்கம்.மக்கள் செல்வாக்குள்ள சேவை மனப்பான்மை கொண்ட எவரும் தலைமை பொறுப்புக்கு வரலாம் என்பதே அன்று புரட்சித் தலைவர் வகுத்த தத்துவம்.

இதன் உண்மையை இன்றைய இளைய தலைமுறை நன்றாகவே புரிந்து கொண்டுள்ளது என்பதை இத்தேர்தல் நமக்கு விளங்க வைத்துள்ளது.இததேர்தலில் முதன் முதலாக வாக்களித்துள்ள புதிய வாக்காளர்கள் வாக்களித்த விதம் நமக்கு உணர்த்துகிறது.தமிழ் நாட்டில் ஆனாலும் சரி அகில இந்தியாவில் ஆனாலும்சரி குடும்பத் தலைமுறைக் கட்சிகள் பூஜ்யமாக்கப்பட்டுள்ளன அல்லது ஓரம் கட்டப்பட்டுள்ளன என்பதிலிருந்தே நாம் விளங்கிக்கொள்ளலாம்.

ஆகவே நமது இயக்கத்தின் எதிர்காலம் இன்றைய இளைஞர்களின் கைகளில்தான் ஒப்படைக்கப்பட இருக்கிறது.இதை சிந்தையில் வைத்துக்கொண்டுதான் நமது அம்மா புரட்சித் தலைவி அவர்கள் இளைஞர்களின் எதிர்கால வளர்சிக்கு வேண்டிய அனைத்து வளர்சித் திட்டங்களையும் தொலை நோக்குப் பார்வையோடு கல்வி மேம்பாடு, விளையாட்டு மேம்பாடு,சுகாதார மேம்பாடு என அதிகப்படியான நிதிகளை ஒதுக்கி மேபடுத்தி வருகிறார் என்பதை இளைய சமுதாயம் மனதில் பதித்துக்கொண்டு அம்மாவின் வழியைப் பின்பற்றி அவரது கரங்களுக்கு நீங்கள்தான் வலிமையாக அமைய வேண்டும்.அம்மாவின் கனவே நீங்கள்தான்.

இன்றைய சமுதாய வளர்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் ஊழல் பேயை விரட்டி ஓட்டும் பொறுப்பை உங்களிடம் எவ்வாறு ஒப்படைக்கலாம் என்பது பற்றித்தான் நமது அம்மா அவர்கள் ஆழமாக சிந்தித்து செயல்விளக்கம் தர திட்டங்கள் தீட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.உங்கள் எதிர்காலம் உங்கள் கையில் என்ற முனைப்போடு செயலாற்றவும் உங்கள் இயக்கம் உங்களுக்காக என்ற உணர்வோடும் நீங்கள் நமது இயக்கத்தோடு இணைந்து உரிமையோடு ஒத்துழைத்து செயலாற்ற வேண்டும் என்பதே அம்மாவின் ஆசையாகும்.

அன்று புரட்சித்தலைவர் அம்மாவின் கரங்களில் எவ்வாறு நம்பிக்கையோடு இயக்கத்தின் பொறுப்புக்களை ஒப்புக்கொடுத்தாரோ அவ்வாறே நாளைய நம்பிக்கையான உங்கள் கரங்களில் உங்கள் இயக்கம் அம்மா அவர்களால் ஒப்படைக்கப்பட இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

இன்றைக்கு ஏனைய குடும்ப இயக்கங்கள் தங்கள் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் எத்தனை முறை ஆராய்ந்தாலும் கிடைக்கும் விடை ஒன்றுதான்.எப்பொழுது ஒரு இயக்கம் பொதுஉடைமை என்ற நிலை தவறி சுய உடைமை என்ற நிலைக்கு மாறுகிறதோ அப்போதே அது மக்களின் நெஞ்சங்களை விட்டு  அகன்றுவிட்டது அல்லது மக்கள் அதை மறந்து அதன் அடையாளத்தை அழித்துவிட்டனர் என்பதே நிசமாகும்.ஏமாற்று வித்தைகள் எல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான்.மக்கள் இப்போது விழித்துக்கொண்டார்கள்.முன்போல் எதைச்சொன்னாலும் தலை ஆட்டும் நிலை இப்போது இல்லை.அலங்காரச்சொற்களுக்கு மயங்கி அடிமைப்பட்ட காலங்கள் மாறிவிட்டது.மக்கள் உண்மையைத் தேட முனைந்து விட்டனர்.இனி எதிர்காலம் சுபிட்சமாகும்.

ஒரு நாடு பரிபூரண வளர்சியை எட்ட வேண்டுமானால் அம்மாவைப்போன்ற ஆளுமைத்திறன் படைத்தவர்களிடம் தொடர்ந்து ஆட்சிப்பொறுப்பை ஒப்படைக்கவேண்டும்.அதைவிடுத்து சுயநலவாதிகளிடம் ஒப்படைத்தால் சுத்தமாக சுரண்டப்படும்.ஆகவே உண்மைகள் உணர்ந்துகொள்ளப்படும் போது.நன்மைகள்  தானாக வந்தடையும்.இனி வேலை வாய்ப்புகள் பெருகும்.விவசாயம் செழிக்கும்.பொருளாதாரம் சீரடையும்போது விலைவாசிகள் தானாக வீழ்ச்சியடையும் பொருளாதாரம் சீரடைய நாம் ஒத்துழைக்கவேண்டும்.இத்தனையும் சாதனை ஆகும்.அம்மாவின் கரங்களை வலுப்படுத்துவோம்.இளைஞர்களே ஒன்றுகூடுங்கள்.கரம் கொடுங்கள்.

ஸ்ரீரங்கம் எந்நாளும் நமது கழக அரங்கம்தான்.வெல்வோம் திருவரங்கம் சொல்வோம் அம்மாவின் புகழ் விளக்கம்.எதிரிகள் எவர்க்கும் உதிரி ஓட்டுக்கூட ஒன்றுமில்லையென பதிலாய் பாடுபடுவோம்.அம்மாவே தமிழ்.அம்மாவே தமிழகம்.அய்யன் எம்ஜியார் புகழே அனைத்து வெற்றிகளும்.
வாழ்க எம்ஜியார் நாமம்.
நன்றி

கொ.பெ.பி.அய்யா.




Tuesday 20 May 2014

அம்மாவை நினை.

அம்மாவைப் பார்!

அம்மா பார் அம்மா பார்!
ஆதி சக்தி அம்மா பார்!
சும்மா இல்லை சாதனை பார்!
சோதனை என்ன செய்யும் பார்!

எதிர்ப்போர் தீய எண்ணம் பார்!
எதிர்க்கும் தாய்மை திண்ணம் பார்!
அதிரும் எட்டுத் திக்கும் பார்!
புதிரும் பட்டு மக்கும்  பார்!

தளபதி நமது தாயைப் பார்!
எழுவது கடமை தீயைப் பார்!
களமெதிர் யாரே காணும் பார்!
தொழுவது நேரே தோணும் பார்!

ஆணை இடுவார் அம்மா பார்!
ஆவன முடிப்பார் செம்மார் பார்!
தீவினை தொடுப்பார் தீர்வார் பார்!
தீர்வினை நடுவார் தாய்தான் பார்!

காலம் கூறும் காட்சியும் பார்!
ஞாலம் தேறும் சாட்சியும் பார்!
கோலம் மாறும் மீட்சியும் பார்!
சீலம் சேரும் ஆட்சியும் பார்!

மக்கள் சிந்தனை அம்மா பார்!
வெக்கம் கொண்டன வெம்மை பார்!
தக்கும் தன்னிலை செம்மை பார்!
ஒக்கும் இந்திரம் இம்மை பார்!

கொ.பெ.பி.அய்யா.
 — 

இதுசத்தியம்.


இது சத்தியம்.

இரட்டை இலைக்கு ஒரு
சக்தி இருக்கு-.அம்மா
இரட்டை விரலுக்குள் ஒரு
வித்தை இருக்கு.
எம்ஜியார் சொன்னதிலும்
ஏதோ இருக்கு-அவர்
இன்றும் வாழ்வதாக
அர்த்தம் இருக்கு.

கண்ணில் கண்டதுமே
காந்தம் இழுக்கு.-வெற்றி
எம்ஜியார் என்றந்த
இரட்டை இலைக்கு.
எண்ணத்தில் வேறென்ன
சின்னம் இருக்கு?-என்றும்
மண்ணில் வேறென்ன
மாற்றம் இருக்கு?

பார்க்கும் இடம் எங்கும்
பச்சை இலைகள்-உண்மை
பாசத் தலைவனின்
நேச அலைகள் .
வண்ணம் போலவே
எண்ணம் நிலைகள்-என்றும்
சின்னம் வெல்லுது
இரட்டை இலைகள்.

விண்ணும் மண்ணும்
இருக்கும் மட்டும்—உயிர்
என்னும் இதயம்
துடிக்கும் மட்டும்
மனிதம் உலகினில்
வாழும் மட்டும்-எம்ஜியார்
இரட்டை இலைதான்
வெற்றி மட்டும்.


கொ.பெ.பி.அய்யா. கொ.பெ.பி.அய்யா. 

நீதான் அம்மா.

அம்மா அம்மா

அம்மா! அம்மா! நீதான் அம்மா
அன்னபூரணி அம்மா! அம்மா!
அம்மா உணவகம் அட்சயபாத்திரம்
அருளிய அம்மா நீதான் அம்மா.!

கூலிக்கு உழைக்கும் ஏழையின் வயிறு
வேளைக்கு உணவு நிறம்பிடும் பரிவு
யாருக்கு விளங்கும் பாமரன் துயரு
பாருக்கும் சொன்னாள் ஊருடன் பழகு.

ஆலயம் தோறும் அன்னதானம்.
ஆற்றும் பசியை அம்மா ஞானம்
ஊழையும் வென்ற உன்னதம் காணும்
ஏழைக்கு ஏது நாளைய கவனம்.

அம்மா!சோறு எனும் குரல் இல்லை.
ஆரும் ஏந்தும் அவலம் இல்லை.
பிச்சை என்றொரு பேச்சிங்கு இல்லை.
பிள்ளைச் சோறும் கேட்பாரில்லை.

வறுமை என்றொரு கொடுமை இல்லை.
வயது முதிர்ந்தும் சிறுமை இல்லை.
அருமை குறைந்தொரு அநாதி இல்லை.  
பெருமை சிதைந்தொரு நிலைமை இல்லை.

ஏழை என்றொரு சொல்லிருந்தாலும்
ஏழ்மை என்றிங்கு துயரம் இல்லை..
அம்மா என்றொரு முத்திரை பதிப்பில்
அனைத்தும் கிடைக்கும் மலிவது விலையில்.

உயர்நிலை மருத்துவம் விலையில்லாமல்
உனது அம்மா அரசது உரிமையில்.
எதுவும் எட்டாத் தூரமும் இல்லை.
எல்லாம் எல்லார்க்கும் என்பதே எல்லை.


கொ.பெ.பி.அய்யா.


Monday 19 May 2014

அம்மா உன்னைப் பாட.....

அம்மா உன்னைப் பாட...........

அம்மா உன்னைப் பாட நான்
ஆயுள் கொண்டேனே! அது
சும்மா இல்லை எந்தன்
நன்றிக்கடன் தானே.

பள்ளியில் பிள்ளையை சேர்த்தது
மட்டும் நானம்மா! அவனை
படிக்க உதவியது நீயம்மா!
பட்டம் தருவதும் நீயம்மா!.

பெண்ணை அவளை பெற்றது
தானே நானம்மா! அவளை
கண்ணாக வளர்த்ததும் நீயம்மா!
கண்ணாலம் செய்ததும் நீயம்மா!.

மனிதன் என்னை ஈன்றது
தானே தாயம்மா! என்னை
மனிதனாக மதித்ததும் நீயம்மா!
மனைகட்டிக் கொடுத்ததும் நீயம்மா!.

பிள்ளை குட்டி பெற்றது
தானே நானம்மா! வாழ
ஆடுமாடு அளித்ததும் நீயம்மா!
ஆதாரம் தந்ததும் நீயம்மா!.

கடனும் பட்டுக் கெட்டது
தானே நானம்மா! கடனை
கட்டிமுடித்து வாழவைத்ததும் நீயம்மா!.
நட்டிய பசுமையும் நீயம்மா!.
                                  
நோயாய் அன்று நொந்தது
தானே நானம்மா!நோயை
போக்கிய தாயே நீயம்மா!
புண்ணிய மாதா நீயம்மா.!

வெறும் வீடு மட்டும் கட்டியது
தானே நானம்மா!நிறைந்த
வீட்டில் மங்களம் நீயம்மா!
வேண்டிய தெல்லாம் நீயம்மா!

ஏழை என்றே பட்டேன் 
தானே நானம்மா! ஏழை
உயர ஏணியானது நீயம்மா!
உண்மை தெய்வம் நீயம்மா!


கொ.பெ.பி.அய்யா.

Sunday 18 May 2014

வெற்றிக் கனிகள்.

வெற்றிக்கனிகள்.

முப்பத்து ஏழு வெற்றிக் கனிகள்.
இப்போது ஆளும் இந்திய மணிகள்.
செப்பம் அம்மா சீர்வளர் பணிகள் 
எப்போது மேற்றும் நேர்மன அணிகள்.

இந்திய வரலாறு இன்றும் எழுதும்
முந்திய தமிழின் முன்னுரை முழுதும்.
பிந்திய நாளில் ஒன்றென அம்மா
சந்தியா மகளென சாதனை பதிக்கும்.

ஒற்றை அல்ல ஓராயிரம் கோடி
பற்றிய தமிழின தாயிடம் தேடி
வெற்றி வெற்றி எனவீரம் பாடி
சுற்றினோம் முப்பத்து ஏழும் சூடி.

தமிழினம் இன்று தரணியில் வென்று
தலைநேர் நிமிர்ந்து பரணியில் பகிர்ந்து  
உலகம் வியந்து உற்றுப் பார்க்க
திலகம் சூட்டிய அம்மா வாழ்க!

கொ.பெ.பி.அய்யா.


Saturday 17 May 2014

அம்மா அலை.

அம்மா அலை.

எந்த அலைதான் வந்தால் என்ன
இந்த இலைதான் எதிற்கும் அண்ணே  .
வந்த அலைதான் என்ன செய்யும்.
இந்த இரட்டை இலைதான் வெல்லும்..

அம்மா அலைதான் அதற்கும் மேலே
அடித்துப் போகும் சுனாமி போலே
எம்மா அலைதான் ஆட்டும் வாலை
எதையும் வெல்லும் அம்மா அலை.

இமயம் போலே எங்கள் அம்மா
எதிற்கும் வேகம் எல்லாம் சும்மா.
சமயம் எழுந்து சாதிக்க நின்னா
சுனாமி என்னா பிரளயம் என்னா?

சாதி சமயம் பேதங்கள் சொல்லி
வீதி சிவந்தால் வேட்டை அள்ளி
ஆதித் தமிழன் அலையெனத் துள்ளி  
அம்மா எழுவாள் அவனது கொள்ளி.  

தமிழ் எனச்சாதி கொண்டோம் இங்கே
திராவிட மதமே கண்டோம் இங்கே
சாதி மதங்கள் கடந்தோம் இங்கே.
நீதி அலைதான் வென்றது இங்கே.

வங்கக் கரையில் சிங்கங்கள் இரண்டு
தங்கத் தமிழுக்கு காவல் கொண்டு
பங்கம் செய்யும் அலைகளை வென்று.
தங்கும் அம்மா அலைமட்டும் ஒன்று.


கொ.பெ.பி.அய்யா.