Wednesday 24 August 2016

கதம்பம்2

கிழிபடத்தான் வெளிநடப்பு.

வெளியிலென்ன கிடைக்குமென்று-தினம்
வெளிநடப்பு செய்யுந்துண்டு.
கிழிபடத்தான் வெளிநடப்போ—பாவம்
பலிகடா மக்கள்தானோ!
==============================

கர்ஜிக்கும் கண்ணகி.

முத்துப்பறல் தெறிக்கத்தான்-அந்த
ஒத்தைக்குரல் சிங்கந்தான்.
கர்ஜித்த கண்ணகிதான்-அந்தக்
காட்சியின்று அம்மாதான்.
===================================

அச்சமென்ன துச்சாதனா?

கொச்சைமொழிக் கோமாளி-இழி
லட்சைக்கஞ்சா பேமானி!
அச்சமென்ன துச்சாதனா!—வா!வா!
வஞ்சந்தீர்க்க மிஞ்சமாட்டோம்.
===================================

பாடம் படிக்கத்தான்.

வகைமுறை தெரியாமத்தான்-ஒருவன்
வாய்த்ததைக் கோட்டைவிட்டான்.
ஆடுமுங்கள் கூட்டங்கூட-அந்தப்
பாடம் படிக்கத்தான்.
=====================================

Thursday 4 August 2016

வயக்காட்டு பொம்மைகள்.

வயக்காட்டு பொம்மைகள்.

குழுக்கள் ஏதும் எமக்குள் இல்லை.
பலமே எல்லாம் அம்மா தில்லே!
எதிர்க்கும் இலக்கில் எதிரிகள் எவரே!
சிலிர்க்கும் வியர்வை உதிரிகள் அவரே!

வயக்காட்டு பொம்மைகள் பயங்காட்டும் வேலை
பயக்காது அம்மா படைமுன் வீணே!
நரிஊளைக் கூச்சல் இழிகோழை வாய்ச்சொல்.
நெறியாளும் அம்மாமுன் தெறித்தோடும் ஈசல்.

பதினெட்டுக் கணக்கு எத்தனைநாள் உம்மோடு?
மதிகெட்ட பிணக்கும் விதிவழி உம்கேடு.
பண்பற்ற செயல்முறை பாழான பாடமும்
படிப்பதும் நடைமுறை பயிற்றும் காலமும்..

எதிர்க்கவும் பலமுண்டு என்றும்நீ நம்பினால்
சதிக்கென்ன கதியுண்டு சரித்திரம் புரட்டினால்.
பொய்யான சிரிப்பாலே மெய்யழிந்து போகாது.
செய்யாத தரிசாலே சீர்தரலாகாது.

கவிஞர்கொ.பெ.பி.அய்யா.