Tuesday 22 December 2015

அம்மாவியம்.

அம்மாவியம் 3

பதறி ஒடுங்காதே!
பாவம் எண்ணாதே!
பின்னால் ஒளியாதே!
பீதி நம்பாதே!
புண்படப் பேசாதே!
பூச்சியாய் வாழாதே!
பெண்டீரை இகழாதே!
பேதம் பழகாதே!
பைத்தியனாய் திரியாதே!
பொறாமை கொள்ளாதே!
போர்க்குணம் புதைக்காதே!
பௌசு பாராட்டாதே!
அப்பியாசம் தள்ளாதே!

மண்ணை துறக்காதே!
மாதாவை மறக்காதே!
மிகுந்தது மறைக்காதே!
மீட்டது சிதைக்காதே!
முன்சொல் மறுக்காதே!
மூத்தோரை வெறுக்காதே!
மெத்தனம் பேணாதே!
மேடைமொழி கேளாதே!
மையல்வெறி மாளாதே!
மௌசு மயங்காதே!
அம்மாவழி விலகாதே!

கொ.பெ.பி.அய்யா.

Saturday 19 December 2015

பார்த்து விலகு.

பார்த்து விலகு!

பார்த்து விலகு மனிதா- அரசியல்
பைத்தியம் திரியும் பொதுவா.
மனிதன் போலவே பேசும்-உன்னை
மயக்கத் தான்வலை வீசும்.

ஆவிகள் அலையும் மனிதா-அரசியல்
பாவிகள் அவரே அறிவாய்.
ஆசைகள் காட்டி மயக்கும்-உன்னை
அறிவினை நீற்றி வசக்கும்.

நல்லவர் போன்றே மனிதா-அரசியல்
நாடகம் செய்வார் புரிவாய்.
சொல்வோம் செய்வோம் என்பார்-உன்னை
கொள்ளை அடித்தே தின்பார்.

பொதுநலம் செத்தது மனிதா-அரசியல்
சுயநலம் தானது தெளிவாய்.
தொழிலாய் ஆனது அரசியல்-உன்னை
துறவியாய் விட்டது பொதுவியல்.

தேர்தல்க் காலம்  மனிதா-அரசியல்
தீர்தல்க் கோலம் வரைவாய்.
மயக்கும் மொழிகளைத் தள்ளு-உன்னை
பயக்கும் வழிகளை வெல்லு.!

பாசம் தாய்மை மனிதா- அரசியல்
தேசம் செய்வோம் விரைவாய்.
இரட்டை இலைதான் சின்னம்-உன்னை
இமைக்குள் காக்கும் திண்ணம்.!

கொ.பெ.பி.அய்யா.

அன்புள்ள அம்மாவுக்கு.

அன்புள்ள அம்மாவுக்கு.

அன்புள்ள அம்மாவுக்கு உந்தன்
ஆருயிர்ச் செல்வங்கள்-அன்புடன்
வந்தனம் கூறி நன்றியுடன்
சிந்தையிற் கடிதம்.

காமராசர் அண்ணா எம்ஜியார்
சாமிகள் வழியில்-அம்மா
நீயும் எம்முடை உயர்வில்
நீள்கிறாய் வாழி!

கல்வியொன்றே செல்வம் என்றே
சொல்லிய முன்னோர் --உண்மை
கண்டுந்தன் நாடும் நிமிர்த்தியும்
வென்றயம்மா பூர்த்தி!

பெற்றது மட்டும்தான் பெற்றோர்
மற்றது எல்லாம்நீ--நற்றார்
கற்றது நடுஊர் கனிமரம்
உற்றதும் உன்னறம்.

படிப்பதற்கு என்னென்ன வேண்டும்
மடிக்கணினி வரைதான்--தத்தாக
தானெடுத்தாய் தாயே உனக்காக
நாங்கள் இருக்கிறோம்.

கோடி கோடியாய் குழந்தைகள்
கூடிய செல்வங்கள்--அம்மாநீ
தேடிய சொந்தங்கள் நாங்கள்
நீடியும் நீயாள்க!

கொ.பெ.பி.அய்யா.


அன்புள்ள மகனுக்கு.


அன்புள்ள மகனுக்கு.

அன்பு மகனுக்கு தாயின்
அன்புக் கடிதம் வரைகிறேன்.
அம்மா உந்தன் ஆன்மாதான்
வாழும் நானுன் கழகமாய்
நெஞ்சம் வாழ்கிறேன் ஆயிரம்
காலம் தொடரும் நிரந்தரந்தான்.
பந்தம் பாசம்  நானேதான்
சொந்தம் எனக்கு நீயேதான்.

உணவாய் நலமாய் நானேதான்.
உடுத்தத் துணியும் நானேதான்.
உறங்க விடுதியும் அமைதியும் நான்
வழங்கும் அரசும் அம்மா நான்.

ஆலயந் தோறும் அன்னதானம்
அட்சய பாத்திரம் நானேதான்.
பசியை தொலைத்த மேகலையே
பசுமை அம்மா நானேதான்.

அன்ன பூரணி ஆள்வதும்
அம்மா அரசு வாழ்வதும்
மகனே மனது சாட்சியே
சுகமே அம்மா காட்சியே.

தமிழில் அம்மா என்றாலே
தர்மம் என்பார் என்னாலே.
அனாதை அற்ற தமிழ் நாடே
ஆனது தொட்டில் ஒன்றாலே.

ஏழை என்றொரு பாவச் சொல்
இல்லை என்றானது நானே சொல்.
கடமை உனது செயலாலே
நிசமே அம்மா நினைவாலே.

கவிஞர்கொ.பெ.பி.அய்யா.



Wednesday 16 December 2015

அம்மாவியம் 2

அம்மாவியம் 2

சண்டைக்கு முந்தாதே!
சாதிக்கப் பிந்தாதே!
சிந்தை அடக்காதே!
சீற்றம் முடக்காதே!
சுதந்திரம் பிழைக்காதே!(பிழைக்காதே-தவறாகப் பயன்படுத்தாதே)
சூதனம் பழகாதே!(பிறரை அழிக்க எண்ணாதே)
செருக்கு முறுக்காதே!
சேவை வெறுக்காதே!
சைவம் அழிக்காதே!
சொல்லுக்கு மயங்காதே!
சோம்பி ஒடுங்காதே!
சௌதாயம் வேண்டாதே!(சௌதாயம்-சீதனம்,நன்கொடை,கையூட்டு)
அச்சம் தூண்டாதே!

தமிழை கழிக்காதே!
தாய்தந்தை ஒதுக்காதே!
திமிர் பேசாதே!
தீவினை முனையாதே!
துணைக்குத் தயங்காதே!
தூய்மை கெடுக்காதே!
தெய்வம் பழிக்காதே!
தேசம் மறக்காதே!
தையலர் இழிக்காதே!(தையலர்-பெண்டீர்)
தொண்மை விலக்காதே!(தொண்மை-பழமை-மரபு)
தோல்விக்கு அஞ்சாதே!
தௌலம் பிசகாதே! (தௌலம்-துலாக்கோல் தர்மம்--நடு நிலை)
உத்தமம் மாறாதே!(உத்தமம்-சத்தியம்-மேன்மை-தர்மம்)

கொ.பெ.பி.அய்யா.



Tuesday 15 December 2015

அம்மா நானுன்னுயிர்.

அம்மாதானே நான்.

அம்மாதானே கண்ணே நான்
ஆருக்காக நான்--உன்
அன்புதானே உள்ளே நான்
ஆன்மாவில்தான்.

உயிர்தானே உள்ளேன் நான்
உனக்காக நான்-என்
உதிரம்தானே உன்னில் நான்
உணர்வில்தான்!.

சொந்தம்தானே எல்லாம் நான்
சொத்தாக நான்-உன்
பந்தம்தானே உயிரே நான்
உந்தனால்தான்.

வஞ்சகர்தானே சொல்லும் நான்
அஞ்சாமல் நான்-என்
தஞ்சந்தானே உறவே நான்
நெஞ்சால்தான்!

வாசந்தானே உன்னால் நான்
பாசத்தாய் நான்-உன்
நேசந்தானே தமிழே நான்
பாசையால்தான்.

கொ.பெ.பி.அய்யா.

அம்மாவியம் 1

அம்மாவியம்.

அம்மா மறவாதே!
ஆக்கம் மறுக்காதே!
இயன்றது மறைக்காதே!
ஈகை ஒளிக்காதே!
உரம் விலக்காதே
ஊக்கம் மழுக்காதே
எண்ணம் கலங்காதே!
ஏற்றம் தயங்காதே!
ஐநிலம் பகையாதே!
ஒழுகாது ஓதாதே!
ஓரமொழி பேசாதே!
ஔவியம் எண்ணாதே!
ஃ என சோராதே!

கடவுளைப் பழிக்காதே!
கடமை கடத்தாதே!
கிடந்து கழிக்காதே!
கீழ்மை சேராதே!
குதர்க்கம் பேசாதே!
கூவித் திரியாதே!
கெட்டது கேளாதே!
கேடு பேணாதே!
கையூட்டு விழையாதே!
கொள்கை தவறாதே!
கோஷம் பழகாதே!
கௌடனை பாராதே!
அக்கடானு அலுக்காதே!

தொடரும்.........................

கொ.பெ.பி. அய்யா.

Thursday 10 December 2015

மக்கள் சிந்தனை கட்டுரை.

மக்கள் சிந்தனை.

மனிதர் எவர்க்கும் இரண்டு முகங்கள் உண்டு.ஒன்று பொய் இன்னொன்று மெய்.புறத்தில் தெரிவது பொய் முகம்.அகத்தில் அமைதி கொண்டிருப்பது தான் மெய்யான முகம்.அந்த மெய்யான முகம் பற்றி அறிந்து கொள்ளும்
வரை சமூகம் ஏமாற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.மெய்யான முகம்
புலப்படாது.நெருக்கமான பழக்கத்தில் கூட ஓரளவுதான் வெளிப்படும்.
அதனால்தான் அருகில் உள்ளவர்கள் கூட அசந்துவிடுகிறார்கள்.இன்றைய
அரசியல்வாதிகள் தொண்ணூற்றொன்பது சதவிகதம் பேர் மெய்யான முகத்தை புதைத்து வைத்துக்கொண்டு பொய்யான முகம் காட்டித்தான் மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

அரசியல் என்றாலே ஏமாற்று வித்தை என்பதுதான் இன்றைய  மக்களின் அரசியல் பற்றிய கணிப்பு.ஏனென்றால் அரசியல் நேர்மை என்பதெல்லாம்
பெருந்தலைவர் காமராசர்,அறிஞர் அண்ணா,புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்
ஆகிய அரிய மனிதர்களோடு காலமாகிவிட்டது.மேற்கண்ட தலைவர்கள்
கூட தாங்கள் சார்ந்திருந்த இயக்கங்களோடு மக்கள் சிந்தனையோடு கருத்து வேறுபாடு கொண்டார்கள்,பிரிந்தார்கள் ,நின்றார்கள்,வென்றாகள்.மீண்டும் அந்தப்பக்கம் அவர்கள் எட்டிப்பார்த்து மெனக்கெடவில்லை.அதுதான்
அவர்களின் தனித்தன்மைக்கும் வெற்றிக்கும் காரணமாகத் துணையானது.

ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் இவர்களின் வழிகாட்டுதல்களின்
முறைகளுக்கு நேர்மாறாக உள்ளனர்.குடும்பத்திற்காக சில இயக்கங்கள்,
சுய பாதிப்புகளுக்காக சில கட்சிகள் எனும் நிலையில்தானே நம் நாட்டு
அரசியல் உள்ளது.

ஒருவர் ஒரு இயக்கத்திலிருந்து ஏதோ ஒரு பொய்யான குற்றப்பழி சுமந்துகொண்டு வேதனையோடு வெளியில் வருகிறார்.தனக்கு
நேர்ந்த சதிமோசடிகள் பற்றி சந்திகளில் முழக்கி மக்களிடம் நியாயம்
கேட்கிறார்.பின்பு சில நாட்களில் எந்த வேகத்தில் வந்தாரோ அதே வேகத்தில்
அடுத்துவரும் தேர்தலில் அவர்களோடு கூட்டணியென்று இணைகிறார்.
அப்படிப்பட்டவர் ஏன் அந்த இயக்கத்தை விட்டு வெளியேற வேண்டும்.
தனி க்கட்சி தொடங்க வேண்டுமென்று மக்கள் யோசிக்கமாட்டார்களா!
அவரைப்பார்த்து கேள்விக்கணை தொடுக்க மாட்டார்களா!யோசித்தாரா
அவர்!

என்னைக்கேட்டால் அவர் ஏற்றுக்கொண்டிருந்த தலைமையைவிட
அவர் நேர்மையானவர்தான்.ஒழுக்கமானவர்தான்.சிறந்த அரசியல் வாதிதான்.
நல்ல உழைப்பாளிதான்.யாரும் மறுக்கமுடியாது.ஆனால் அவர் எடுத்த
முடிவில் நிலைத்து நின்று தாக்குப்பிடிக்க இயலாத அவருடைய தடுமாற்றம்தான் அவரின் சறுக்கலுக்கும் அரசியல் பின்னடைவுக்கும் காரணம் என்பதை அவராலும் மறுக்கமுடியாது.இனிமேலாவது அவர் விழித்துக்கொண்டால் அவருக்கு நல்லது.

கட்டிடம் இடிக்கப்பட்டது என்பதற்காக ஒரு கட்சி.அப்புறம் எவரால் பாதிக்கப்பட்டாரோ அவரோடு உறவு.இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான
செயல்தானென மக்கள் சிந்திக்க மாட்டார்களா என்ன!இன்னும் சில பாவப்பட்ட பக்கிரிகள் இருக்கிறார்கள்.ஒதுங்கியிருக்கும் போது இப்போதைய எதிரிகள் என வரிந்துகட்டிக்கொண்டு வண்ண வண்ண வார்த்தைகளால் மெனக்கெட்டு அலங்காரம்  செய்து அவர்களின் தற்காலிக அரசியல் எதிரிகளின் ஊழல் கணக்குகளை புள்ளி விவரங்களோடு ஒப்பிப்பார்கள்.அடுத்து அதை மறந்துவிட்டு ஒன்றிரண்டு சீட்டுகளுக்காக தேர்தலில் கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் அவர்களைப்போல் உத்தமர்கள் இல்லை என்பார்கள்.அன்று அந்த நாறவாய் பேசியதை அந்த சந்தர்ப்பவாதிகள் மனச்சாட்சிப்படி மறக்காமல் பொய்சாட்சிக்காக உண்மைகளை மறைத்துப் பேசுவதை மக்கள்புரிந்து கொள்ளமாட்டார்களா என்ன!

ஆமா! நான் ஒன்றைப் புரிந்து கொண்டுதான் புரியாதுபோல் கேட்கிறேன் இவர்களெல்லாம் மக்களாகிய நம்மைப்பற்றி எந்த வகையில்தான் கணக்கு வைத்துள்ளார்கள்!ஏமாளிகள் என்றா !இல்லை! மக்கள் மறந்திருப்பார்கள் என்றா!கொஞ்சம் குழப்பமாகத் தான்  உள்ளது.ஆனாலும் தெளிவாகத்தான் இருக்கிறோம்.அமைதியாக இவர்களின் பொய்யாட்டங்களை வேடிக்கையாக இரசிக்க காசா பணமா என்ன!

காலமெல்லாம் பொழுதைக் கழித்துவிட்டு தேர்தல் நேரம் பார்த்து
தெருக்களில் கூத்துக் காட்டுகிறார்கள்.நடைபயணம் என்கிறார்கள்
நாடக வசனம் பேசுகிறார்கள்.மன்னிப்புக் கேட்கிறார்கள் மன்றாடுகிறார்கள்.
எதற்காக நமக்ககவா!இல்லை!சுயலாப சொந்தக் குடும்பப் பாதுகாப்பிற்காக.
அக்கறை உள்ளவர்கள் அன்று எங்கே போனீர்கள்? இதுவரை செய்யாததை
இனிமேலா செய்துவிடப்போகிறீர்கள்?அப்படி என்னப்பா உனக்கு அக்கறை?
நீ செய்த தியாகமென்ன?சொத்தை இழந்தாயா?சுகத்தை இழந்தாயா?
மக்கள் எங்களுக்காக நீ இழந்தது என்ன?என்ன சொல்லுவாய் நீ!மக்கள்
நாங்கள் கேட்க மாட்டோமென்று எவ்விதம் துணிந்தாய் நீ!உன்னையே நீ
கேட்டுப்பார்.அப்புறம் வெக்கம் உனக்குள் தானாக வரும்.

எவரோ ஒருவர் பாடுகிறார்.மூடு!மூடு!கடையை மூடென்று.பாவி!
திறந்தவரைப்பார்த்து  கேட்கவேண்டிய கேள்வியை திறந்ததை மூட
வழி தேடித்தவிக்கும் அம்மாவைப் பற்றி அவதூறாக விமர்சிக்கிறார்.
பாவம்!.ஆட்சியை விமர்சிக்கத்தான் நாகரிக உரிமையே தவிர தனிநபர் சுய
அடிப்படை உரிமைகளை விமர்சிக்க எவருக்கும் உரிமை இல்லை.
இது பாவச்செயல் என்றும் புரியாமல் தனிநபர் விமர்சனம் செய்கிறார்
பாவம்!

இன்று பேசுகிறார்களே அதனால்தான் வெள்ளம் இதானால்தான் சேதம்.அதை அப்படிச்செய்திருக்கலாம் இதை இப்படிச்செய்திருக்கலாம் என்று.இவர்கள் என்றைக்காவது ஒழுக்கமாக சட்டசபையில் இருக்கை அமர்ந்து பேசியது உண்டா!இவர்கள் இருந்த நாட்களைவிட பறந்த நாட்கள்தானே அதிகம்.
வரண்டா வரைவந்து வருகைப்பதிவில் கையொப்பமிட்டு கூலி வாங்கிக் கொண்டு வேலி தாண்டி கூவி விட்டுப்போனவர்கள்தானே இவர்கள்!இவர்களிடம் மக்கள் சிந்தனை எங்கே உள்ளது!இயற்கையின் சீற்றத்திற்கு
யார்தான் பொறுப்பேற்க முடியும்.அந்த அளவிற்கு இயற்கையின் திடீர்
மாற்றங்களை முன்னறிந்து எச்சரிக்கை செய்யக்கூடிய தொழில் நுட்ப
முன்னேற்றத்தை நமது நாடு இன்னமும் கண்டடையவில்லை என்பதுதான்
நம்முடைய துர்பாக்கிய நிலை.

தீட்டிய திட்டங்கள் செய்ய முனையும் முன்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுதான்
நம்முடைய போதாத காலம்.தொடர்ந்தும் அம்மா ஆட்சி நிலைத்திருந்தால்
இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்காதுதான்.என்ன செய்வது விதி யாரைத்தான்
விட்டது.சரி போனது போகட்டும்.இந்த முறையாவது விழிப்போடிருந்து
மக்கள் சிந்தனை உள்ளவர் அம்மாதானென தெளிந்து புரிந்து கொண்டு இனியாவது நடப்பதெல்லாம் நலமாக நடக்கட்டும் என்று அம்மாவையே நம்பித் தொடர்வோமாக!

வாழ்க எம்,ஜி.ஆர் நாமம்.

நன்றி!

கொ.பெ.பி.அய்யா.. 

Monday 7 December 2015

நாடககககாரர்கள் எங்கே?



காணவில்லை சிலரை!

தமிழ்நாட்டில் தர்மம் பேசும் சிலரை காணவே இல்லை.எங்கெங்கோ பிறந்தவர்கள் பிழைப்பவர்கள்.தமிழ் மக்களின் துயர்கண்டும் காதில் கேட்டும் மனம் துடித்துப்போய் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகவே வந்து வரிந்து கட்டிக்கொண்டு மனித நேயத்தோடு உதவும் பணிகளில் உற்சாகத்தோடு உழைத்து வருகிறார்கள்.அப்படிப்பட்ட மனித உள்ளங்களுக்கு தமிழர்களாகிய நாம் என்றென்றும் கடன்பட்டவர்களாய் காலம் உள்ளவரை மறவாதிருப்போம்.வாழ்க அந்த நல்லவர்கள்.

தமிழ் என்று கூறி தமிழால் பிழைப்பவர்களை காணவில்லை.தமிழர் அல்லாத பிற மாநிலத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் முக்கியஸ்தர்களும் மற்றும் தமிழர்களால் பயனடையாத பிறமொழி நடிகர் பிரபலங்களும் இங்கு உதவிப் பொருட்களோடு வந்து உடல் வருத்தி உள்ளன்போடு எந்தவித எதிர்பார்ப்புகளுமின்றி உதவிப்பணிகளில் தங்களை நேரடியாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பதை நம் கண்களால் நிசமாகக் காண்கிறபோது நம் விழிகள் நம்மையும் அறியாமல் கசிகின்றன.இவ்வுலகில் மனிதம் மரித்துப்போகவில்லை என்பதற்கு இதைவிட சாட்சிகள் வேறென்ன வேண்டும்!

இப்படி நல்லோர்கள் வாழும் பூமியில் இப்படிப்படிப்பட்டஎதிர்பாரா இடர்கால நெருக்கடி இன்னல்களைக்கூட சிலர் தங்களின் சுயலாப சந்தர்ப்ப வாய்ப்பு களாக வெக்க்ப்படாமல் அரசியல் பண்ணவும் ஆதாயம் தேடவும் இத்தருணத்தை பயன்படுத்திக்கொள்ளக் கூச்சப் படுவதில்லை என்பதுதான் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேதனை.. இவர்கள் மனித நேயம் பேசுவார்கள் ஆனால் மனம் செத்துத் திரிவார்கள்.

இன்னும் சிலரும் இருக்கிறார்கள்.அரசு அதைச்செய்யவில்லை இதைச் செய்யவில்லை என அங்கலாய்த்துக் கொள்வார்கள்.ஆனால் ஒரு சிறு துரும்பைக்கூடக் கிள்ளிப்போட மாட்டார்கள்.வீட்டுமுன் கிடக்கும் காற்றில் பறக்கும் தூசைக்கூட அரசாங்கம் வந்துதான் எடுத்துப்போட வேண்டும்  என்றே
எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.குறைபேசிக் குற்றம் காண்பதற்காகவே சிலர் செத்து நாறும் பிணங்களாய் சமுதாயத்தை முகம் சுளிக்க வைக்கிறார்கள் கேவலம்!

மற்ற சாதாரண காலங்களில் இவ்வாறு எதிர்பார்ப்பதும் தவறில்லை தான்.ஆனால் இப்படிப்பட்ட இக்கட்டான அசாதாரண காலங்களில் கூட இதை அரசுதான் செய்யவேண்டும் என்று அடம் பிடிப்பதும் அரக்கத்தனமான ஈவிரக்கமற்ற செயலல்லவா!.நம்மால் நாமே செய்யக்கூடிய சின்னச்சின்ன வேலைகளைக் கூட நாமே செய்தால் என்னதான் தாழ்ந்துவிடப் போகிறோம்
என்பதுதான் புரியவில்லை.

இப்படிப்பட்ட அவசரகாலங்களில் பொதுமக்களாகிய நாமும் அரசோடு இணைந்தும் ஒத்துழைத்தால்தான் அரசும் அதன் அவசரப் பணிகளில்
முழுமையாகத் தன் கவனம் செலுத்தி மீட்ப்புப் பணிகளில் முன்னேறமுடியும் என்பதைசிலரால்ஏன்புரிந்துகொள்ளமுடியவில்லையோதெரியவில்லை.
இதை அரசியல் தலைவர்களும் மக்களுக்கு உணர்த்துவதில்லை.மாறாக மக்களை அரசுக்கு எதிராக தூண்டிவிடுவதே அவர்களின் கேடுகெட்ட புத்தியாக உள்ளது.

எப்படிப்பட்ட நேரங்களில் எதை அரசியலாக்கலாம் என்ற நியாய தர்மமே
இல்லையா?மனச்சாட்சிகள் மரத்துப்போனதா?அல்லது மடித்துபோனதா?அறிஞர் அண்ணா அவர்கள் சொன்ன அரசியல் தர்மம் படித்திருந்தால் இவர்களுக்கும் அரசியல் தர்மம் தெரிந்திருக்கும்.என்ன செய்வது காலத்தின் சோதனைதான் இது.காலம்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்.

கொ.பெ.பி.அய்யா.

சென்னையும் கண்டது.

மொழியும் இனமும் மதமும் எங்கே!
மனிதம் மட்டும் மதித்தது இங்கே.
உறவும் முறையும் உயிரென ஒன்றே.
பரவும் சமூகம் பயின்றது இன்றே!

இடரில் மனிதன் இடறும் போதே
படரும் பழமை பரிவினில் தானே
உடுக்கை இழந்தான் உணர்வினைப் போலே
முடுக்கும் உதவி மனிதம் தானே.

உயிரும் உயிரும் உறவெனக் கண்டே,
உயிரும் தடையோ உறுதியும் கொண்டே,
உதவும் மனிதம் உலகினில் உண்டே.
இதுவும் நிசமே இறப்பில்லை தொண்டே!

சென்னையும் கண்டது முன்னைய சொந்தம்.
தன்னையும் கண்டது நன்னய பந்தம்.
மகத்துவம் கண்டது சகத்துவம் என்றும்.
இகத்துவம் கண்டது சமத்துவம் ஒன்றும்.

பேரிடர் பாடமும் ஆறிட வேண்டாம்.
யாரிடம் பேதமும் கூறிட வேண்டாம்.
ஊரிடம் வாசமும் மாறிட வேண்டாம்.
பாரிடம் பாசமும் மீறிட வேண்டாம்.

கொ.பெ.பி.அய்யா.


அம்மா நான் உன்னருகே.

அம்மாதான் அம்மா!

நான் இருப்பேன் நின்னருகே
ஏன் கலக்கம் என்னுறவே!
வீண் மயக்கம் என்னதான்!
தான் துடைப்பேன் அம்மாநான்!

என்நெஞ்சம் உன் வாசம்.
உன்தஞ்சம் என் நேசம்.
நம்சொந்தம் முன் பந்தம்
அம்மா நான் என்றென்றும்.

எண்ணும் போதும் சும்மாதான்.
எண்ணித் தேடும் அம்மாநான்.
என்னை முந்தி சிந்தைதான்.
உன்னை கண்டு ஆறும்நான்.

அம்மா துணை இருக்கிறேன்.
அஞ்சும் வினை அறுக்கிறேன்.
தும்முந் துயர் பொறுப்பேனோ!
அம்முன் அர வணைப்பேனே!

அம்மா தான் அம்மாவாம்.
சும்மா தான் மற்றெல்லாம்.
என்னுயிர் போல் போற்றும்
உன்னுயிர்  நான் அம்மா.

இரட்டை இலையே செழித்திருக்கு.
புரட்சிசித் தலைவி பலமிருக்கு.
இருட்டை விலக்கிய கழகமடா!
நிரந்தர முதல்வர் அம்மாடா!

கொ.பெ.பி.அய்யா.




Sunday 6 December 2015

அரசியல் தர்மம் கட்டுரை.

அரசியல் தர்மம்.

கண்களை நம்பாமல்தான் நீதி தேவதை கண்களைகட்டிக்கொண்டுள்ளாள்.சில நேரங்களில் காட்சிகளும் பொய்யாகிப் போகின்றன.ஆகவேதான் சாட்சிகளின் நேர் மொழிகளை கேட்கமட்டும் தன் செவிகளைமட்டும் தீட்டி வைத்துக் கொண்டு உண்மைகளை ஆராய்கிறாள் நீதி தேவதை என்பதே நீதி தர்மத்தின் நம்பிக்கையாக உள்ளது,ஆனால் இன்றைய போலியான அரசியல் வாதிகள் நேர்மையாக அரசியல் செய்யும் மெய்யான பொதுவாழ்வை மேற்கொண்டு நாடே வீடென்றும் நாட்டு மக்களே தன் சொந்தமென்றும் சுயநலம் துறந்து அரசியல் அறம் நிலை கொண்டு மக்கள் தொண்டாற்றும் நல்லோரை எவ்விதத்தில் ஒழித்து அழிக்கலாம் என்பதையே தங்கள் கொள்கையாகக் கொண்டு அதற்கான முயற்சிகளில் தங்கள் வாழ்நாளை அற்பணித்து அலைகிறார்கள்.அதற்காக பொய்வழக்குகள் போட்டும் பொய்ச்சாட்சிகளை இட்டுக்கட்டி சோடித்தும் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

மற்றவர் மீது குற்றம் சுமத்தும் எவரும் சுத்தமானவர்கள் இல்லைஎன்பதையும் நாட்டு மக்கள் புரிந்துகொள்ளாமலும் இல்லை.ஆனாலும் இந்த வேடதாரிகள் எந்த நம்பிக்கையில் தங்கள் மனச்சாட்சியை மறுத்தும் மக்களை ஏமாற்றவும் வெக்கமில்லாமல் விதிகளில் திரிகிறார்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.மக்களுமா மனச்சாட்சியை மதிக்காமல்இருப்பார்கள்.அல்லது மறந்திருப்பார்கள் என்ற நப்பாசையா?அடப்பாவிகளா இன்று திடீர் ஆயத்த அரிச்சந்திரர்களாக மாறிவிட்டீர்களாக்கும்.நாங்களும் நம்பிவிட்டோம் நாசமாய்ப் போக.அடப்போங்கடா போக்கற்றவங்களா!

இயற்கையின் பேரழிவில் இடர்பட்டுக்கிடக்கும் அப்பாவிமக்களிடம் போய் அரசியல் பேசுகிறீர்களே!இதுதான் அரசியல் தர்மமா? இதுதான் அதற்கான தருணமா?பேரிடர் என்பது உங்களைப்போல் திட்டம் தீட்டி வஞ்சம் தீர்க்கும் வடிவிலா வேடமாட வரும்!எதிர் பாரா திடீர் சூழலில் திடீர் தாக்கமாக விளைவதுதானே இயற்கைப் பேரிடர் என்பது.இதற்கு யார்தான் பொறுப்பாக முடியும்.?அதையும் அஞ்சாமல் எதிர்கொள்வதுதான் திறமை.இதையும் ஒரு சவாலாகவே ஏற்றுக்கொண்டு சமாளிப்பதுதான் அம்மாவின் சாதனைக்கு சான்றாக இதுவும் இயற்கை ஏற்படுத்திய சோதனைகளில் ஒன்று.இடர்களைக் கடக்கும் வல்லமை அம்மாவுக்கு அருளப்பட்டுள்ளது என்பதையும் ஆண்டவனும் அறிவான்.அதனால்தான் என்னவோ ஆண்டவனும் சோதித்துப் புடம் போட்டுப் பார்க்கிறான்.

சோதிக்கிறவனே சாதிக்கவும் துணை நிற்பான்.மீட்புப்பணிகளில் தீவிரம் காட்டிக்கொண்டிருக்கும் அம்மா வேறு சிந்தனைகளில் வீண் பேச்சுக்கு வேண்டாம் வெட்டித்தனம் என்று அமைதி காத்து வருகிறார்.தங்கள் இன்னுயிரைப் பணயம் வைத்து பகல் இரவு பாராமல் பாரபட்சமின்றி மீட்புப்பணிகளில் ஈடுபட்டுவரும் அரசுப்பணியாளர்கள் மற்றும் சமூகத் தொண்டர்கள் படைகளாக அணிவகுத்து பாடுபடுகிறார்கள்.அவர்களின் எதிர்பார்ப்பில்லா வீர தீர செயல்களை பாராட்டும் பக்குவம் இல்லை என்றாலும் நன்றிகூறும் நல்லெண்ணம் இல்லை என்றாலும் அப்புண்ணியர்களின் தூய மனங்களை காயப்படுத்தி வேடிக்கை பார்க்காமல்
இருந்தாலே தங்களுக்கும் பாவ விமோச்சனம் கிட்டும்.

நன்றி

கொ.பெ.பி.அய்யா.

Saturday 5 December 2015

மனிதம் மறுபிறவி எடுக்கட்டும் கட்டுரை.

மனித நேயம் வெளிப்படட்டும்.

அன்பான அகில உலகில் வாழும் தமிழ்ப் பேரினமே!அனைவர்க்கும் அன்பான வேண்டுகோள்.நூறாண்டு கால வரலாற்றில் இதுவரை தமிழகம் சந்தித்திராத இயற்கைப்பேரிடரை தமிழகம் இன்று கண்டு தாங்கொண்ணா இன்னலை சந்திக்க நேர்ந்துள்ளது என்பது வேதனையிலும் வேதனை.தமிழத்தில் குறிப்பாக சென்னை மாநகரும் அதன் சுற்றுப்புறமும் இத்துயர நிகழ்வால் அப்படியே முற்றிலும் தலைகீழாகப் புரட்டிப்போடப்பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது.

கூடியமட்டும் அரசு எந்திரங்கள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் மீட்டிக்கொண்டு தர அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறது என்பதும் ஒப்புக்குச்சப்பாக சொல்லவில்லை.உண்மையை மறைத்து இந்த நேரத்திலும் இக்கோர நிகழ்வை சிலர் அரசியல் ஆக்குவதுதான் வருத்தமாக உள்ளது. மானுட சுய மாச்சர்யங்களுக்கு இது களமோ தருணமோ அல்ல.ஒட்டுமொத்த மனித குலமும் பாகுபாடின்றி மனித நேய வெளிப்பாடோடு கைகோர்த்து இணைந்து நம் மனித இனத்தை இப்பேரிடரிலிருந்து மீட்டு மீண்டும் வாழவைக்க ஒருமனதோடு செயல்படவேண்டும் என்பதே இதயமுள்ளவர்களின் இன்றைய ஏகோபித்த வேண்டுகோளாய் உள்ளது என்பதே உண்மையிலும் உண்மை.

இன்றும் அரசோடு இணைந்து சமூக ஆர்வலர்களும்,எண்ணற்ற தொண்டு நிறுவனங்களும் பொதுமக்களும்,மாணவச்செல்வங்களும் அயராது உதவிக்கரங்கள் நீட்டி உழைத்தும் வருகிறார்கள் என்று எண்ணும்போது இன்னும் மனிதநேயம் மரித்துப்போகவில்லை என்றே தெளிவாகத் தோன்றுகிறது.

என்னதான் அரசு எந்திரங்கள் படாத பாடுபட்டாலும் பொதுமக்களும் ஒத்துழைத்தால்தான் எந்த ஒரு மீட்புப்பணிகளும் முழுமையான வெற்றியை எட்டமுடியும் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.

ஆகவே உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் இனத் தோழமைகளே தாங்கள் எல்லோருமே தாய்மண்ணின் மீது தளராப் பற்றுடையவர்கள் என்பதையும் தமிழ்ப்பேரினம் அறியும்.கருணை உள்ளம் கொண்டோர் என்பதும் தாங்கள் அவ்வப்போது தமிழுக்குக் காட்டும் பாசமும் பரிவும் வெளிப்படையானது என்பதும் நம்மினம் நன்றியோடு புரிந்துதான் வைத்துள்ளது.இந்த அவசரமான
காலத்திலும் தங்களின் பொன்னான கொடையுள்ளத்தை கொண்டு தங்களால் இயன்றதை வாரி வழங்கி நமது சொந்தங்களைக் காப்பாற்ற முன்வரவேண்டி தங்களைப் பணிவன்போடு வேண்டி விரும்பி உரிமையோடு கேட்டுக்கொள்ளும் அதே நேரத்தில் உள்நாட்டிலும் வாய்ப்பும் வசதியோடும் வாழும் மனித உள்ளங்களையும், உதவிக்கரம் நீட்ட தமிழ்ப்பேரினம் சார்பாகக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

கொ.பெ.பி.அய்யா
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/12313509_929462587136817_3742254452265020584_n.jpg?oh=0e73a20dc6802c2698acc2646f36883e&oe=56D4A646

Monday 30 November 2015

இமயம்கூட அம்மா முன் பணியும்.

அம்மா என்றால்...............

இமயம் கூட எம்முன் பணியும்
எழுந்து நிமிர்ந்தால் எதுதான் துணியும்.
சமயம் தேடும் சாத்திரம் கூடும்.
அமையும் அதுவாய் அம்மா நாடும்.

புரட்சித் தலைவன் பேரணித் தினவும்
புரட்சித் தலைவி போர்ப்படை முனைவும்
மிரட்சி மயக்கும் மேனி சிலிர்க்கும்
திரட்சி வியக்கும் தேர்வது முடிக்கும்.

அம்மா என்றதும் ஆவெனப் பிளக்கும்.
சும்மா நின்றாலும் சோவெனப் பறக்கும்.
சிம்மா சனத்தில் சிங்கமாய் அம்மா
இம்மா நிலத்தில் என்றுமே அம்மா.

எத்தனை அணிகள் எமக்கது கனிகள்.
அத்தனை இனிமை அனைத்தும் பறிகள்.
ஒத்தை ஒருமை உத்தமத் திருமை
சத்தியப் பெருமை சாதிக்கும் திறமை.

அமைதி அதுதான் அம்மாவின் இரகசியம்.
அமைந்தது அவர்தான் அஞ்சா அதிசயம்.
அன்னையின் அம்சம் ஆதியின் சக்தி.
என்றைக்கும் சொந்தம் எம்தாய் வெற்றி.

கொ.பெ.பி.அய்யா.

Friday 27 November 2015

நாட்டுக்கு நாமே. கட்டுரை.

நாட்டுக்கு நாமே!

நமக்கு நாமே என்பதல்ல அரசியல் நாகரிகம்,நமக்குக் கற்றுத்தந்த நம் தலைவர் நாட்டுக்கு நாமே என்றுதான் சொல்லி சொல்லி வளர்த்து வந்துள்ளார்.ஆகவே நமது சிந்தனை எல்லாம் தொலைநோக்குப் பார்வை கொண்டது.அப்படித்தான் நம் புரட்சித்தலைவி அவர்களும் சிந்திக்கிறார் என்பதையும் நாடறியும்.

இன்றும் பொய்க்கூச்சல் போட்டுத்திரிபவர்களின் சுயரூபம் என்ன என்பதையும் மக்கள் அறிவார்கள்.இன்று அவரவர் குடும்ப பாதுகாப்புக்காகவும்,சொந்தக் குடும்ப முன்னேற்றத்திற்காகவுமே இன்றைய அரசியல்வாதிகள் அத்தனைபேரும் அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகிறார்கள் என்பதையும் நாடு நன்றாகவே புரிந்து வைத்துக் கொண்டுள்ளது என்பதுதான் காலத்தின் வளர்ச்சி.

தனக்குள் தானே நாடு பொய்யர் யாரென்பதை புரிந்துதான் நையாண்டிப் புன்னகைக்குள் புதைத்து வைத்துக் கொண்டுள்ளது.இந்தப் பொய்யான புரட்டுக்காரர்கள் விடிந்த பொழுதில்தான் விளக்கைப் பிடித்த்க்கொண்டு விடியலைத் தேடுவதாக விளங்காமல் வெட்டித்தனம் செய்வதை பொதுமக்கள் புரிந்துகொண்டுதான் போக்கற்றவர்கள் திரிகிறார்கள் என்று சிரிக்கும் சத்தம் அந்த வீணாய்ப்போனவர்களின் செவிகளுக்கும் எட்டாமல் இல்லை.

அந்த வயிற்ற்றெரிச்சலில்தான் கொஞ்சமும் கூச்சமில்லாமல் தெருக்களில் பொய்ப்பாடல்கள் பாடி ஆடி தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார்கள் பாவம்.கருத்து சுதந்திரம் பற்றிப் பேசுபவர்கள் அவர்களின் அதிகாரக் காலத்தில் கருத்துக்கு என்ன மரியாதை செய்தார்கள் என்பதை நாடும் நாமும் மறந்துவிட்டோமா என்ன!பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் படுகாயத்தோடு வேதனை சுமந்துகொண்டு இருக்கத்தானே செய்கிறார்கள்.வேதாளங்கள் ஓதும் வேதங்கள் எடுபடுமா என்ன!நினைவாற்றல் என்பது இவர்களுக்கு மட்டும்தான் இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளதா என்ன!நாமெல்லாம் மரமண்டைகளா என்ன!இவர்களைப்பற்றிப்பேசப் பேச மன அழுத்தம்தான் மண்டைக்கு ஏறுகிறது.

நெஞ்சுக்கு நீதி என்று ஏமாற்றம் செய்யும் எவரையும் இனி மக்கள் எந்நாளும் மன்னித்து மறக்க மாட்டார்கள்.உலகில் இவர்கள் மட்டும்தான் வாழப் பிறந்தவர்களா என்ன!எந்த ஒரு சொல்லையும் வீசி எறியும் முன் தங்களை சுயபரிசோதனை செய்யமாட்டார்களா என்ன!ஒருசமயம் இவர்களைப் பற்றி யோசிக்கும்போது கொஞ்சம் பாவமாகவும் இருக்கிறது.என்ன செய்வது !அள்ளிச்சாப்பிட்டவர்களுக்கு கிள்ளிசசாப்பிடும்போது வருத்தம் இருக்கத்தான் செய்யும்.இப்போதாவது இவர்கள் தங்களை உணர்ந்து திருத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும்,எப்போதும் எல்லோரும் ஏமாளிகளாக இருப்பார்கள் என்று பொதுமக்களை ஏளனமாக எண்ணக்கூடாது.

விமர்சனம் என்பது பாவம் அல்ல.ஆனால் அந்த விமர்சனம் நாகரிகமாக செய்யப்படவேண்டும்.பொதுவாக தனிநபர் விமர்சனம் இழிவான செயல்தான். என்றாலும் கூட  அவ்விமர்சனம் சம்மந்தப்பட்டநபரை திருத்த உணர்த்துவதாக நளினம் கொண்டதாக இருக்கவேண்டும்.அப்படியல்லாமல் மனிதாபிமானம் அற்ற வகையில் தனிவாழ்வு உரிமை உணர்வுகளை குத்திக்குதறிக் காயப்படுத்தி வக்கரமாக வன்மை முறையில் நாகரிகம் தவறி விமர்சிக்கக் கூடாது.பொதுவாக அப்படிப்பட்ட விமர்சனங்களை வேடிக்கை பார்ப்பதும் ஆதரிப்பதும் கூட ஒருவகையில் பாவம்தான்.

கொ.பெ.பி.அய்யா.

Sunday 15 November 2015

தமிழ் மகளே தலைமகளே!

கமழுந்தமிழ் சுதந்திரமே வா!வா!

தமிழ்மகளே! தலைமகளே! வா!வா!
கமழுந்தமிழ் கலைமகளே வா!வா!
தமிழகத்தின் சுதந்திரமே வா!வா!
அமிழ்தமே அனைத்துயிரே வா!வா!

தங்கத் தாரகையே வா!வா!
சிங்கப் போர்குணமே வா!வா!
காவிரித் தாயே வா!வா!
பூ விரித்தாயே வா!வா!

தமிழான தனியரசி வா!வா!
தரணிக்கு வல்லரசி வா!வா!..
சிமிலுடைத்து செருக்கொழித்தாய் வா!வா!
தமிழனினமே தலைநிமிர்ந்தோம் வா!வா!

உலகத்தின் திலகமே வா!வா!
விலகுமிருள் விடியலே  வா!வா!
குலமுயர்த்துங் குலமகளே வா!வா!
பலமருளி பகையழித்தாய் வா!வா!

ஒற்றுமையின் பற்றேநீ வா!வா!
பற்றுணர் பண்பேநீ வா!வா!
மாற்றாரும் போற்றுந்தாய் வா!வா!
வேற்றுமை நீற்றுந்தாய் வா!வா!

காரான கருணையே வா!வா!
நேரான நெறியேநீ வா!வா!
சீராளும் சிறப்பேநீ வா!வா!
பாராளும் பிறப்பேநீ வா!வா!

அம்மாநீ அர்த்தமே வா!வா!
அன்னையே அடையாளமே வா!வா!
தாயேநீ தமிழேநீ வா!வா!
நீயேநீ நிலையரசே வா!வா!

கொ.பெ.பி.அய்யா.

Saturday 31 October 2015

அம்மா உம்போல்.......

பெண்ணேதான் ஆளும்!

அம்மா உம்போல் அன்புக்கு யாரோ!

சும்மா வீம்பால் சொல்வீச்சர் நேரோ!
நல்லாவே செல்லும் நல்லாட்சி கெடுப்பார்
பொல்லாதார் சொல்லும் செல்லாது தாயே!

தாய்தன் வீட்டை காத்திடும் பாசம்,
நீயுன் நாட்டை ஆண்டிடும் வாசம்.
பேய்வெம் பேச்சால் ஏய்த்திடும் மோசம்.
சேய்யெம் கூட்டால் தீய்த்திடும் நீசம்.

யாரென்ன செய்யும் ஊருந்தன் பக்கம்.
வேரன்ன பற்றும் நேருந்தன் சுற்றம்.
சீரென்ன நொய்யும் செருக்கரின் திட்டம்
கூரன்ன தொண்டர் கொடுவாள் சுற்றும்.

பெண்ணென எண்ணும் பொச்சாப்பு கூச்சம்.
விண்ணென விஞ்சும் பெண்ணெதிர் தாக்கம்.
என்னென்ன வீசும் வீசட்டும் காப்போம்.
பெண்ணேதான் ஆளும் அன்னைதான் நாடும்.

கொ.பெ.பி.அய்யா.

Friday 30 October 2015

அஞ்சா நெஞ்சம் அம்மா.

போர்க்காலம்.

தேர்தல் காலம் என்றால்-ஒரு
போர்க் காலம் போலத்தான்.
நேரில்லா பொய்க் கணைகள்--மொழி
கூர் கொண்டு தீய்த்திடுவோம்.

நெஞ்சம் தனை நிமிர்த்திவிட்டால்-எதிர்
எஞ்சும் வினை ஏது முன்னால்.
விஞ்சும் எழுச்சி துணி வொன்றால்--பகை
அஞ்சும் அதிர்ச்சி  அணி நின்றால்.

இட்டுக் கதைகள் ஏய்ப்ப தெல்லாம்-சும்மா
விட்டுக் கணைகள் வேடம் செய்யும்.
எட்டி உதைத்து முன் நகர்ந்தால்--கை
கட்டிப் பதைத்து பின்தயங்கும்.

ஊளை நரிக் கூட்டம்தான்--பயம்
வாலைக் குறி ஆட்டும்தான்
பார்வைப் பொறியில் பட்டும்தான்--நடுங்கி
நாவை ஒடுக்கி ஒடும்தான்.

அம்மா நமது ஆன்ம சக்தி--உயிரில்
நின்று நிறைந்த ஆழ்ம பக்தி.
எம்மாம் படைதான் எமக்கு நேர்!---நாம்
தும்மல் விடுத்தால் துதிக்கும் பார்!

கொ.பெ.பி.அய்யா.


Thursday 29 October 2015

நல்லாத்தான் போகிறது

நல்லாத்தான நடக்கிறது!

நல்லாத்தானே நடக்கிறது
நமது அம்மா அரசு--தீயர்
சொல்லுவதும் நினைப்பதுவும்
எல்லாம் தீயும் பழசு.


விளம்பரமே தேவையில்லை
புலம்பும் பொய் போதும்--அந்த
பொய்கூட புரிய வைக்கும்
மெய்மறைக்கும் செயலை.

பிழைப்புக்காக கட்சி செய்யும்
அலப்பரைகள் கூச்சல்-- ஏதோ
இருக்குறோமென காட்டத்தான்
தெருக்கூத்து பாய்ச்சல்.!

அழியின்னா இழியிங்கிறது
எடக்கு மடக்கு பேச்சு--பாவம்
நல்லதே அறிந்திடாமல்
நொல்லக்கண்ணும் போச்சு.

மனச்சாட்சி இல்லாமல்தான்
மறைத்துப் பேசும் செயலாம்--அம்மா
புரட்சிப்பா பாதை தாக்கத்தினால்
புரட்டி உருட்டும் பேச்சாம்.

எதிர்காலம் தொலைந்ததென
எரிஞ்சி விழுகிறாங்க--அம்மா
நிரந்தரமா முதல்வரென்றால்
பொரிஞ்சி அழுகிறாங்க.

எப்பொழுதும் எதிர்ப்பவர்கள்
இப்படித்தான் போங்க--அட
இதை ஏன்தான் பெருசாக
எண்ணுறீங்க நீங்க!

கொ.பெ.பி.அய்யா.






Wednesday 28 October 2015

அம்மா அம்மாதான்

அம்மா அம்மாதான்.

அம்மா அம்மாதான் மற்றெல்லாம் சும்மாதான்.
செம்மாந்து நம்நாடு பெற்றபேரும் அம்மாதான்.
தம்முயிர் தமிழ்நாடு எம்பணி மக்களுக்கே!
நம்புந்தன் நாட்டுக்கே நாளொன்றும் வாழுகிறார்.

எதிர்வரும் சோதனைகள் புதிர்வென்று மீட்டுகிறார்.
விதிவியக்கும் சாதனைகள் மதிகொண்டு நாட்டுகிறார்.
சதிசெய்யும் தீவினைகள் எதிர்நின்று ஓட்டுகிறார்.
கதிதொய்யும் கூவொலிகள் பதிலின்றி தீட்டுகிறார்.

காட்டுக்கூச்சல் போட்டுசும்மா ஆட்டமாடும் கூட்டமோ!,
தீட்டுப்பேச்சு பேசிப்பேசி ஊட்டுபொய் நாட்டுமோ!
நாட்டுமக்கள் கேட்டுமம்மா செய்தநன்மை மறக்குமோ!
தீட்டுந்திட்டம் ஆற்றுமம்மா கோட்டையாள மறுக்குமோ!

ஆண்டதெல்லாம் போதுமென்று மீண்டதமிழ் நாட்டினை
மீந்ததென்ன ஆட்டைபோட   ஆந்தைவிழி ஆசையோ!
வேண்டாமய்யா விட்டுவிடு!போதுமம்மா எனுந்தமிழும்
தீண்டலையோ செவிகளும்! செவிடாகிப் போனதோ!

அன்றாடம் செய்திகளும் கண்டுவரும் மக்களை,
கண்டாடு மெய்விளங்கும் கொண்டாடும் அம்மாவை.
அமைதியாகி ஆராய்க அம்மாதான் நன்மையே!
தமிழ்நாடே சீராகும் தட்டில்லா உண்மையே!

கொ.பெ.பி.அய்யா.

Sunday 25 October 2015

அம்மாதான் எங்களுக்கு.

அம்மாதான் எங்களுக்கு.

அவனுக் கென்ன உளறிவிட்டான்
அறியாமல் கிளறி விட்டான்.
விழுவ தவன் விளங்காமல்
வீழ்த்த என்ன பலம்கொண்டான்.

அறிவிருந்தால் புரிந் திருப்பான்
அம்மாவை அறிந் திருப்பான்.
மலை இழுக்க மயிரமோ!
மண்டை என்ன களிமண்ணோ!

மக்கள் என்ன கொக் காமோ!
சிக்குவரோ சிறுமை யிடம்!
அம்மாவின் அன்பை விட
ஆரு மிங்கே தேவையென்ன!

தாய்மடியின் தமிழ் சுகமே!
சேயறியும் இது நிசமே!
பேய்பிடியில் மீண்ட மக்கள்
நாய்க் குடியில் மாட்டுவரோ!

அவன் வாழ ஊதுகிறான்
எவர் செல்வார் எமன்பின்னே!
என்ன குறை இங்கிருக்கு!
அம்மா தான் எங்களுக்கு.

தமிழ் இனமே தாய்மனமே!
அமைந்த பெரும் புண்ணியமே!

தடைகள் முடிந்து விடியட்டுமே!

கொ.பெ.பி.அய்யா.


Monday 19 October 2015

ஒரே ஒரு தலைவி.

உம்மைப்போல் ஒரு தலைவி!

உம்மைப்போல் ஒரு தலைவி!
இம்மையினி அரும் பிறவி!
செம்மலும் பிறப்பதுண்டோ-அவர்
அம்மாதான்  மறுப்புண்டோ!

இராமன் வழி மண்ணாளும்.
கோமதியே பெண்ணாளும்!.
பூமித் தாய் பொறுமையே-கொடும்
தீமனங்கள் தீர்த்த பேரே!

வாலிதான் பெண் வடிவில்.
பாதியாவர் உம் பலத்தில்.
காளிதான் கடுஞ் சினத்தில்-ஆறியும்
தோழமை தான்  சற்குணத்தில்.

அகிலாண்ட நாயகியாய்,
புகழாண்ட தாயவராய்,
பகை தீண்டாத் தீயாக-வன்மை
புகை தாண்டி மீளுகிறாய்!.

அம்மா உம்மை நம்பித்தான்
இம்மா நிலம் பற்றித்தான்.
எம்மனம் எந்நாளும்-எங்கள்
அம்மா தான் கொண்டாளும்.

கொ.பெ.பி.அய்யா.

Tuesday 13 October 2015

அமைதிப் பூங்கா.

முன்னேர் அம்மா!

அழகு அழகு ஆட்சி அழகு. 
அம்மா அவரின் அறவழி உலகு.
பழகு பழகு பன்திறம் அழகு.
என்றே அம்மா பின்வரும் உலகு.

திருவோர் எல்லாம் வாழ்த்தும் அழகு
மறுவோர் சொல்லும் மாற்றம் உலகு.
உலகம் போற்றும் வள்ளுவன் அழகு
நிலவும் அம்மா ஆட்சியின் உலகு.

அமைதிப் பூங்கா தமிழகம் அழகு.
சமைக்கும் அம்மா தொழிலதன் உலகு.
வேளாண்மை காக்கும் மேலாண்மை அழகு.
நூலாண்மை ஆற்றும் தாய்மேன்மை உலகு.

ஏழையர் செம்மை தேர்வது அழகு.
ஆள்வகை அம்மா நேரது உலகு.
முன்னேர் காட்டும் தன்நேர் அழகு.
சொன்னால் அம்மா பின்னால் உலகு.

காலம் சொல்லும் கட்டிய அழகு.
ஆளும் அம்மா எட்டிய உலகு.
ஊளைக் கோழையர் ஓட்டம் அழகு.
நாளை மூளையர் கூட்டம் உலகு.

கொ.பெ.பி.அய்யா.




Monday 21 September 2015

ஆளும் அம்மா மீனாட்சி.

தமிழகம் ஆளும் மீனாட்சி.

தமிழகம் ஆளும் மீனாட்சி
தரணியில் தனிப்புகழ் அரசாட்சி.
அம்மா என்றே பேராச்சி.
அகிலம் அறிந்த நிலையாட்சி.

தமிழகம் துலங்கும் திருவரங்கம்
தந்த தாய்தான் ஆண்டாளாம்.
தமிழே பிறப்பின் அடையாளம்.
தன்னுயிர் வாழ்வதும் தமிழுக்காம்

தமிழர் தம்மக்கள் தானாளும்
தன்னலம் போற்றா தாயாளும்
உலகத் தமிழர் உளம் வாழும்
ஒன்றே உண்டே தமிழ் நாடாம்.

நெஞ்சுக்கு நீதி கொண்டாளும்
அஞ்சா நெஞ்சம் அம்மாவாம்.
இணையே எவரும் இல்லைதான்.
இதய தெய்வம் அம்மாதான்.

கொ.பெ.பி.அய்யா.


Sunday 20 September 2015

ஆண்டாள் அம்மா.

அம்மாவின் கணக்கு.......!

அம்மாவின் கணக்கு அடக்கமாய் இருக்கு.
சும்மா உன் முறுக்கு செல்லாத சரக்கு.
நமக்கு நாமே நாடகம் எதற்கு?
உமக்கு நீமே பாடந்தான் அதற்கு.

புரிஞ்சிரிச்சு நாடு தெளிஞ்சிரிச்சு மூடு.
பிடி படாமல் ஓடு ஒளிஞ்சொழிய தேடு
ஊருக்கெல்லாம் விடிஞ்ச்சிரிச்சே!
உனக்குமட்டும் அடைஞ்ச்சிரிச்சோ!

வீட்டைத் திருத்தத்தான் விதியில்லையாக்கும்!
நாட்டை வருத்த நீ நடக்கிறயாக்கும்!
பாவம் தீரவோ பாதை யாத்திரையாக்கும்!
சாபம் ஆறுமோ சண்டாளக் கூத்தராக்கும்!

உனக்காக நீயே உருவாக்குந் திட்டம்
ஊரை ஏய்க்கவே ஆடுற ஆட்டம்.!
மிச்சம் மீதியோ மிஞ்சிய நிலமும்
சுத்தமா சுருட்டவோ சுத்துறயாக்கும்!

அம்மா தீட்டும் திட்டம் எல்லாம்
நம்மால் போற்றும் ஆக்கம் சொல்லும்
வாழும் நாடு வளரட்டும் மேலும்.
ஆளும் அம்மா போதும் போ!போ!

மீண்டவர் எமக்கு மாண்டவர் வேண்டாம்.
ஆண்டதும் போதும் மாண்டதும் போதும்.
ஆண்டாள் அம்மா ஸ்ரீரங்கத் தமிழாம்
நீண்டாள் எம்மா நிரந்தருள் அமிழ்தாம்.

ஒத்தைக்கு ஒத்தையாய் வித்தைக்கு வாரியா!
கத்திநீ கூவினாலும் சத்தியத்தை எதிர்ப்பாரர்?
இரட்டை இலைதான் சரித்திர நிலைதான்.
புரட்சித் தலைவிதான் நிரந்தர முதல்வர்தான்.

கொ.பெ.பி.அய்யா.



Monday 14 September 2015

தலை வணங்கா தாய் கட்டுரை.

மக்கள் மனங்களில் அம்மா./தலை வணங்காத் தாய்.

தமிழகத்தைப் பொருத்தமட்டில் மக்கள் மனங்களில் தனிச்சிறப்புடன் தனியொரு இடத்தில் தெய்வத்திற்கு அடுத்த நிலையில் போற்றிப் புகழ்ந்து கொண்டாடக்க்கூடிய உன்னத நமது காலத்து அரசியல் மாமனிதர்கள் என்று எடுத்துக்கொண்டால் தந்தை பெரியார்,அறிஞர்.அண்ணா பெருந்தலைவர் காமராஜர் மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் என்றால் அது மிகையாகாது.அந்த வரிசையில் இன்று அம்மா அவர்களும் தமிழ் நெஞ்சங்களில் இடம் பெற்றுள்ளார் என்றால் அவரின் தன்னலமற்ற அரசியல் வாழ்க்கை என்பதுதான் உண்மை.

முந்தைய தமிழக அரசியல் என்று வரலாற்றை நாம் புரட்டிப்பார்க்கும்போது எவரெல்லாம் குடும்பங்களுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்களை தன் மக்களாக ஏற்றுக்கொண்டு அந்த மக்களுக்காகவே தன் வாழ்க்கையை அற்பணித்தார்களோ அவர்களே மக்கள் தலைவர்களாக மக்கள் மனங்களில் நீங்கா இடம்பெற்றார்கள்.அவ்வாறே இன்று புரட்சித்தலைவியும் தமிழகம் போற்றும் தனிப்பெருந்தலைவியாக தமிழ் மக்கள் மனங்களில் தனி இடம் பெற்றுள்ளார்.

அரசியல் என்பதும் ஒரு துறவறம்தான்.அதுவும் ஒரு பற்றற்ற நிலைதான்.தனக்கென்றோ தன் உறவுக்கென்றோ தன் குடும்பத்திற்கென்றோ இல்லாமல் எவர் ஒருவர் தன் நாட்டு மக்களுக்காக அரசியல் வாழ்வை மேற்கொள்கிறாரோ அவரே மக்கள் நாயகராக பரிமளிககிறார்.அப்படித்தான் இன்று அம்மா செல்வி ஜெயலலிதா அவர்கள் மக்களுக்காக என்று ஒரு முடிவை எடுக்கும்பொழுது அதனால் தனக்கென்ன நேரும் என்றும் எண்ணாமல் துணிச்சலாக மக்கள் பிரச்சனைகளை அணுகக்கூடிய தலைவராக விளங்குகிறார்.

முல்லைப் பெரியாறுப் பிரச்சனை மற்றும் காவிரிப் பிரச்சனை எதுவானாலும் அதை எதுவரை சென்று போராடிப்போராடி உரிமையை மீட்டெடுக்க முடியுமோ அதுவரை தளராது சென்றுசென்று வாதாடிவாதாடி நீதிமன்றங்கள் மூலமாகவும் மீட்டெடுக்கக் கூடிய நம்பிக்கையும் துணிவும் உள்ள ஒரு தலைவர் இன்று இந்தியாவில் உண்டும் என்றால் அந்த ஒரே தலைவி நம் புரட்சித்தலைவி அம்மாதான் என்றே தமிழராகிய நாம் பெருமையோடு மார்தட்டிக் கொள்ளலாம்.

அது போலவே ஈழத்ததமிழர் பிரச்சனையிலும் அதற்கு எதிரான அரசுதான் மத்தியில் ஆள்கிறது என்றே தெரிந்தாலும் எதற்கும் அஞ்சாமல் மாநில சட்டமன்றத்தில் தைரியமாக இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகவும் நடுவண் அரசுக்கு எதிராகவும் இலங்கை அதிபர் ராசபச்சே போர்க்குற்றவாளிதான் என தீர்மானம் இயற்றும் துணிவும் வேறு எவருக்கு வரும்.இது ஒரு உலகத் தமிழரின் உரிமைக்கான ஓங்கிய குரலின் வரலாற்றுப்பதிவு ஆகும்..

ஈழத்தமிழர்மூவர் பேரறிவாளன்,சாந்தன்,முருகன் ஆகியோரின் தண்டனைக்குறைப்பு மற்றும் விடுதலை விவகாரங்களில் துணிச்சலாக ஒரூ தாயுள்ளத்தோடு சட்டமன்றத்தில் ஆதரவுத் தீர்மானம் நிறைவேற்றும் வரை உச்சம் சென்று தமிழ் உணர்வோடு செயல்பட்ட நம் அம்மாவின் உயர்வேங்கே?அய்யோ அய்யோ இந்த தேர்தல் காலத்தில் அந்த மூவரும் விடுதலை என நீதிமன்றம் அறிவித்துவிட்டால் நமக்குத் தேர்தல் முடிவு பாதகமாக அமைந்துவிடுமே .அதனால் தீர்ப்பு  தள்ளிப்போகட்டும் எனகடவுளைவழிபட்டபகுத்தறிவாளர்களின்சுயநலம்எங்கே?என்ற நன்மை தீமை  ஆராய்ந்து பார்த்துத்தான் மக்கள் தீர்ப்பை சரியாக வழங்கியுள்ளார்கள்.

தன் மீது சுமத்தப்பட்டுள்ள பொய் வழக்குகளைக் கூட அவர் நினைத்திருந்தால் நடுவண் அரசு அதிகாராம் பெற்றவர்களின் முன்னே பணிந்து நின்று நீக்கியிருக்க முடியும்.ஆனால் எவர் முன்னும் தலை வணங்கத் துணியாத அம்மா அவர்கள் சட்டப்படி தன்னைக்குற்றம் அற்றவராக நாட்டுக்கு மெய்ப்பிக்கவே அவர் நீதிமன்றங்களின் படிகளில் ஏறி இறங்கினார்.சர்க்காரியா வழக்கு எப்படிக்காணாமல் போனது என்று மக்களுக்குத் தெரியாதா என்ன?

தன்னைச்சுற்றி வாழும் தமிழ் மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்காக நான் எதுவரையும் முயன்று எட்டிப் பறிப்பேன்.அதனால் எனக்கு என்ன நேர்ந்தாலும் அதுபற்றி எனக்குக் கவலைகள் இல்லை.என் மக்களின் சுபிட்சம் ஒன்றே என் குறிக்கோள்.அதுவே என் மூச்சு என வாழும் ஒரே தலைவி நம் அம்மாதான்.அம்மா என அன்போடு இன்று தமிழகம் உச்சரிக்கும் ஒரே தாரக மந்திரம் இதுதான்.இது என்றென்றும் நிரந்தரம்.

தொடர்ந்தும் தமிழ் மண்ணில் அம்மாவின் ஆட்சியே தொடர்ந்திருந்தால்.தமிழ் நாட்டில் மின்வெட்டு என்ற சொல்லே தென்பட்டிருக்காது.விலைவாசி உயர்வு விண்தொட்டிருக்காது.வறுமை எனும் சாபம் ஒழிக்கப்பட்டு வளமை எனும் தீபம் ஏற்றப்பட்டு பசுமை மிளிர்ந்திருக்கும்.நீரில்லை சோறில்லை எனும் கொடுமைகள் நீங்கி சுபம் பெற்றிருக்கும்.வன்மைகள் அங்கொன்றும் இங்கொன்றும் கூட இல்லாமல் மண்விட்டு மறைந்தே ஒழிந்தும் தொலைந்தே போயிருக்கும்.

ஆகவே நாம் இனிமேலாவது விழித்திருப்போம்.வில்லங்கம் இனி நிகழ்ந்துவிடாமல் தமிழகத்தைக் காத்திருப்போம்.நிசம் என்ன?பொய் என்ன ?என்பதை இப்போதாவது நாம் புரிந்துகொண்டோமே.அது போதும்.நல்லவேளை ஆண்டவன் செயலால் முழுமையாகப் பராகரியாவதற்குள் விழித்துக்கொண்டுவிட்டோம். உசாராக இருப்போம்.அம்மாவின் அற்பணிப்பு சேவைகளுக்குக் நாம் கரங்களாக உயர்ந்து உதவுவோம்.

வாழ்க அம்மா.வளர்க அம்மாவின் ஆட்சி.

என்றும் ஒலிக்கட்டும் எம்.ஜி.ஆர் எனும் இனிய நாமம்.

கொ..பெ.பி.அய்யா.

இதய தெய்வமே போற்றி போற்றி.

இதய தெய்வமே போற்றி!போற்றி!

இந்தியாவின் இதயம் தமிழகம்--எங்கள்
இதய தெய்வம் அம்மா!
சந்தியா அன்னை  வள்ளல்--தந்த
தங்கத் தாரகை அம்மா!
இதய தெய்வமே போற்றி!போற்றி!

அம்மாவின் தமிழ் நாடு வாழ்த்து.
--------------------------------------------------
தருவேயருளே திருவே வாழ்க!
தமிழே!எமையாள் அம்மா வாழ்க!

பல்லவம் கொங்கு பாண்டியம் நாஞ்சில்
வல்லவ சேது ஈழம் சோழம்
சேரம் செழித்த இலக்கியத் தமிழகம்
சீராம் சிறப்பாம் அம்மா வாழ்க!

காவேரி பொன்னி பாலாறு பெண்ணை
தாமிரபரணி வைகை பெரியாறு
பூமூன்று விளைய பொங்கிடக்கருணை
நீ தந்தாளும் வளநாடு வாழ்க!

வங்கம் மன்னார் இந்துமாக் கடல்கள்
பங்கமாகா கீழ்தென் அரண்கள்.
மங்கா உன் புகழ் பாடிடும் அலைகள்
சங்கம் பாடும் அம்மா வாழ்க!

மேற்கும் கிழக்கும் மலைத்தொடர் கூட்டம்
ஈர்ககும் வாசனை இந்திரத் தோட்டம்.
பார்ககும் உலகின் பரவச ஆட்டம்
தீர்க்கம் பொழிலாம் அம்மா வாழ்க!

இனிக்கும் தன்மை இயலிசை நாடகம்.
கணக்கின் செம்மை தொகையும் பாட்டும்.
காவியம் காப்பியம் தொன்மை போற்றும
மேவிய செந்தமிழ் அம்மா வாழ்க!

அம்மா அம்மாதான்.
-----------------------------------
அம்மா என்றாலே திக்கெட்டும்--சும்மா
அதிருதுல்ல திக்கென்றும்.
அம்மா என்றாலே அம்மாதான்--நிலையாய்
இம்மாநில முதல்வர் அம்மாதான்.

அம்மா என்னும் அன்பின் சொல்--சிலரை
அச்சம் பற்றும் மாயமென்ன!
மம்மி என்றும் அயல் பழகியும்-தானே
தும்மலில் வெளிப்படும் அம்மாதான்.

அம்மா என்றால் சும்மாவா!-ஏழை
அன்பில் உதித்த சொல்லல்லவா!
வறுமை ஒழித்தவர் அம்மாதான்--தமிழ்
பெருமை உயர்த்தினார் அம்மாதான்.

கூலிக்கு உழைக்கும் ஏழை-- வயிறு
வேளைக்கு உணவு சாலை .
யாருக்கு விளங்கும் துயரு--இதை
பாருக்கும் சொன்னார் புரிவு.

அன்னபூரணி அம்மா திட்டம்--வேறு
எண்ண யாரினி உண்டோ சொல்.
அம்மா உணவகம் அட்சயபாத்திரம்-நன்மை
அருளிய அம்மா அம்மாதான்.

ஆலயம் தோறும் அன்னதானம்.--உண்டு
ஆற்றும்பசிக்கு அம்மா ஞானம்
பிள்ளைச் சோறும் கேட்பாரில்லை--இன்று
பிச்சை கோரும் பாவமுமில்லை.

வயது முதிர்ந்தும் சிறுமயில்லை--எவரும்
அருமை குறைந்தும் அநாதியில்லை.
ஏழை என்றொரு சொல்லிருந்தாலும்--வறுமை
ஏழ்மை என்றிங்கு துயரமில்லை.

விதிவெல்லும் உயர்நிலை மருத்துவம்--தாய்மை
கதிகூட்டும் கற்பினியர் சிகிச்சைகள்
பிறப்பும் முதலே காலந்தொட்டும்--அரசே
பொறுப்பெனும் அம்மா அம்மாதான்.

அம்மா உணவு அம்மா மருந்து
அம்மா குடிநீர் அம்மா அரங்கு
அம்மா கனவு ஆனது நினவு
அம்மா! அம்மா!அவரே அம்மா.

அம்மாவின் தொழிற் புரட்சி.
------------------------------------------
தொழில் வளற்சி மாநாடு 
பொழில் எழுச்சி தாய்நாடு.
எழில் மலற்சி வளநாடு--அம்மா
எழு புரட்சித் தமிழ்நாடு.

சிந்தனைகள் வேறில்லை 
நிந்தனைகள் பாடில்லை.
கண்டடையும் உச்சயெல்லை--அம்மா
கொண்டநடை தமிழ்நாடு.

அரசியல் வெறும்பேச்சு
விரசியல் விடும்மூச்சு
உரசாத நெருப்பாச்சு--அம்மா
புரட்சித் தொழில் தமிழ்நாடு.

பன்னாடும் கண்ணுயர்த்தும்.
பொன்னாடு என்றுயர்த்தும்.
இரண்டு லட்சம் கோடிமுதல்-அம்மா
திரட்டித் தந்த தமிழ்நாடு.

முன்னேறும் பாதையொன்றே
தன்னோட பார்வையென்றே
கொண்டாளும் நேர்மைகொண்ட--முதன்மை
அம்மாவின் தமிழ்நாடு.

மழை நீரை சேகரிப்போம்-
--------------------------------------
தண்ணீர் தண்ணீர் என தவிக்கும் காலமும்
தரணியில் வரவேண்டாம்—அதை
எண்ணிச் செய்தார் இன்றே அம்மா
இந்தியாவின் முன்னோடியாய்

கூரை நீரை பூமிக்குள் புதைத்தார்
பூமி நீரை கரைகட்டித் தடுத்தார்--மழைநீர்
ஒவ்வொரு துளியும் உயிரெனக் காத்தார். 
இவ்வையம் வாழ்த்த அம்மா உயர்ந்தார்.

இருள் விலகியது
--------------------------------
பகலிலும் சிலர்க்கு
இருட்டாய் தெரியும்.
இரவா பகலா புரியாது.-அதிசயம்
இரவும் பகலானது

உபரி மின்சாரம்
சுபமாச்சு தமிழகம்.
சபை முழங்கட்டும்
சபாஸ் அம்மாவுக்கு.


எதிரி எவருண்டு!
------------------------
எதிரிதான் எவருண்டோ!
எதிர்க்க ஒரு பொருளுண்டோ!
உதிரிகள் ஊளையிங்கோ!
விதிவழி சடங்கன்றோ!

விதியோ மரபோ! எதுவானாலும்
எதிர்க்கவும் ஓராள் இருக்கட்டும்
என்றே நாமே கொண்டுவந்தோம்
ஆனாலிங்கு ஆளில்லை காணோம்.

எங்கோ செய்யும் நகைச்சுவைகள்
இங்கும் செய்தால் சிரிக்கலாம்.
துருத்தாமல் நாவு திருத்தமாய்
உரைத்தால் ஆஹா ரசிக்கலாம்

ஊருக்கெல்லாம் பெய்யும் மழை
உமக்கும்தான் உண்டும் முறை
பாருக்கெல்லாம் அம்மாதான்
பாவம் நீவீர் சும்மாதான்.

பொச்சாப்புப் புலம்பல்கள்..
பொறுப்பில்லா ஓட்டங்கள்.
மிச்சமுள்ள தொடர்களேனும்
வருகை தந்தால் வாழ்த்தலாம்.

இந்தியாவின் முன்னோடி
எந்தநாளும் தமிழ்நாடே!
சந்தியாவின் மகளேதான்
இந்தியாவின் எதிர் காலம்.

இதய தெய்வமென்று சொன்னாலென்ன!
-------------------------------------------------------------
செய்யுந்துணை என்றுமே
மெய்கருணை கொண்டுமே-எம்மை
உய்விக்க நேர்ந்தாரை
உள்ளத்தால் அம்மாவை
தெய்வமென்று சொன்னாலென்ன!--பணிந்தும்
தொழுவதும் எம்பெருமை.

சொந்தங்கண்டு வாழாமல்
தன்னலமும் பேணாமல்—எம்மை
பந்தமென்று தாங்கிடும்
பாசங்கொண்ட அம்மாவை
தெய்வமென்று சொன்னாலென்ன!-பணிந்தும்
தொழுவதும் எம்பெருமை


கொ.பெ.பி.அய்யா.


Saturday 12 September 2015

அம்மான்னா அம்மாதான்.

அம்மான்னா அதிருதுல்ல!

அம்மா என்னும் சொல்லுக்கு-பொருள்
அன்பு ஒன்றே உலகுக்கு.
அம்மா என்றும் சொன்னாலே-சும்மா
அதிருதுல்ல விண்ணுக்கு.

அம்மா என்று மொழிவதற்கு--உயிர்
ஆன்மாவில் பிறப்பதற்கு.
அம்மா தான் மொழிகளுக்கு--சொல்லின்
ஆதாரம் சிறப்பதற்கு..

அம்மா சொல் இயல்புக்கு--ஐயோ!
மம்மி  தானோ !
அம்மா என்றே இசைக்கின்ற---இளங்
கன்றுக்கென்ன பயிற்றுவதோ!

அம்மாவுக்கும் மாற்றெதற்கு--தமிழ்
அறிந்தும் தானே ஏற்றிருக்கு--மொழி
அம்மா ஒன்றே மொழிவற்கு--நிலை
கொண்டும் அம்மா ஆள்வதற்கே!

கொ.பெ.பி.அய்யா.


Wednesday 9 September 2015

தொழிற் புரட்சி

அம்மாவின் தொழிற் புரட்சி.

தொழில் வளற்சி மாநாடு
பொழில் எழுச்சி தாய்நாடு.
எழில் மலற்சி வளநாடு
எழு புரட்சித் தமிழ்நாடு.

ஒன்றுக்குள் ஒன்றான
இந்தியாவின் நன்றான
நன்றுக்குள் வென்றான
நின்ற புகழ் தமிழ்நாடு.

சிந்தனைகள் வேறில்லை
நிந்தனைகள் பாடில்லை.
கண்டடையும் உச்சயெல்லை
கொண்டநடை தமிழ்நாடு.

வந்தனையும் வரவுகள்
கொண்டனையும் உறவுகள்.
என்றுணர் புரிவுகள்
என்றும்வளர் தமிழ்நாடு.

அரசியல் வெறும்பேச்சு
விரசியல் விடும்மூச்சு
உரசாத நெருப்பாச்சு
புரட்சித்தொழில் தமிழ்நாடு.

பன்னாடும் கண்ணுயர்த்தும்.
பொன்னாடு என்றுயர்த்தும்.
நன்னார்வம் முந்திவரும்
தன்னாடாம் தமிழ்நாடு.

முன்னேறும் பாதையொன்றே
தன்னோட பார்வையென்றே
கொண்டாளும் நேர்மைகொண்ட
அம்மாவின் தமிழ்நாடு.

கொ.பெ.பி.அய்யா.


எதிரி எதிரே யார்?

எதிரி எவருண்டு!

எதிரிதான் எவருண்டோ!
இமயத்தின் நிகருண்டோ!
உதிரிகள் ஊளையீட்டே
உலகையும் உருட்டல் கண்டோ!

பொச்சாப்புப் புலம்பல்கள்.
எச்சைகளின் அலம்பல்கள்
அச்சமில்லா அம்மா முன்
துச்சமெனும் தூசு மண்.

இந்தியாவின் முன்னோடி
எந்தநாளும் தமிழ்நாடே!
சந்தியாவின் பெண்ணேதான்
இந்தியாவின் எதிர் காலம்.

யாருக்கென்ன இல்லையோ!
ஊருக்குள் கேட்ட சொல்லோ!
நேருக்கு நேரே நில்
நீருக்கு நெருப்போ சொல்!

மக்களின் சக்தியடா!
சிக்கினால் முக்தியடா!
திக்கெல்லாம் தொண்டரடா!
சக்கையும் மிஞ்சுமாடா!

காவடி ஆட்டமெல்லாம்
சேவிக்கத் தானென்றால்
பாவிக்கும் தீட்சமுண்டு
கூவிக்கேள் அம்மா என்று.

ஊருக்கெல்லாம் மழையுண்டு.
உனக்கும்தான் நலமுண்டு.
பாருக்கெல்லாம் அம்மாதான்.
பாவம் நீயும் நம்மாள்தான்.

கொ.பெ.பி.அய்யா.

Sunday 30 August 2015

மாசிலாமணி.

புரட்சித் தலைவி அம்மா!

அம்மா முகத்தைப் பாருங்கள்.!
அன்பின் வனப்பைக்க் காணுங்கள்!.
இந்த முகம்தான் எங்கள் தெய்வம்.!.
பந்தம் கழகம் பாசறை அம்மா.

கள்ளம் அறியா உள்ளம் அம்மா.
துள்ளும் சிரிப்பே வெல்லும் அம்மா...
வெள்ளை மனமே பிள்ளைக் குணமே.
இல்லை சினமே எங்கள் அம்மா.!

மாசிலா மணியே மங்களம் அம்மா.
ஆசிலா மொழியே அன்பாம் அம்மா..
பேசுந் தென்றல் பிழையதில் புயலே.
கூசும் மன்றில் கறைபடாஅம்மா.!

வணங்கா முடியும் வழிபடும் அம்மா.
துலங்கும் பகலாய் விளங்கும் அம்மா.
கலங்கா மலையோ துணிவின் நிலையோ!
விளங்கும் கலையோ கடமை அம்மா.

சோதனை உடைத்த நீதியும் அம்மா.
சாதனை படைத்த பாதையும் அம்மா.
வாதினை எதிர்த்து வழக்கினை முடிக்கும்
மாதென உதித்த தேவதை அம்மா.

கள்ளம் செய்வார் காலன் அம்மா.
நல்லன பெய்வார் மாலன் அம்மா..
வில்லர் முறித்து விடியல் காட்டும்
வெள்ளம் காவிரி உள்ளம் அம்மா.

நிழல்  தரும் ஆலமரம் கருணையம்மா.
விழுதாம் பலமாம் தமிழுக்கு அம்மா.
நிலைபெறும் ஆட்சி வளம்பெறும் மாட்சி.
தொழிலதன் புரட்சி தலைவி அம்மா.

கொ.பெ.பி.அய்யா,

Monday 24 August 2015

ஜெயம் ஜெயலலிதா.

எதிரியும் அஞ்சும் அஞ்சா நெஞ்சம்.
“தங்களுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகம் என்று எதைக் கருதுகிறீர்கள்?” என்று ஜெயலலிதாவிடம் ஒருமுறை கேட்கப்பட்டது. “ஒன்றா, இரண்டா வார்த்தைகளில் சொல்ல...?” என்று அவர் திருப்பிக் கேட்டார்! “பெண்ணாகப் பிறந்தது தவறு என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டபோது, “இல்லை... இல்லவே இல்லை!” என்றும் உறுதியாகச் சொன்னார் ஜெயலலிதா! அத்தகைய உள்ள உறுதியின் உருவகம்தான் ஜெயலலிதா! அதுதான் அவரை தமிழக அரசியலில் வலிமையான தலைவர்கள் வரிசையில் இடம்பெற வைத்துள்ளது. அரசியல் தோல்விகளைக் கடந்து வந்து, அழிக்க முடியாத இடத்தைப் பெறுபவர்களைத்தான் தவிர்க்க முடியாத சக்திகளாகச் சொல்ல முடியும். ஜெயலலிதாவும் அப்படிப்பட்டவர்தான்! ஜெயலலிதாவின் அரசியலோடு கருத்து மாறுபாடு உள்ளவர்கள்கூட அவரது துணிச்சல், தளராத முயற்சி, தொடர்ச்சியான போராட்டக் குணம் ஆகிய மூன்றையும் ஒப்புக் கொள்வார்கள். 

Thursday 25 June 2015

என்னடா வழக்கு.

என்னடா வழக்கு?

என்னடா வழக்கு ஏனிந்த பொழப்பு?
உன்னோட கணக்கு ஊருக்குள் மணக்கு--ஒரு
பெண்ணோட எதிர்ப்பு பேடியே உனக்கு
மண்ணோட புதையும் மாபாவம் இருக்கு.

சண்டாளர் நெனப்பு மண்ணாளும் துடிப்பு
பெண்ணாளை அழிக்க என்னென்ன முடிப்பு?--நேரே
முன்னின்னு ஜெயிக்க முடியாத நடிப்பு
இன்னென்ன முறுக்கு படியாத படிப்பு?

வழக்கென்ன வழக்கடா வரட்டுண்டா பாக்கலாம்.
இழப்பென்ன எமக்கடா இடமுண்டா கேக்கலாம்--நெஞ்சில்
அழுக்கென்ன உனக்கடா வெளுக்கும்வரை போக்கலாம்
இழுக்கென்ன புரியுமடா இனிஉன்னை தூக்கலாம்.

பெண்ணாளப் பொறுக்காத சண்டாளக் கூட்டமே
எந்நாளும் நிலைக்காது உம்மோட ஆட்டமே---தமிழ்
மண்ணாளப் பிறந்தஎம் அம்மாதாம் ஆட்சியே
கண்ணாற மனமாற காண்பதும்உம் மாட்சியே.

கொ.பெ.பி.அய்யா.




Tuesday 23 June 2015

மனச்சாட்சி இல்லை.

மனிதம் அற்ற அரசியல்.

தமிழ் நாட்டு அரசியல்தான்.
தரம் கெட்ட விரசியல்தான்.--காரி
உமிழ்கிறது உலகம்தான்.

பழி போடும் அரசியல்தான்.
பகல் வேடம் இழிசெயல்தான்--கீறி
பலிவாங்கி சிரிக்கிறது.

பொய் பேசும் அரசியல்தான்
மெய் கூசும் அணிபெயல்தான்--மாறி
தொய்கிறது மனநிலைதான்.

சுயம் வாழும் அரசியல்தான்.
பொது வாழ்வு அரிதாரம்தான்.--நீரி
மயங்குவது உழைப்பவர்தான்

கூலிக்காடும் அரசியல்தான்.
கொள்கை மாறும் புரட்டியல்தான்.--மீறி
வேலிதாண்டி மேய்கிறது.

மானம் கெட்ட அரசியல்தான்.
ஈனம் விட்ட விவச்சாரம்தான்--ஊறி
நாணம் பட்டு அலைகிறது.

மனிதம் அற்ற அரசியல்தான்.
புனிதம் செத்த அரக்கினம்தான்--கோரி
மனிதரத்தம் சுவைக்கிறது.

ஊழல் எனும் அரசியல்தான்
ஊதாரி ஒழுங்கீனம்தான்--தேறி
ஊழியாகி விளைகிறது.

பித்தலாட்டம் அரசியல்தான்
குத்தலாட்டம் புரிவதுதான்---கூறி
சத்தியம்தான் அழுகிறது.


கொ.பெ.பி.அய்யா.

Tuesday 26 May 2015

பாவி சுப்ரமணி

எங்கிருந்தோவந்தான்.

எங்கிருந்து வந்தவனோ-நிலம்
தங்கியிங்கு வாழ்பவனோ!
சொங்குமொழி பேசுமவன்-ஐயோ
பங்கஞ்செயும் பாவியவன்.

சுப்ரமணி யென்பானவன்--சப்ரம்
சாவியையும் எடுப்பானவன்.
கூலிக்கவன் மாரடிப்பான்--நீதி
வேலியையும் சீரழிப்பான்.

எங்கிருந்தோ அலறுகிறான்--பொய்
ஏதேதோ உளறுகிறான்.
சங்கறுந்த கோழிபோலும்--தலை
தொங்கிஊளை கூவுகிறான்.

வேலையற்ற கோழையவன்--சுய
மூளையற்ற பாறையவன்.
நெஞ்சமற்ற வஞ்சனவன்.--நேர்
கொஞ்சமற்ற கஞ்சனவன்.

ஆடும்வரை ஆடிடுவான்.--தானே
அகமொடுங்கி வாடிடுவான்.
தேடுமவன் பாவங்களே--கூடும்
நரகமவன் சாபங்களே!

கொ.பெ.பி.அய்யா.



Thursday 30 April 2015

தனக்குத்தானே தீ

தனக்குத்தானே

தனக்குத் தானே படிப்பவன்
தலையில் தீ வைப்பவன்.
எனக்குத் தெரியும் என்பவன்
எரிவது புரியாமல் அழிகிறான்.

மல்லாக்கப் படுத்துத் தன்
மார்மீதே உமிழ்கிறான்.
சொல்லாக்கம் விளங்காமல்
சீர்கெட்டு உளர்கிறான்.

தன்னைத் தானே பாறைமீது
முன்னை முட்டி படுகிறான்
கண்ணைக் கட்டி குழியிலே
மண்ணை மூடி விழுகிறான்.

ஆளாக்கி விட்டவரை
கீழாக்கிப் பழிக்கிறான்.
பாழாக்கும் பொல்லோரை
தோளாக்கி இழிகிறான்.

ஊரு கெட்டுப் போனாலும்
தூரம் போய் வாழலாம்.
பேரு கெட்டு நாறிபோனால்
யாரிடம் போய் சேரலாம்.

குடிகாரன் சொல்வதெல்லாம்
அதிகாரம் ஆகுமா?
அரிதார வேசமெல்லாம்
அழியாமல் போகுமா?

ஆடும்வரை ஆட்டமெல்லாம்
கூடும்சனம் கூட்டமெல்லாம்
வீழும்வரை இரசிக்கத்தானடா
வீழ்ந்தபின் சிரிக்கத்தானடா.

தூண்டிவிடும் கோழைத்தனம்,
தூண்டில்விழும் ஏழைத்தனம்.
ஆண்டிமடம் பேடித்தனம்,
ஆண்டதுண்டா அடிமைத்தனம்?

கொ.பெ.பி.அய்யா.

Monday 20 April 2015

அம்மாவின் ஆட்சி.

அம்மாவின் ஆட்சி.

அம்மாவின் ஆட்சி ஆளுந்தமிழாட்சி.
அண்ணாவின் தம்பி எம்ஜியாராட்சி.
ஆயிரம் யுகங்கள் அது நிலையாட்சி.
ஆலய முகங்கள் அவர் புகழ்சாட்சி

ஏழைகள் வயிறு குளிர்ந்திட்ட ஆட்சி.
நாளைய கவலை தொலைந்திட்ட ஆட்சி.
அடிநிலைத் தமிழன் வளர்ந்திட்ட ஆட்சி.
விடியலில் உழவன் விழித்திட்ட ஆட்சி.

பாமரன் இல்லா பழந்தமிழ் ஆட்சி.
கோமள வள்ளி குலமகள் ஆட்சி.
தேவைகள் திகட்டிய திருமகள் ஆட்சி.
நோவுகள் அகற்றிய நலந்திகழ் ஆட்சி.

அறிவியல் புரட்சி நிறுவிய ஆட்சி.
அலுவல் வறட்சி அருகிய ஆட்சி.
மனதும் நிறைந்த ஏழையின் ஆட்சி.
மலர்ந்தது இராமன் தூய்மை ஆட்சி.

கொ.பெ.பி.அய்யா.

Monday 16 February 2015

அம்மாதான் வென்றது.

அம்மாதான் வென்றது.

அம்மாதான் வென்றது.
சும்மா மற்று என்றது.
மக்கள் மன்றம் தீர்ப்பெழுதி
திக்கெல்லாம் சேர்த்தது.

பொய்வான வேடிக்கைகள்.
செய்மோச சோடனைகள்.
மெய்தாங்கக் கதியிழந்து
தொய்நைந்து அழிந்தது.

இரண்டாயிரத்துப் பதினாறாம்
மிரண்டோடும் எதிராரும்.
எப்பவுமே அம்மாதான்
செப்பும் தமிழ் நின்றாளும்.

முடியட்டும் நரியாட்டம்.
விடியட்டும் இனியாச்சும்.
மீட்சி பெற்ற தமிழகம்
ஆட்சி என்றும் அம்மாதான்.

கொ.பெ.பி.அய்யா.

Tuesday 3 February 2015

விதியோ சதியோ!

விதியோ!சதியோ!

விதியோ சதியோ எதுதான் தாயே!
மதியால் முடிப்பாய் அதுதான் நீயே!
விரித்தவன் வீழ்வான் வலையில் அவனே
நெறித்தமிழ் ஆள்வாய் நிலையில் புகழே!

விதியும் சதியும் வினையென்ன செய்யும்
மதியும் கதியும் துணைமுன்ன செல்லும்.
தமிழினம் உனது தனிப்படை எதிர்த்தும்
எமனிடம் படவும் துணிவதும்  எவராம்.

விதியா மதியா விளையாடு தாயே !
சதியா கதியா சதுராடு நீயே!
பத்துக் கோடிகள் பலம்கொண்ட உன்னை
வெத்துப் பேடிகள் விழிக்குமோ முன்னை!

விதியென்ன சதியென்ன எதுஉன்னை வெல்லும்?
கதியென்ன அதுதன்னை மதிபின்னே தள்ளும்.
தாயிடத்தில் சேயணைய நாயெதுதான் தடுக்கும்?
கோயிலிடம் கூவைகளும் கூவியென்ன கெடுக்கும்?

விதிகெட்டு சதிபட்ட வினைக்கூட்டு முறியும்.
மதியெட்டு கதிதொட்ட கணையாட்டம் புரியும்.
பொய்யதனை மெய்யாக்க புனைந்தவொரு நாடகம்.
மையழித்துக் கைநீக்கி அணைந்துதிரை மூடாகும்.

கொ.பெ.பி.அய்யா.
.