Tuesday 26 May 2015

பாவி சுப்ரமணி

எங்கிருந்தோவந்தான்.

எங்கிருந்து வந்தவனோ-நிலம்
தங்கியிங்கு வாழ்பவனோ!
சொங்குமொழி பேசுமவன்-ஐயோ
பங்கஞ்செயும் பாவியவன்.

சுப்ரமணி யென்பானவன்--சப்ரம்
சாவியையும் எடுப்பானவன்.
கூலிக்கவன் மாரடிப்பான்--நீதி
வேலியையும் சீரழிப்பான்.

எங்கிருந்தோ அலறுகிறான்--பொய்
ஏதேதோ உளறுகிறான்.
சங்கறுந்த கோழிபோலும்--தலை
தொங்கிஊளை கூவுகிறான்.

வேலையற்ற கோழையவன்--சுய
மூளையற்ற பாறையவன்.
நெஞ்சமற்ற வஞ்சனவன்.--நேர்
கொஞ்சமற்ற கஞ்சனவன்.

ஆடும்வரை ஆடிடுவான்.--தானே
அகமொடுங்கி வாடிடுவான்.
தேடுமவன் பாவங்களே--கூடும்
நரகமவன் சாபங்களே!

கொ.பெ.பி.அய்யா.