Wednesday 28 March 2018

நாடு போற போக்கு.

நாடு போற போக்கு ரொம்ப நல்லாவே இருக்கு-சில
கேடு கெட்ட மனுசங்களுக்குத்தான்
கிறுக்கு பிடிச்சிருக்கு.
பாடு படும் பாட்டாளிக்கு கைகள் நிறைஞ்சிருக்கு-ஆனா
சூடு பட்ட பூனைங்கதான் ஏங்கித் திரியிது.

ஆடும் மாடும் அள்ளிக் கொடுக்கிறது செல்வம்.
வீடும் வசதியும் சொல்லிக் களிக்கிறது
இன்பம்.
ஏடும் கணிணி சீறுடை சைகிள் எல்லாம்
தேடும் கல்வி பள்ளிக் கூடம் சொர்கம்.

தேசியத் தரமாய் சாலைகள் அழகு.
கூசிய வெளிச்சம் விளக்குகள் தெருவு.
வாசிக்க படிப்பகம் வளர்த்திட அறிவு.
பூசிக்க உணவகம் பசியாற பரிவு.

தடையிலா மின்சாரம் கிடைத்திடும் அருமை
அடையாளம் அம்மாவின்  ஆட்சிக்கு
பெருமை.
கிடையாது ஏழை. உடையதார் வறுமை?
அடையாத தொழிலும் அம்மாவின் திறமை.

காவிரிக்கும் விடுதலை கட்டாயம் கிடைக்கும்.
பூவிரிக்கும் ஆணையம் பூட்டெல்லாம் உடைக்கும்.
விவசாய இடுபொருட்கள் விலையின்றி படைக்கும்.
விவசாயி ஆட்சியிது விவசாயம் செழிக்கும்.

கவிஞர்.கொ.பெ.பி.அய்யா.