Tuesday 2 October 2018

இலை துளிர்த்து இல்லம் செழிக்கட்டும்.

இலை துளிர்த்து இல்லம் செழிக்கட்டும்.

இளம் துளிர்த்து இல்லம் செழிக்கட்டும்/.

இலை துளிர்த்து இல்லம் செழிக்கட்டும்
வளம் கொழித்து வாழ்வு மலரட்டும்.
நிலை உயர்ந்து நெஞ்சம் நிறையட்டும்
நலம் நிகழ்ந்து நாடு சிறக்கட்டும்.

உழவு பிழைத்து உரிமை நிலைக்கட்டும்
பழமை படித்து பசுமை தழைக்கட்டும்
நதிகள் இணைந்து நன்செய் விரியட்டும்.
விதிகள் திருந்தி வேளாண்மை திரும்பட்டும்.

இருளும் அகன்று பகலும் போன்றாகட்டும்.
மருளும் மடிந்து அருளும் தோன்றட்டும்.
வறுமை தகர்ந்து அருமை ஊன்றட்டும்.
பெருமை நுகர்ந்து சிறுமை மாண்டாகட்டும்

காந்தி சொன்னதும் கனவில் வென்றாகட்டும்.
காட்சியில் கண்டதும்  நினைவில் நின்றாகட்டும்.
ஆழ்ந்த இரவிலும் அணிந்த கன்னியாகட்டும்
ஓய்ந்த தெருவிலும் உலாவலாம் என்றாகட்டும்.

ஆட்சித் திறனதும் மாட்சிமை அரணாகட்டும்.
ஆளுமை உரம்கண்டு அற்றது பயமாகட்டும்..
பொற்கையன் ஆட்சிபோல் போற்றவும் சிறப்பாகட்டும்.
பெற்றதாய் நேர்த்திபோல் பெற்றதும் வரமாகட்டும்..

கொ.பெ.பி.அய்யா.

 

No comments:

Post a Comment