Wednesday 29 June 2016

கட்டுரை

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகு

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகு அதே போன்ற ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை தமிழக அம்மா  தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்கியுள்ளார்கள். அம்மா என்றும் மக்கள் பக்கம் தான், மக்கள் என்றும் அம்மா பக்கம் தான் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன. அம்மா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தியுள்ளது.
அதற்கு மக்கள் அளித்த அங்கீகாரம் தான் இந்த தேர்தல் வெற்றி. தி.மு.க ஊடகங்கள் வாயிலாகவும், பிரச்சாரங்கள் மூலமும் பல்வேறு பொய்களை கட்டவிழ்த்துவிட்டனர். அவர்களது பொய் குற்றசாட்டுகளை மறுத்து விளக்கங்களை அளித்தாலும், அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், கோயபல்ஸ் பாணியில் தாங்கள் சொன்ன பொய்களை திரும்ப திரும்ப சொல்லி வந்தனர். அம்மா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசை பற்றி கற்பனை குற்றசாட்டுகளை அள்ளி வீசினர். ஆனால், இவ்வாறெல்லாம் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என்பதை இந்த வெற்றியின் மூலம் தமிழக மக்கள் நிரூபித்துள்ளார்கள். தமிழக மக்களை, அதிலும் குறிப்பாக ஏழை, எளிய மக்களை காக்கும் இயக்கம் அ.தி.மு.க தான் என்பதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்த காரணத்தால் தான் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை அம்மாவுக்கு வழங்கியுள்ளார்கள்.
தேர்தல் நடைபெற்ற 232 சட்டமன்ற தொகுதிகளில் 134 இடங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை வெற்றி பெற செய்துள்ளார்கள். அம்மா மீது தளராத நம்பிக்கை வைத்துள்ள தமிழக மக்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை வழங்கியதற்காக அம்மாவின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியினை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மா ஏற்கெனவே சொல்லியதைப் போல தமிழக மக்கள் பால் அம்மாவுக்குள்ள நன்றியுணர்வை வெளிப்படுத்த அகராதியில் போதிய வார்த்தைகளே இல்லை. தமிழக மக்கள் நலனுக்காக அம்மா புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு தனது நன்றியை செயலில் காண்பிப்பார் என்ற உறுதியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தேர்தல் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு உழைத்த எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான, அம்மாவின் உயிரினும் மேலான அருமை கழக உடன்பிறப்புகளுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், தோழமை கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் அம்மாவின் சாட்சியாக நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

வரலாற்றைத் தீர்மானிப்பது மக்களே ! மக்களை முட்டாள்கள் என்று நினைப்பவர்கள்தான் முட்டாள்கள்! தமிழகத்தில் மக்களின் சமூக உளவியல் மிக வியப்பாக இருக்கிறது. சாதி, மதம், சினிமா ஆகியவை வேறு... அரசியல் வேறு என்று தெளிவாக இருக்கிறார்கள். ஒருவர் ஒரு நடிகரின் தீவிரமான ரசிகராக இருக்கலாம். ஆனால் அதற்காக அந்த நடிகரின் அரசியலை ஏற்றுக்கொள்பவராக இருக்கமாட்டார். திருமணம் போன்ற குடும்ப உறவுகளில் தனது சாதியை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் அதற்காகத் தேர்தல் அரசியலில் தனது சாதியின் பின்னால் சென்றுதான் ஆகவேண்டும் என்று நினைக்கமாட்டார். அதுபோன்றுதான் குறிப்பிட்ட மதத்தில் பற்றுடையவரும். இது வேறு .. அது வேறு என்று தெளிவாக மக்கள் இருக்கிறார்கள். எனவேதான் சாதிகளை அடிப்படையாகக்கொண்ட சில கட்சிகள் தாங்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்று கூறுவதை இன்று நாம் பார்க்கலாம். பிரபலமான நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்குப் பயப்படுவதும் அதனால்தான்!. மதத்தை அடிப்படையாகக்கொண்ட கட்சிகள் தாங்கள் அவ்வாறு இல்லை என்று காட்டிக்கொள்ள முயலுவதையும் பார்க்கலாம். இன்றைய தேர்தல் அரசியலில் மதம், சாதி, சினிமா ஆகியவற்றின் சில பாதிப்புகள் காணப்பட்டாலும், அவை பிரதானமான அம்சமாக இல்லை என்பதே உண்மை. ஆராயப்படவேண்டிய ஒரு சமூக உளவியல் அம்சம் இது!

இன்று நம் உயிரினும் மேலான அதிமுக தனிப்பெரும் கட்சியாக 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது என மகிழ்வான இந்த நேரத்தில் நம் கழகத்தின் முக்கிய நபர்கள் தோல்வியை தழுவியுள்ளனர். ஏன் இந்த தோல்வி என்பதை நாம் சுய பரிசோதனை செய்வது முக்கியமான ஒன்று. மக்கள் நல திட்டங்கள் என அம்மா அவர்கள் செய்த சாதனைகளையும் தேர்தல் அறிவிக்கையையும் கழக நிர்வாகிகளும் வேட்பாளர்களும் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. மேலும் பதவி வந்தவுடன் கர்வத்துடனும் தார்மீக நடவடிக்கையுடனும் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் தொண்டனை மதிக்காததும் தான் முதல் காரணம். மேலும் மாநகராட்சி மேயராக பதவி வகித்த சிலரும் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பலரும்  அம்மா அவர்கள் நல திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியினை பெற்றும் அந்த நல திட்டங்களை விரைந்து செய்யாததும் ஒரு காரணம்தான்.இன்னொன்றும் நான் சொல்லித்தான் ஆகவேண்டும்.உள்ளாட்சி உறுப்பினர்கள்  தங்கள் பகுதி மக்களிடம் நெருக்கமான அணுகுமுறை வைத்துக்கொள்வதற்கு பதிலாக அவர்களின் ஆதரவும் அனுகூலமும் இல்லாமல் நாம் மீண்டும் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இயலாதது என்பதை மறந்தும் தங்கள் கடமையை புறக்கணித்தும் முகம் சுளிக்கும் விதத்திலும் நடந்துகொண்டதும்தான் நகரப்பகுதிகளில் நடுநிலை மக்களின் ஆதரவை இழக்கக் காரணமாக அமைந்துள்ளது என்பதும் மறுப்பதற்கில்லை.ஆகவே இன்று மக்களின் எண்ணங்களில் இவ்வாறாக ஆட்சிக்கு அவப்பெயரை உருவாக்கும்இப்படிப்பட்ட எதிர்வினை உள்ளாட்சி அமைப்புகள் தேவைதானா எனற பொதுவான கருத்தும் நிலவி வருகிறது என்பதும் உண்மை.ஆகவே அரசியலை ஒரு தொழிலாகக் கருதாமல் மக்கள் தொண்டாகக் கொண்டு செயல்பட முனைபவர்களை அடையாளம் கண்டு பொதுவாழ்வுக்கு கொண்டுவர அம்மா ஆலோசிப்பதையும் நான் உணர்கிறேன்.  எனவே இனிமேலாவது வெற்றி பெற்ற நம் கழக உறுப்பினர்கள் பதவி வந்து விட்டதால் மமதை இல்லாமல் உங்கள் பணிவை மக்களிடம் காட்ட தயாராகுங்கள். இரவு பகலாக உங்களுக்காக பாடுபட்ட என்னை போல் தொண்டனுக்கு எதுவும் செய்ய வேண்டாம். அன்புடனாவது பேச பழகுங்கள் அடுத்த தேர்தலில் 234 ம் நமதே.

கொ.பெ.பி.அய்யா.

Monday 27 June 2016

கல்வி சிறந்த தமிழ்நாடு.

கல்வி சிறந்த தமிழ் நாடு.

"இந்தியாவில் கல்வி சிறந்த நாடு
சந்தியாவின் புதல்வி அரசாளும் தமிழ்நாடு"
என்பதற்கு முன்னுதரணமாக இன்று அம்மாவின் தமிழாட்சி மாநிலம்
தமிழ்நாடு விளங்குகிறது.

எந்தவொரு நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறதோ அந்தவொரு நாடுதான் சகல துறைகளிலும் சிறந்துவிளங்கும் என்ற கோட்பாட்டிற்கு இணங்க தமிழ்நாடு கல்வி உயர்ந்த நாடு என்ற பெருமையை எட்டும் வகையில் அம்மாவின் அரசு கல்விக்கு முக்கியத்வம் கொடுத்து வருகிறது.

அனைவர்க்கும் கல்வி. கல்லாரே இல்லார் என்ற குறி நோக்கோடு நூறு சதவிகிதம் கல்வி பெற்ற மாநிலம் தமிழ்நாடுதான் எனும் பேரு பெற பலப்பல திட்டங்களை அம்மா தீட்டி செயல்படுத்தி வருகிறார்.அவற்றில் சில இங்கே காண்போம்:-

1)கல்வி முன்னேற்றத்திற்குப் பெரும் இடையூறாக இருப்பது வறுமைப்பட்ட மாணவர்கள் தொடர்ந்து கல்வி பெற முடியாமல் சமூகம் மற்றும் குடும்பச்சூழலின் காரணமாக இடைநிற்றல் என்பதாகும். அவ்வாறான இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் மாணவர்கள் கல்விச்சாலைகளுக்கு சென்றுவரத் தேவையான விலையில்லாச்சைக்கிள்,பாடங்களைப் பதிவிறக்கம் செய்து கற்கத் தேவையான மடிக்கணினி,விலையில்லாப் பாடப் புத்தகங்கள்,காலணிகள்,சீருடைகள்,மற்றும் காலையில் உணவுக்காக காத்திராமல் சரியான வேளைக்குப் பள்ளிக்கு செல்ல ஏதுவாக ஆரம்பக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு காலைச்சிற்றுண்டி வழங்கவும்,மதிய வேளை முட்டையுடன் சத்தான உணவு பள்ளிகளில் தொடர்ந்து வழங்கிடவும் அம்மா ஆணை பிறப்பித்துள்ளார்.

2)ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்கு ஒரு உயர்நிலைப்பள்ளி என்ற நிலை நூறுசதவிகிதம் எட்டும் நிலையை அடைய மேலும்மேலும் உயர்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு அம்மா உத்தரவிட்டுள்ளார்.

3) மாநிலத்தில் உள்ள 5265 பள்ளிகளிலும் கணினி வழியாக ஸ்மார்ட் வகுப்புக்களை இந்த கல்வி ஆண்டுக்குள் தொடங்கிடவும் கல்வித்துறை அம்மாவின் ஆணையால் முடுக்கி விடப்பட்டுள்ளது..

4)அரசுப்பள்ளிகளில் 5865 ஆசிரியர் காலிப்பணியிடங்களும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிராக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடித்து வைக்கப்பட்டவுடன் உடனடியாக நிரப்ப நூறு சதவிகிதம் அரசு தயார் நிலையில் உள்ளது.

5)9,மற்றும் 10 ம் வகுப்புக்களில் தொழிற் கல்வி பாடத்திட்டம் கொண்டு வர அம்மாவின் அரசு முடிவு செய்துள்ளது.இதன்மூலம் ஏட்டுச்சுரைக்காய் வீட்டுக்கு உதவாது என்ற நிலை மாறி இளைஞர்கள் சுயகாலில் நிற்பார்கள் என்பதும் உறுதியாகிறது.

6)அம்மாவின் ஆணைக்கிணங்க வெளியூர்களில் கல்விபயிலும் மாணவர்க்கான அரசு விடுதிகள் அனைத்தும் அனைத்துவசதிகளுடன் கூடிய
அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் இயங்கும் வேகத்தில் கட்டிடப்பணிகள்
நடைபெற்று வருகின்றன.மேலும் 845 பள்ளிகளில் ரூபாய் ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கட்டிடப்பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளன.

ஒரு மாநிலம் தன் வளர்சிப்பாதையில் சென்றடையும் வேகம் சிதை படாமல் இருக்கவும், சென்றடையும் இலக்கும் எட்டப்பட வேண்டுமானாலும் ஆட்சி மாற்றம் எனும் தடங்கல் இல்லாமல் தொடரும் பட்சத்தில்தான் வளர்ச்சி என்பதும் சாத்தியமாகும் என்பதை சரியாகப் புரிந்து கொண்ட தமிழக மக்கள் அம்மா மீண்டும் ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்க கடந்த தேர்தல் மூலம் சரியான தீர்ப்பை வழங்கியமைக்கு தமிழக மக்களுக்கு கோடானுகோடி நன்றி சொல்வோமாக!

அம்மாவின் தீர்க்க தரிசனம் 2023- 100%வெற்றியடையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

நன்றி தமிழ்ச்சொந்தங்களுக்கு.

கொ.பெ.பி.அய்யா.


Sunday 26 June 2016

கட்டுரை.பெட்ரோல்

விலைவாசியின் ஆணிவேர்?

பெட்ரோலும், டீசலும்தான் விலைவாசியை நிர்ணயிக்கும் ஆணிவேர் என்றால் யாராலும் மறுக்க முடியுமா?கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பெட்ரோல்-டீசல்விலை ஆறுமுறை உயர்த்தப்பட்டுள்ளது.ஆனாலும் ஒருமுறைகூட கடந்த ஆறு ஆண்டுகளில் அம்மாவின் தமிழ் நாடரசு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியதுண்டா?.எதற்கெல்லாமோ காட்டுக்கூச்சல் போடும் எதிர்க்கட்சிகள் அவ்வப்போது உயர்த்தப்படும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிரான அம்மாவின் சவாலை பாராட்டும் பக்குவம் உண்டா?

சில விவசாய விளை பொருட்களின் விலை அவ்வப்போது பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் விலை ஏற்றங்கள் என்பதும் தவிர்க்க முடியாதுதான்.அதுவும் தற்காலிகமானதுதான் என்பதும் எல்லோர்க்கும் தெரிந்த உண்மைதான்.தக்காளி ஒருகிலோ ஆறு ரூபாய்க்கு விற்றால் நுகர்வோர்க்கு சேமிப்பு மிஞ்சுகிறது.அதேவேளை அது விவாசாயிக்கு பொருளாதார இழப்பு என்பதையும் நம்மில் எத்தனை பேர் உணர்கிறோம்?

பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயம் செய்துகொள்ள அதை விநியோகம் செய்வோர்க்கு அதிகார உரிமை வழங்கியுள்ள நடுவண் அரசு உணவுப்பொருட்களை உற்பத்திசெய்யும் விவசாசியிக்கு தங்கள் விளை பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்யும் உரிமை பெற அனுமதிக்குமா?ஏனிந்த பாரபட்சம் என்று கேட்கும் தைரியம் அம்மாவைத் தவிர எவர்க்கிருக்கும் இந்த இந்திய நாட்டில்?

விலைவாசி உயர்வுக்கு மூன்று அடிப்படைக் காரணங்கள் உள்ளன.அவை
பணவீக்கம்,பற்றாக்குறை,மற்றும் போக்குவரத்து.சரக்குப் போக்குவரத்துக்குப் பயன்படும் கனரக வாகனங்கள் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு ஏற்படும் போதெல்லாம் அதன் பாதிப்புக்கு ஏற்றாற்போல் கட்டணத்தை ஏற்றிக்கொள்ளும் போதெல்லாம் விலைவாசி உயர்கிறது என்பதைக்கருத்தில் கொண்டுதான் மாண்புமிகு அம்மா தமிழக முதல்வர் அவர்கள் சிறு குறு விவசாயிகளின் விளைபொருட்களை குறைந்த கட்டணத்தில் பேருந்துகளில் சந்தைகளுக்கு எடுத்துச்செல்வதில் பாதகம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற தாயுள்ளத்தோடு அரசுக்கு ஏற்படும் இழப்பைத்தாங்கிக் கொண்டு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாமல் விலைவாசியும் ஓரளவு கட்டுக்குள்ளிருக்க வகை செய்துள்ளார் என்பதை வெற்றுக்கூச்சல் வேலைக்கு ஆகா எதிர்க்கட்சியினர் ஒப்புக்கொள்வார்களோ இல்லையோ!ஆனால் தமிழக மக்கள் புரிந்து கொண்டுதான் முப்பத்தி இரண்டுகால சரித்திர நிகழ்வாக மக்களுக்காக ஆண்ட அம்மாவின் அரசையே மீண்டும் ஆளுங்கட்சியாக்கி ஆறாவது முறையாக அரியணை ஏற்றி தர்மத்தை நிலைநிறுத்தியுள்ளார்கள்.அப்படித்தான் உலகமும் பேசிப்பாராட்டுகிறது.வாழ்க தமிழ் மக்கள்.

கொ.பெ.பி.அய்யா.

Sunday 12 June 2016

பிறந்த நாள் வாழ்த்து.

(பிறந்த நாள் வாழ்த்து)

வளரும் வாலிபம் நீள்கவே!
புலரும் காலமும் போல்கவே!
மலரும் சூழலும் ஆள்கவே!
ம் பொழுதும்!

பெற்றவர் ஏற்றும் வாழ்வறமே!
மற்றவர் ஆற்றும் போல்கவே!
கற்றவர் போற்றும் நூல்வகமே!
உற்றவர் காமேஸ் வாழ்கவே!

காலம் கொடுக்கும் பாடமே!
ஞாலம் படிக்கும் போல்கவே!
ஆழம் அறியும் அறிவினையே!
கோலம் காமேஷ் நெறிவழியே!

வாழும் இயக்கம் வாழ்கவே!
நாளும் தொடக்கம் போல்கவே!
ஆளும் அம்மா பாதையே!
நீளும் காமேஷ் வாழ்க்கையே!

மனிதம் கொண்டாடும் ஆளாக!
இனிதம் என்றாடும் போலாக!
இதயம் வென்றாடும் பேராக!
உதயம் காமேஷ் நாளாக!

கொ.பெ.பி.அய்யா.