Friday 31 October 2014

என்ன பிரச்சனை


பிரச்சனை என்ன?

எழுந்திடு மகனே! எழுந்திடு மகளே!
விழுந்தது மறந்து எழுந்திடு சுகமே
அழுவது எதற்கு விழுவதும் கணக்கு
எழுவதும் எளிதென பழகிடும் உனக்கு

அழுகவும் சிரிக்கவும் அடையாளம் இருக்கு.
பழகவும் முறிக்கவும் படிப்பதாம் அதற்கு.
விழுகவும் எழுகவும் அனுபவம் பழக்கு
விலகவும் விளங்கவும் அறிவதும் வழக்கு.

பள்ளம் மேடு பயணத்தில் பழகு!
உள்ளம் தேடும் உலகம் அழகு.
வெள்ளம் ஓடும் விசையில் விலகு!
கள்ளம் ஆடும் கபடம் உலகு.

சோதனை பயின்று சாதனை முயல்க!
வேதனை முயன்று போதனை பயில்க!
வாதினை எதிர்த்து வடுவினைக் கலைக!
சூதினை வதைத்து கொடுவினை தொலைக!

பிரச்சனை என்ன பண்ணிடும் உன்னை
சவாலாய் எண்ணி முன்னிடு தன்னை.
பணிந்தால் மனதும் கலங்கிடும் பின்னே!
துணிந்தால் கடலும் சுருங்கிடும் முன்னே

எனக்கொரு சவால்  என சொல்லிப்பார்.
உனக்கது பிரச்சனை ஒடும் பார்.
கனலாய் சவாலை எரிய விட்டால்
மனதுள் நம்பிக்கை ஒளிருது பார்.

வாழ்க்கை மேடையில் வகைபல வேடங்கள்.
வாழும் போதையில் அவையெலாம் மாயங்கள்.
காலம் கற்பித்த அனுபவப் பாடங்கள்
ஆளும் உண்மைகள் அதுதான் வேதங்கள்.

கொ.பெ.பி.அய்யா.



முக நூலில்
சற்று முன் படித்த ஒரு பதிவு…

“எனக்கு ஒரு பிரச்சினை..”என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்...
பிரச்சினை என்று சொன்னாலே கவலையும் , பயமும் கட்டாயம் வரும்....
"எனக்கு ஒரு சவால் “என்று சொல்லிப் பாருங்கள் ...தைரியமும் ,தன்னம்பிக்கையும் தானாகவே வரும்..”

ஆம்..நிஜம்தானே..!

“காவல்காரன்” என்று ஒரு படம்.. எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட பின் எம்.ஜி.ஆர்.நடித்த படம்.... ஷூட்டிங் ஆரம்பமானது...
வசனம் பேசி நடித்தபோது , எம்.ஜி.ஆரின் குரலில் குறை தெரிந்தது..முன்னர் பேசியது போல் தெளிவாகப் பேச முடியவில்லை..

“பொருத்தமான குரல் உடையவர்களைக் கொண்டு டப்பிங் கொடுத்து இந்தப் பிரச்சினையை சரி செய்து விடலாம் ” என்று சிலர் யோசனை சொல்லியிருக்கிறார்கள்...

ஆனால், எம்.ஜி.ஆர். இதை ஏற்க மறுத்து விட்டாராம்...
“இது பிரச்சினை இல்லை..எனக்கு ஏற்பட்டிருக்கும் சவால்...
நானே என் சொந்தக் குரலில் பேசுகிறேன். மக்கள் ஏற்றுக் கொண்டால் தொடர்ந்து நடிக்கிறேன். ஒருவேளை என் குரலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் , சினிமாவில் நடிப்பதையே விட்டு விடுகிறேன்” என்று சவால் விட்டுக் கூறி , அதன்படியே, எம்.ஜி.ஆர். சொந்தக் குரலில் பேசினார்...

பலத்த எதிர்பார்ப்போடு வந்தான் காவல்காரன்...
சில இடங்களில் எம்.ஜி.ஆரின் குரல் தெளிவாக இல்லாவிட்டாலும், ரசிகர்கள் அதைப் பெரிய பிரச்சினை ஆக்காமல் ஏற்றுக் கொண்டார்கள்...
“காவல்காரன்” ...சூப்பர்ஹிட்..!!.

"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்"

ஆம்...பிரச்சினைகள் என்று நினைப்பவர்கள் ,பின்தங்கி விடுகிறார்கள்...!!!
சவால்களை சந்திப்பவர்களே சரித்திரம் தன்னிலே நிற்கின்றார்கள் ...!!!

சந்திக்கத் தயாராவோம்..சவால்களைளை

Tuesday 28 October 2014

அம்மா வரலாறு

செல்வி. ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு

தமிழ்த்திரை உலகில் புகழ் மிக்க நட்சத்திரமாகத் திகழ்ந்த சந்தியா _ ஜெயராமன் தம்பதிகளின் இரண்டாவது குழந்தையாக, 1948 பிப்ரவரி 24_ந்தேதி மகம் நட்சத்திரத்தில் ஜெயலலிதா பிறந்தார். ஜெயலலிதா பிறந்தது மைசூர் நகரில் என்றாலும், அவருடைய முன்னோர்கள் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள். ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் தகப்பனார் பெயர் ரங்காச்சாரி. இவர் மைசூர் மகாராஜாவின் குடும்ப டாக்டர். ஜெயலலிதாவுக்கு 1 வயது ஆனபோது, தந்தை காலமானார். முதலில் பெங்களூர் பிஷப் கார்டன் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்த ஜெயலலிதா, பின்னர் சென்னையில் சர்ச் பார்க் கான்வென்டில் படிப்பைத் தொடர்ந்தார்.

படிப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்தார். படிக்கும்போதே முறைப்படி பரத நாட்டியம் பயின்றார். 12_வது வயதில் அவருடைய நடன அரங்கேற்றம் நடந்தது. பிரபல வித்வான்களிடம் முறைப்படி கர்நாடக சங்கீதத்தைக் கற்றுக்கொண்ட ஜெயலலிதா, இசைக் கருவிகளை மீட்டவும், இனிமையாகப் பாடவும் தேர்ச்சி பெற்றார். 1964_ம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் தேறிய ஜெயலலிதா, தாய் மொழி தமிழைப்போல் ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் முதலான பிற மொழிகளையும் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டார். மேல் படிப்புக்கு ஜெயலலிதா முயற்சி செய்யும்போது, அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டு, திரை உலகப் பிரவேசம் நடந்தது.
ஜெயலலிதாவின் சித்தி (தாய் சந்தியாவின் தங்கை), வித்யாவதி ஏற்கனவே சினிமாவில் நடித்து வந்தார். அடுத்து சந்தியாவும் சினிமா நட்சத்திரமானார். ஜெயலலிதாவுக்கு சினிமாவில் விருப்பமில்லை என்றாலும், குடும்ப நிலை காரணமாக திரை உலகில் புகுந்தார். தொடக்கத்தில் சில கன்னடப்படங்களில் நடித்தாலும், அவர் கதாநாயகியாக நடித்து 1965_ல் வெளிவந்த டைரக்டர் ஸ்ரீதரின் "வெண்ணிற ஆடை"தான் அவரது முதல் தமிழ்ப்படம். அந்தப் படத்தயாரிப்பின்போதே பி.ஆர்.பந்துலுவின் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். 2 படங்களும் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றன.

தொடர்ந்து பல படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார்.   "வெண்ணிற ஆடை" படம் வெளிவருவதற்கு முன், ஜனாதிபதி வி.வி.கிரியின் மகன் சங்கர் கிரி தயாரித்த "எபிசில்" (லிகிதம்) என்ற ஆங்கிலப்படத்தில் ஜெயலலிதா நடித்தார். அந்தப் படத்தைப் பார்த்தவர்கள், "இதில் ஜெயலலிதா பேசுவதுதான் இங்கிலீஷ்! மற்றவர்கள் பேசுவது பட்லர் இங்கிலீஷ்!" என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார்கள். முதல் படத்திலேயே கதாநாயகியாகி, புகழ் ஏணியின் உச்சிக்கு சென்ற ஜெயலலிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல மொழிகளிலும் நடித்தார். சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று முன்னணி கதாநாயகர்கள் எல்லோருடனும் நடித்தார். ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, 1971_ம் ஆண்டு காலமானார்.

தாயாரின் நினைவாக தேனாம்பேட்டை போயஸ் தோட்டத்தில் வீடு ஒன்றைக் கட்டிய ஜெயலலிதா, அந்த வீட்டிற்கு "வேதா நிலையம்" என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். (சந்தியாவின் இயற்பெயர் `வேதா') ஜெயலலிதாவின் 100_வது படமான "திருமாங்கல்யம்" 1977_ல் வெளிவந்தது. அதன்பின் படங்களில் நடிப்பதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டார். 1980_ல் வெளிவந்த "நதியைத்தேடி வந்த கடல்" என்ற சினிமாதான் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம். சுமார் 16 ஆண்டுகளில் 112 படங்களில் நடித்து முடித்தார்.
சினிமா உலகை விட்டு விலகிய ஜெயலலிதா, 1982_ல் அ.தி.மு.க.வில் உறுப்பினராகச் சேர்ந்து, தனது அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். அதே ஆண்டில், கடலூரில் நடந்த மாநாட்டில் ஜெயலலிதாவை எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்தி, கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளராக நியமித்தார். ஜெயலலிதாவை, 1984_ல் ராஜ்யசபா உறுப்பினராக்கி, பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தார். நாடாளுமன்ற அ.தி.மு.க. துணைத் தலைவராகவும் ஆக்கினார். ராஜ்ய சபையில் ஜெயலலிதா பேசிய பேச்சுகள், அவருக்குப் புகழ் தேடித்தந்தன. குறிப்பாக, ஆங்கிலத்தில் அவர் பெற்றிருந்த புலமை அனைவரையும் கவர்ந்தது.

எம்.ஜி.ஆர். உடல் நலம் இன்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தபோது, தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. அ.தி.மு.க.வுக்கு தேர்தல் பிரசாரம் செய்வதில் ஜெயலலிதா முக்கியப் பங்கெடுத்துக் கொண்டார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் அ.தி.மு.க. பிளவுபட்டது. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் ஜானகி அம்மாள் முதல்_அமைச்சர் ஆனபோதிலும், தொண்டர்கள் ஜெயலலிதா பக்கம் இருந்தனர். எனவே, ஜானகி அம்மாள் மந்திரிசபை 24 நாட்கள் மட்டுமே பதவியில் இருக்க முடிந்தது. அதன்பின், ஜானகி அம்மாள் அரசியலை விட்டு விலகினார். ஒன்றுபட்ட அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். 1991 தேர்தலில் வெற்றி பெற்று முதல்_அமைச்சர் ஆனார். அதன் பிறகு நடந்தது எல்லாம் இந்த தலைமுறையினருக்கு தெரியும் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

தஞ்சை குமணன்
நன்றி;;தமிழ் மணம்.
பதிவு;;கொ.பெ.பி.அய்யா.
=======================================================================
“தங்களுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகம் என்று எதைக் கருதுகிறீர்கள்?” என்று ஜெயலலிதாவிடம் ஒருமுறை கேட்கப்பட்டது. “ஒன்றா, இரண்டா வார்த்தைகளில் சொல்ல...?” என்று அவர் திருப்பிக் கேட்டார்! “பெண்ணாகப் பிறந்தது தவறு என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டபோது, “இல்லை... இல்லவே இல்லை!” என்றும் உறுதியாகச் சொன்னார் ஜெயலலிதா! அத்தகைய உள்ள உறுதியின் உருவகம்தான் ஜெயலலிதா! அதுதான் அவரை தமிழக அரசியலில் வலிமையான தலைவர்கள் வரிசையில் இடம்பெற வைத்துள்ளது. அரசியல் தோல்விகளைக் கடந்து வந்து, அழிக்க முடியாத இடத்தைப் பெறுபவர்களைத்தான் தவிர்க்க முடியாத சக்திகளாகச் சொல்ல முடியும். ஜெயலலிதாவும் அப்படிப்பட்டவர்தான்! ஜெயலலிதாவின் அரசியலோடு கருத்து மாறுபாடு உள்ளவர்கள்கூட அவரது துணிச்சல், தளராத முயற்சி, தொடர்ச்சியான போராட்டக் குணம் ஆகிய மூன்றையும் ஒப்புக் கொள்வார்கள். 

http://aiadmkpaadalkal.blogspot.in/

Monday 27 October 2014

அரசியல்வாதி கட்டுரை

அரசியல்வாதி

ஜெயலலிதாவின் அரசியல் வரலாறு (சில முக்கிய தகவல்களுடன்)
1981-ஆம் ஆண்டு மதுரையில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடத்த தீர்மானித்தார் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அதை சிறப்பாக நடத்தி முடிக்கும் பொறுப்பை செய்தி விளம்பரத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனிடம் ஒப்படைத்தார். அந்த மாநாட்டில் காவிரி தந்த கலைசெல்வி என்னும் நாட்டிய நாடகம் நடைபெறுவதாக இருந்தது. அந்த நாடகத்தில் நடிப்பதற்காக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த ஜெயலலிதாவை அழைத்துவந்தார் ஆர்.எம்.வீரப்பன். அந்த வகையில் ஜெயாவின் அரசியல் பிரவேஷத்திற்கு வித்திட்டவர் ஆர்.எம்.வி.,தான்...பின்னாளில் அது தனக்கே பெரும் ஆப்பாக முடியும் என்று தெரியாமலே....
அதன்பிறகு சுமார் ஒன்றரை வருடம் கழித்து அதாவது 1982 ஜூனில் அ.தி.மு.க.,வின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டார் ஜெயலலிதா. பிறகு ஜூலையில் தான் கொண்டுவந்த சத்துணவு திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு கவர்ச்சியான முகம் தேவைப்பட்டது எம்.ஜி.ஆருக்கு. அப்போது அவரின் நினைவிற்கு வந்தவர் ஜெயலலிதா. மேடைக்கு மேடை சத்துணவு திட்டத்தையே பேசி அத்திட்டத்திற்கு புகழ் சேர்த்ததோடு மட்டுமல்லாமல் அந்த திட்டத்திற்கு நன்கொடையாக ரூபாய் 40,000 வழங்கினார்.
சத்திணவு திட்டத்தின் மீது ஜெ.,க்கு இருந்த அக்கறையை பார்த்த எம்.ஜி.ஆர். அவரை சத்துணவு திட்ட உயர்மட்டக்குழுவிலும் இடம் கொடுத்தார். தொடர்ந்து இவரை கவனித்து வந்த எம்.ஜி.ஆர்., 1983-இல் கழக கொள்கை பரப்பு செயலாளராக நியமித்தார். கொ.ப.செ., யான ஜெயலலிதா இன்னும் தீவிரமாக தமிழகத்தை சுற்றிவந்தார். அப்படி சுற்றிய ஜெயலலிதாவிற்கு செல்லும் இடமெல்லாம் அபார வரவேற்ப்பு கொடுத்து அசத்தினர் தொண்டர்களும், லோக்கல் நிர்வாகிகளும். எம்.ஜி.ஆருக்கு அடுத்தபடியான மரியாதையை தொண்டர்கள் ஜெ.,க்கு வழங்கினர்.
அனல் தெறிக்கும் பேச்சுக்கள் மூலமும், பிரச்சாரங்கள் மூலமும் மக்களை வசீகரிக்க ஆரம்பித்தார் ஜெ. எம்.ஜி.ஆரின் உத்தரவிற்கிணங்க ஜெயலலிதாவிற்க்கு அந்த பேச்சுக்களை எழுதித்தந்தவர் வலம்புரி ஜான். ஜெ.,விடம் இருந்த பேச்சுத்திறமையையும், அபாரமான ஆங்கில, ஹிந்தி புலமையையும் கவனித்த எம்.ஜி.ஆர். இவர்தான் டெல்லி அரசியலுக்கு சரியான ஆள் என்று தீர்மானித்து ராஜ்யசாபா உறுப்பினராக்கினார். மேலும், ராஜ்யசபா அ.தி.மு.க., துணைத் தலைவராகவும் நியமித்தார். அங்கு இவர் பேசிய பேச்சுக்கள் பிரதமர் இந்திராவிடமும் பாராட்டை பெற்றது.
ஏற்கனவே ஜெயலலிதாவின் வளர்ச்சியால் பொறுமிக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் மேலும் பொறுமலை கிளப்பியது. கட்சியில் எத்தனையோ சீனியர்கள் இருக்கும்போது ஜெ.,க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் எம்.ஜி.ஆர். என்ற புகைச்சலும் கிளம்பியது. நேரடியாகவே எம்.ஜி.ஆரை குற்றம் சாட்டினார் வருவாய்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம். அதனால் கோபமுற்ற எம்.ஜி.ஆர்., எஸ்.டி.எஸ்.,வசமிருந்த முக்கியத்துறைகளை பறித்துக்கொண்டு உணவுத்துறையை கொடுத்து டம்மியாக்கினார். அவரின் ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டது.
இதற்கெல்லாம் காரணம் ஜெ.,தான் என்று நினைத்து கடுப்பான எஸ்.டி.எஸ்., கட்சியையும், ஆட்சியையும் குறை சொன்னார். இதனால் மேலும் கோபமான எம்.ஜி.ஆர்., எஸ்.டி.சோமசுந்தரத்தை அமைச்சரவையிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்கினார்( ஜெயலலிதாவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் எம்.ஜி.ஆர்., என்று குற்றம் சாட்டியதால் கட்சியிலிருந்தும், அமைச்சரவையிலிருந்தும் நீக்கப்பட்ட எஸ்.டி.எஸ்., பின்னாளில் அதே ஜெயலலிதாவின் அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக இடம் பிடித்தது வரலாறு).
இந்த சம்பவத்திற்கு பிறகு ஜெ.,யை பற்றி எம்.ஜி.ஆரிடம் புகார் செய்ய பயந்தார்கள் மற்றவர்கள். ஆனாலும், அவரின் அசுர வளர்ச்சி மற்றவர்களின் கண்ணை உறுத்தவே செய்தது. ஜெ.,யை ஓரங்கட்ட நாள் பார்த்துக்கொண்டு இருந்தனர்.அந்த நாளும் வந்தது. ஆம்...எம்.ஜி.ஆரின் உடல் நலம் குன்றியது. சிறுநீரகக்கோளாறு, பக்கவாதம் என்று அடுத்தடுத்து நோய் தாக்கியது. இப்படி எம்.ஜி.ஆரின் உடல் நிலை சிக்கலான சமயத்தில் அவரை பார்ப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஜானகி, நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன், பண்ரூட்டி, ஹண்டே போன்ற மிகச்சிலரே அவரின் பக்கத்தில் அனுமதிக்கப்பட்டனர். மறந்தும் கூட ஜெயலலிதாவை அனுமதிக்கவில்லை. இது மூத்த அமைச்சர்களின் சதி என்று கண்டனம் தெரிவித்தார் ஜெ.
மேல் சிகிட்சைக்காக அமெரிக்கா அழைத்துசெல்லப்பட்டார் எம்.ஜி.ஆர்.,
அந்த நேரத்தில் பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார் ராஜீவ்காந்தி. அப்போதே சட்டசபையயும் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த முடிவு செய்தனர் ஆர்.எம்.வீயும், நெடுஞ்செழியனும். அதற்கான அனுமதியையும் எம்.ஜி.ஆரிடம் பெற்றனர்.
அதன்பின் ஜெயலலிதாவை ஓரங்கட்டினர். அவருக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. இப்படியே இருந்தால் மீண்டும் சினிமாவில் நடிக்க அனுப்பிவிடுவார்கள் என்று ஜெயலலிதா நினைத்தாரோ என்னவோ உடனே சுதாரித்துக்கொண்டார் .அழையா விருந்தாளியாக, தனியாளாக பிரச்சாரத்திற்கு புறப்பட்டார். இதைத்தான் அதிமுக தொண்டர்களும் எதிர்பார்த்தனர். அவர்களையும் உற்சாகம் தொற்றிக்கொண்டது… . நாடாளுமன்றத்துடன் சேர்த்து தமிழக சட்டசபைக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் நோயுடன் போராடிக்கிக்கொண்டு அமெரிக்காவில் இருக்கிறார். ஆகவே , பிரசாரத்துக்கு யார் போவது? எம்.ஜி.ஆரின் இடத்தை நிரப்பப்போவது யார்? மக்களைத் திரட்டுவது எப்படி? நாம் புறப்படுவதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்தார் ஜெயலலிதா. அதேநேரம், அதிமுக தலைவர்கள் ‘ஜெயலலிதா பிரசாரம் செய்யப்போவதில்லை.’என்று பத்திரிகைகளில் பேட்டி கொடுத்திருந்தனர். அந்த செய்தியையும் படித்தார்.
இப்படி செய்தி கொடுத்தது யார் என்று ஓரளவு யூகிக்க முடிந்தது ஜெயாவால்...இதை ஆர்.எம்.வீ.,தான் கொடுத்திருக்க வேண்டுமென தீர்மானித்தார். அவர் அப்படி நினைக்கவும் காரணம் இருந்தது.
உண்மையில் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்தபோது பெயருக்குத்தான் நிழல் முதல்வராக நெடுஞ்செழியன் இருந்தார் மற்றபடி, சகலமும் ஆர்.எம். வீரப்பன் வசமே இருந்தன. சகலமும் என்றால் கட்சி நிர்வாகம் தொடங்கி ஆட்சி, தேர்தல், கூட்டணி, வேட்பாளர்கள், நிதி, பிரசாரம் அனைத்துமே அவருடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தன. பிரச்சாரத்துக்கு யாரை, எங்கே அனுப்பலாம் என்பதை ஆர்.எம்.வீதான் முடிவு செய்தார். மொத்தத்தில் முதல்வரே ஆர்.எம்.வீ.,தான்.
அந்தச் சமயத்தில் ஜெயலலிதாவுக்கும் ஆர்.எம்.வீக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டிருந்தது. சினிமா காலத்தில் இருந்தே அவர்கள் இருவருக்குமே ஒத்துவராது. அரசியலிலும் அது நீடித்துக் கொண்டிருந்தது.ஏற்கனவே ஒரு முறை பிரசாரத்திற்கு ஆர்.எம்.வீ., போகாததால் கட்சியின் கொ.ப.செ., என்ற முறையில் அவருக்கே நோட்டீஸ் அனுப்பியிருந்தார் ஜெ. அதன்பிறகு ஆர்.எம்.வீ-க்கு ஜெயா மேலிருந்த கடுப்பு இன்னும் அதிகரித்தது
எம்.ஜி.ஆரிடம் தனக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி கட்சிக்குள் ஜெயா அதிகாரம் செலுத்துவதில் ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலருக்கும் விருப்பம் இல்லை. பலத்த அதிருப்தியில் இருந்தனர்.
தங்களுடைய அதிருப்தியை எம்.ஜி.ஆரிடம் நேரடியாகச் சொல்லமுடியவில்லை. தவித்தனர். தகுந்த சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தனர். தற்போது கிடைத்துவிட்டது. எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஜெயலலிதாவைத் தேர்தல் பிரசாரத்துக்கு அனுப்பக்கூடாது. ஜெயலலிதாவிற்கு. அதற்கு வாய்ப்பே கொடுக்கக்கூடாது. ஓரங்கட்டியே தீரவேண்டும் என்று முடிவு செய்து விட்டனர். அதன் எதிரொலியே ஜெயலலிதா பிரசாரம் செய்யமாட்டார் என்கிற அந்தப் பத்திரிகை செய்தியாக வெளிப்பட்டது.
தன்னை வலுக்கட்டாயமாக அமுக்கப்பார்க்கிறார்கள் என்றதும் திமிறிக்கொண்டு எழுந்துவிட்டார் ஜெ. 3 டிசம்பர் 1984 அன்று ஆண்டிப்பட்டியில் தொடங்கியது ஜெயலலிதாவின் பிரசாரம். அடுத்தடுத்து நெல்லை, மதுரை, ராமநாதபுரம், கோவை, ஈரோடு, சேலம் என்று மொத்தம் இருபத்தியோரு நாள்களுக்குப் பிரசாரம் செய்தார். மக்களிடம் நேரடியாக உரையாடினார். எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசினார். எம்.ஜி.ஆரின் உடல்நிலை குறித்த திமுகவின் தவறான பிரசாரம் பற்றிப் பேசினார். வாக்காளர்களிடம் கேள்விகேட்டுப் பதில் பெறும் வித்தியாசமான பிரசாரத்தை மேற்கொண்டார். உண்மையிலேயே சூறாவளிச் சுற்றுப்பயணம் அது.
எம்.ஜி.ஆர் பிரசாரம் செய்யாத குறையை ஒற்றை ஆளாக நின்று ஜெயலலிதா ஈடுகட்டியதாகப் பத்திரிகைகள் எழுதித் தீர்த்தன. அந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு அபார வெற்றி.153 இடங்களில் போட்டியிட்ட அ.தி.மு.க.,விற்கு 132 தொகுதிகள் கிடைத்தது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 62 இடங்கள் கிடைத்தது. இந்த தேர்தலில் தான் எம்.ஜி.ஆர்., அமெரிக்காவிலிருந்தே ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டார். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ்- 25 தொகுதிகளிலும், அ.தி.மு.க-12 தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருந்தது.
இந்த வெற்றிக்கு சில காரணங்கள் இருந்தது. எம்.ஜி.ஆர்., அமெரிக்காவில் சிகிட்சையில் இருக்கும்போது அவர் நடப்பாதையும், கைகாட்டுவதையும், சாப்பிடுவதையும் வீடியோ காட்சிகளாக்கி, அதை இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் மூலம் கச்சிதமாக எடிட் செய்யப்பட்டு பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினர் அதிமுக., தலைவர்கள். கூடவே சமீபத்தில் படுகொலையான இந்திரா காந்தியின் இறுதி ஊர்வல காட்சிகளும் அந்த வீடியோவில் இணைக்கப்பட்டது. ராஜீவ்காந்தியையும் எம்.ஜி.ஆரையும் குறிக்கும் விதமாக தாயில்லா பிள்ளைக்கு ஒரு ஓட்டு, வாயில்லா பிள்ளைக்கு ஒரு ஓட்டு, சாவுக்கு ஒரு ஓட்டு, நோவுக்கு ஒரு ஓட்டு என்ற பிரச்சார கோசங்கள் முதன்மை பெற்றன.
தன்னைச் சுற்றிப் பலமான எதிர்ப்புவலை பின்னப்படுகிறது என்று தெரிந்ததும் ஆவேசப்பட்டு எழுந்து, பிரசாரம் செய்து, அந்த வலையை அறுத்தெறிந்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவாலும், அதிமுக தொண்டர்களாலும் மறக்கமுடியாத பிரசாரம் அது. கொண்டாடி தீர்த்தனர் ஜெ ஆதரவாளர்கள். ஆம் அ.தி.மு.க., வில் அப்போது ஜெயலலிதாவிற்கென்று அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலாளர்கள் என்று ஒரு கோஷ்டி உருவாகியிருந்தது.
சிகிட்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து திரும்பிய எம்.ஜி.ஆர். முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் எம்.ஜி.ஆருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டு சிகிட்சைக்காக அமெரிக்கா சென்றார்.அந்த நேரத்தில், எம்.ஜி.ஆர், தனது செல்வாக்கு வளருவது கண்டு பொறாமைப்படுகிறார் என்றும், இனி அவர் முதல்வராக இயங்க முடியாதென்றும், அதனால் என்னை முதல்வராக்க்குங்கள் என்றும் பிரதமர் ராஜீவிற்கு தன் கைப்படவே ஒரு கடிதம் எழுதி அதை சேலம் கண்ணன் மூலம் ஜெயலலிதா கொடுத்து விட்டதாக மக்கள் குரல் பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டது. இது போதாதா ஜெயின் அரசியல் எதிரிகளுக்கு....எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் அந்த விஷயத்தை பக்குவமாக அவரின் காதிற்கு கொண்டுசென்றனர் அவரின் அரசியல் எதிரிகள்.
இதைக்கேட்டதும் கோபத்தின் உச்சிக்கே போய் விட்டார் எம்.ஜி.ஆர். உடனே, இனி ஜெயலலிதாவிடம் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று வாய்மொழி உத்தரவிட்டார். தொடர்ந்து அவரை கட்சியிலிருந்தும் நீக்குவது என்பது அவரின் திட்டம்.
அதன்பிறகு ஒரு நாள் ஜெயாவை கட்சிலிருந்து நீக்க முடிவு செய்தார் எம்.ஜி.ஆர்,. அப்போது அங்கிருந்த அமைச்சர் ராஜாராம் இப்போது நீக்கினால் கட்சிக்குள் பிரச்சினை ஏற்பட்டுவிடும். உங்களுக்கு பூர்ண குணமானபின் இந்த முடிவை எடுக்கலாம் என்று அவரின் முடிவுக்கு முட்டுக்கட்டை போட்டார். அப்போதைய அமைச்சர் திருநாவுக்கரசரும் ஜெயலலிதாவை நீக்கக்கூடாது என்று பலமாக வாதாடினார். அவரின் ஆலோசனை படியே ஜெ.,யை நீக்கும் முடிவு தற்காலிகமாய் தள்ளிவைக்கப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே எம்.ஜி.ஆர். மரணமடைந்து விட்டார்.

அந்த சமயத்தில் இறுதிவரை எம்.ஜி.ஆரின் உடலருகே இருந்த ஜெ எல்லோராலும் கவனிக்கப்பட்டார். . எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வல வேனில் ஏறியபோது கே.பி.ராமலிங்கத்தால் வ்லுக்கட்டாயமாக இழுத்து கீழே தள்ளப்பட்ட சம்பவமும் அப்போது நடந்தது.அதனால் அனுதாபமும் பெற்றார்.
எம்.ஜி.ஆரின் மறைவையடுத்து அரசு நிர்வாகத்தை கவனிக்க நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராக பொறுப்பேற்றார். நிரந்தர முதல்வராக தானே போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார்
தானே முதல்வர் பதவிக்கு போட்டியிடப்போவதாக நெடுஞ்செழியன் அறிவித்தாலும், அதை ஆர்.எம்.வீரப்பன் ஏற்றுக்கொள்ளவில்லை. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளை முதலமைச்சராக்காப்போவதாக அவர் அறிவித்தார். இதனால், அதிருப்தி அடைந்த நெடுஞ்செழியன் ஜெயலலிதாவுடன் இணைந்தார்.
நெடுஞ்செழியன், திருநாவுக்கரசு, பண்ரூட்டி ராமச்சந்திரன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்( சாத்தூரார்), அரங்கநாயகம் போன்ற ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி அண்ணா.தி.மு.க.,வின் பொதுச்செயலாளராக ஜெயாவை தேர்ந்தெடுத்தனர். இதை ஜானகி, ஆர்.எம்.வீ., போன்றோர் கடுமையாக எதிர்த்தனர். அந்த நேரத்தில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களில் 98 பேர்கள் ஜானகிக்கு ஆதரவாகவும், 29 பேர்கள் ஜெயாவிற்க்கு ஆதரவாகவும் இருந்தனர். ஜானகி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அணி மாறிவிடக்கூடாதென்று ஒரு ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
ஜெ ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 29 பேரும் வட மாநிலத்திற்கு அழைத்துசெல்லப்பட்டு ஆம்னிவேனில் ஊர் சுற்றிக்காட்டப்பட்ட கூத்தும் நடந்தது. ஜெ ஆதரவாளர்கள் திருநாவுக்கரசுவும், சாத்தூர் ராமச்சந்திரனும் அந்த வேலையை பார்த்துக்கொண்டனர்.
பின் ஜானகி ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை கவர்னர் குரான முன் நிறுத்தி ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார் ஆர்.எம்.வீ.,.அதன் படியே ஜானகியை ஆட்சியமைக்க அழைத்தார் கவர்னர் குரானா.3 வாரத்திற்குள் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறும் கட்டளையிட்டார்.
1988 ஜனவரியில் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் ஜானகி. இரு அணிகளில் ஜானகிக்கு ஆதரவு அதிகமிருந்தாலும் ஜெயலலிதா வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால் மைனாரிட்டி ஜானகி அரசாகவே அது இருந்தது. 3 வாரத்திற்குள் வேறு மெஜாரிட்டியை நிரூபித்தாக வேண்டுமே.....
62 இடங்கள் வைத்துள்ள காங்கிரஸ் ஆதரித்தால் போதும்...ஆட்சி பிழைத்துக்கொள்ளும் என்று முடிவு செய்த ஆர்.எம்.வீ., நடிகர் சிவாஜி கணேசன் மூலம் ராஜீவ் காந்திக்கு தூது விட்டார். ஆனால், பிளவு பட்ட அதிமுக., வை ஆதரிக்கப்போவதில்லை என்று கூறி விட்டார் ராஜீவ் இதற்கிடையில் ஜெயலலிதாவும் டெல்லி சென்று ராஜீவிடம் ஆதரவை கோரினார். ஜெயலலிதாவிடமும் அதே பதிலை சொன்னவர். சட்டசபையில் ஜானகியை எதிர்த்து காங்கிரஸ் வாக்களிக்கும் என்றும் அறிவித்தார்.
வேறுவழியின்றி தி.மு.க.,வின் 20 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பெறும் முயற்சியில் ஆர்.எம்.வீ, ராசாராம், மாதவன் போன்றோர் இறங்கினர். அ.தி.மு.க.,வின் எந்த பிரிவையும் ஆதரிக்கப்போவதில்லை என்று தி.மு.க., செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுவிட்டதால் ஆதரவு தரமுடியாது என்று கை விரித்து விட்டார் கலைஞர்( அப்படி சொன்னது எத்தனை பெரிய தவறென்று இப்போது உணர்ந்திருப்பார் கலைஞர். அவர் மட்டும் அன்று ஜானகிக்கு ஆதரவு தெரிவித்திருந்தால் 98+20=118 என்ற எம்.எல்.ஏ.,க்கள் அடிப்படையில் ஜானகி அரசு காப்பாற்றப்பட்டிருக்கும். தாக்குப்பிடிக்க முடியாமல், ஜெயாவும் அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருப்பார்).
ஜனவரி 28 அன்று சட்டமன்றம் கூடியதும் ஜானகி-ஜெயா அணிகளுக்கிடையே பெரும் கலவரம் வெடித்தது. மைக், ஒலிபெருக்கிகள் உடைக்கப்பட்டன. பல எம்.எல்.ஏ.,க்களின் மண்டை உடைந்து ரத்தம் ஓடியது. கட்சி மாறி வாக்களித்ததால்...கட்சி கட்டுப்பாட்டை மீறிய 33 எம்.எல்.ஏ.,க்களை பதவி நீக்கம் செய்வதாக அறிவித்தார் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன். ஜானகி கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறிவிட்டதாகவும் அறிவித்தார்.
ஆனால், சட்டஒழுங்கு கெட்டுப்போய்விட்டதாக கூறி ஜானகி ஆட்சி வெறும் 24 நாட்களில் கலைக்கப்பட்டது பரிதாபமான க்ளைமேக்ஸ்.
அதன் பின் ஒரு வருடம் ஜனாதிபதி ஆட்சி தமிழகத்தில் அமலில் இருந்தது.
இதற்கிடையில் ஜெயலலிதா அணியில் குழப்பம் ஏற்பட்டது. ஜெயா அணியில் செயல்பட்ட நாவலர், திருநாவுக்கரசு, பண்ரூட்டி, அரங்கநாயகம் போன்ற தலைவர்கள்(?) ஜெ.,க்கு எதிராக திரும்பினர். கட்சிக்கு வசூல் செய்யப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஜெயாவிடம் கணக்கு கேட்ட இவர்கள் கட்சியிலிருந்து இல்லை...இல்லை...ஜெ அணியிலிருந்து நீக்கப்பட்டனர். தங்களை நீக்க ஜெ.,க்கு அதிகாரமில்லை என்று கூறிய இவர்கள், நால்வர் அணி என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்தனர்.
நால்வர் அணி சிறிது காலத்துக்குள்ளாகவே மீண்டும் ஜெயாவுடன் இணைந்தது.
1989 ஜனவரியில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., இரண்டு பிரிவுகளானதால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு... ஜானகி அணிக்கு இரட்டைப்புறா சின்னமும், ஜெயலலிதாவிற்க்கு சேவல் சின்னமும் ஒதுக்கப்பட்டது. ஜானகியுடன் சிவாஜியின் தமிழக முன்னேற்ற முன்னணியும், ஜெயலலிதாவுடன் கம்யூனிஸ்ட்டும் கூட்டணி அமைத்தனர். தி.மு.க., பலமான கூட்டணி அமைத்தது. காங்கிரஸ் ஜெயித்தால் மூப்பனார் முதல்வர் என்ற கோஷத்துடன் தனித்து போட்டியிட்டது.
இந்த தேர்தல் முடிவில்...தி.மு.க., மீண்டும் அதாவது 13 வருட இடைவெளிக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. அதே நேரம் 198 இட்ங்களில் போட்டியிட்ட ஜெ., அணிக்கு 27 இடங்களும், 175 இடங்களில் போட்டியிட்ட ஜானகி அணிக்கு 1 இடமும் கிடைத்தது. (நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் போட்டியிட்ட முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் தான் அந்த ஒருவர்).
ஆண்டிப்பட்டியில் போட்டியிட்ட ஜானகியம்மாள் 22,647 வாக்குகள் பெற்று தி.மு.க., வேட்பாளர் ஆசையனிடம் தோல்வியை தழுவி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தார். அதே நேரம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா 33,191 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அங்கு ஜெயாவை எதிர்த்து போட்டியிட்ட ஜானகி அணி வேட்பாளர் நடிகை வென்னிற ஆடை நிர்மலா வெறும் 1512 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்திருந்தார்.
இதில் ஜானகி அணிக்கு மொத்தம் 21,78,071 (9%) வாக்குகளும், ஜெயலலிதா அணிக்கு மொத்தம் 50,54,138 (21%) வாக்குகளும் கிடைத்திருந்தது.
இந்த தேர்த்ல் தோல்விக்கு பொறுப்பெற்று ஜானகி, தனது பிரிவை ஜெயலலிதா அணியுடன் இணைத்துவிட்டு அரசியலிலிருந்தே ஒதுங்கினார். அதன் பிறகே ஒருங்கிணைந்த அண்ணா.தி.மு.க., வின் பொது செயலாளராக ஜெயலலிதா ஆனார். இரட்டை இலை சின்னமும் ஜெயாவிற்கு கிடைத்தது. அரசியல் வானில் எம்.ஜி.ஆரின் வாரிசாகவும் பிரகாசித்தார்.
Wednesday, 19 September 2012
நன்றி ::தமிழ் மணம்.
============================================================
இவ்வாறாக சோதனைகளே சொந்தமென இவருடைய அரசியல் வரலாறு பேசுகிறது.உணமையாகவே ஒரு தனிப்பட்ட பெண்ணான இவர் இந்த அளவுக்குப் போராடி தன் அரசியல் களத்தை அமைத்துள்ளார் என்று எண்ணும்போது இவர்மீது மக்களுக்கு இன்னும் மரியாதை கூடுகிறது.
அரசியலில் மேடு பள்ளம் என்பது இவருக்கு சகஜம்.வெற்றி இவரை பின் தொடரும் என்பதும் நிஜம்.இவரது அரசியல் வாழ்வே நெருப்பாற்றில் நீந்துவதாகவே இருந்தாலும் அதுவே இவரது வெற்றிக்குப் பலமாகவும் அமைந்து இவருக்கு அனுபவப் பாடமாக உள்ளது.அதுபோலவே இன்றைய இக்கட்டான சூழலிருந்தும் இவர் வென்று மீண்டும் அரியணை அமர்வார் என்பதில் ஐயமில்லை.
தன்னம்பிக்கை,தைரியம் ,தளரா மனஉறுதி இவையே இவரது
வெற்றிப்படிகளின் முன்னேறும் இரகசியம்.எனவே இவரை இந்தியாவின் இரும்பு மங்கை என்று சொல்வதில் என்ன மாற்றுக்கருத்து இருக்க முடியும்.

http://aiadmkpaadalkal.blogspot.in/ அம்மாவின் சாதனை மணம் வீசும் நந்தவனம்.சொடுக்குங்கள்.

Saturday 25 October 2014

அச்சம் தவிர்.அம்மாவை பார்.


அம்மாவைப் பார்!

அச்சம் மட்டும் மிச்சமாடா?
அச்சன் தந்த சொத்தாடா?
துச்சமென தூக்கிப் போட்டா
உச்சம் உந்தன் பக்கமடா!

அச்சம் உன்னை வெல்லுமடா!
அடிமை யாக்கிக் கொல்லுமடா!
அச்சம் விட்டால் சாவுமுன்னை
அணுகத் தன்னை அஞ்சுமடா!

அச்சம் கொடும் பாவமடா!
ஆக்கம் கெடும் சாபமடா!
பச்சம் சுடும் பாலையடா!
எச்சம் படும் நாளையடா!

அஞ்சும் உள்ளம் கள்ளமடா!
அமைதி யில்லா இல்லமடா!
பகல் அறியா இருளடா!
இகல் நிறையும் மருளடா!

அச்சம் சுற்றம் நம்பாதடா!
செத்துச் செத்துச் சாகுமடா!
சுற்றம் விலகி சேராதடா!
சொந்தம் பழகி கூடாதடா!

அச்சம் ஒரு அவதியடா!
அறி யாமைக் கைதியடா!
தன்னை நம்பா ஊனமடா!
பின்னை பேசும் ஈனமடா!

அம்மாவைப் பார் நம்பிக்கை
அச்சம் என்ற எச்சமில்லை.
நெருப்பாற்றில் நீந்தியும்தான்
கரையேறும் போர்க்குணத்தை.


கொ.பெ.பி.அய்யா.

Monday 20 October 2014

ஜே ஜே ஜெயமே.


ஜே.ஜே வாழ்த்து.

ஜே ஜே என்றே ஜெயமென ஆளும்
ஜெய லலிதாவே வாழ்கவே!
பூஜா மங்களம் புகழே வாழும்
புனித முகமே வாழ்கவே!

கண்டதும் தோணும் கைதொழத் தானே
நின்றதும் கூனும்  மெய்விழும் தானே
கொண்டதும் ஆளும் தெய்வருள் தானே
சென்றதும் வீழும் வெய்வினை தானே.

இன்பம் துன்பம் எதுவானாலும் சமமே.
நன்மை தீமை நடுவே வாழும் பலமே.
பாடு எல்லாம் பகவதி போலும்.குணமே.
மேடு பள்ளம் கடந்தே மீளும் மனமே.

சோதனை வென்றும் சாதனை படைக்கும்.
வேதனை கொன்றும் தீதினை உடைக்கும்.
எதிர்வினை கண்டும் சதுர்வினை முடிக்கும்.
முதிர்வினை மிஞ்சும் புதுவினை துடிக்கும்.

பெண்ணினச் சுதந்திரப் பிறவி அம்மா.
தன்னலம் மறுத்த துறவி அம்மா.
எண்ணிடப் பெருமைத் தலைவி அம்மா.
மண்ணிடம் அருமை இறைவி அம்மா.

ஜே ஜே என்றே ஜெயமென ஆளும்
ஜெய லலிதாவே வாழ்கவே!
பூஜா மங்களம் புகழே வாழும்
புனித முகமே வாழ்கவே!

கொ.பெ.பி.அய்யா.

Saturday 18 October 2014

தாயே தமிழே வாழ்க!





தாயே தமிழே வாழ்க!

அம்மா என்னும் சொல் உதிர்த்தால்
அன்பு என்னும்  நெல் சிதறும்.
அம்மா எண்ணி உள்  நினைத்தால்
எம்மா வஞ்சமும் பல் உதறும்.

தாயே என்னும் தமிழ் பகிர்ந்தும்
தர்மம் தானே தலை வணங்கும்.
தாயே உள்ளம் உனை நினைந்தும்
தைரியம் உள்ளே வினை முனைக்கும்.

அன்னை சொல்லு வாய் மலரும்.
தன்னை வெல்லும் தான் புலரும்.
விண்ணைத் தொடவும் எண்ணித் துணியும்
மண்ணில் பகையும் முன்னே பணியும்.

மாதா உந்தன் மகிமை முன்னால்.
சாதா எல்லாம் சகலமும் தன்னால்.
வேதா இல்லம் ஆலயம்
நின்றும்
சோதனை வெல்லும் போதனை சொல்லும்.

பெற்றாள் மடியினில் பிள்ளை முகம்போல்
பெற்றார் மகிழ்வதும் உன்னடி நிழல்கீழ்.
நற்றமிழ் சிறப்பதும் கற்றது போலே
மற்றென்ன அறிவதும் உற்றதும் மேலே!


தாயே வாழும் தமிழே வாழ்க!
நீயே ஆளும் நிலையே வாழ்க!
நேரே நிசமே சீரே வாழ்க!
பாரே வசமே தீரே வாழ்க!
கொ.பெ.பி.அய்யா.

Friday 17 October 2014

அறவழி அதிமுக கட்டுரை

அறவழி நடப்போம் !அமைதி காப்போம்!

அன்புடையீர் வணக்கம்.

இறைவன் அருளால் அம்மா அவர்கள் நமக்கு மீண்டும் கிடைத்துள்ளார்.அதற்காக அந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நாம்  நமது நன்றி யைக் காணிக்கையாக்குவோமாக.

ஒரு குடும்பத்தின் தலைவிக்கு இன்னல் ஒன்று வரும்போது அந்தக் குடும்பமே நிலை குலைந்து போகிறது.அந்தக் குடும்பம் அவரை நம்பித்தான் வாழ்கிறது என்ற நிலையில் அவருக்கு ஒரு சோதனை நேரும் கட்டத்தில் அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் அந்தத் தலைவியை எவ்வாறேனும் அச்சோதனையிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற முயற்சித் துடிப்பில் இறைவனிடம் மன்றாடுவார்கள்.இது மனித உணர்வின் வெளிப்பாடு.அதேபோல்தான் ஒரு இயக்கத்தின் தலைவிக்கு அவருடைய உண்மை விசுவாசிகள் காட்டும் நிலைப்பாடும்.தங்கள் உணர்வுகளை உண்ணா நோன்பாகவும்,எழுச்சிப்பேரணியாகவும்,மனிதச்சங்கிலியாகவும்,இறை வழிபாட்டுப்  பிரார்த்தனைகளாகவும் அறவழியில் வெளிப்படுத்துவதில் யாருக்கு என்ன இடையூறுகள் நேர்ந்துவிடும்.ஒரு ஜனநாயக நாட்டில் இதற்கும் உரிமை மறுக்கப்படுமா? இதற்கும் சட்டம் ஒழுங்கிற்கும் என்ன சம்மந்தம்?என்பதுதான் இன்று மனித நேயம்கொண்டவர்களின் மனச்சாட்சி கேட்கும் கேள்விகளாகும்.

எவருக்கு மனச்சாட்சி பேசாதோ அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்.அவர்களுக்கு அவ்வாறொன்று நேரும்போது அவர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள்.பாடம் கற்றவர்கள்கூட பட்டது மறந்து பேசுவது காழ்ப்புணர்ச்சியின் குறிப்பு என்றும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.அதற்காக அப்படிப்பட்டவர்களை நாம் விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை.காலம் அவர்களை கணக்கு வைத்துக்கொள்ளும்.

தருமம் நமது தாயை மீட்டுள்ளது.அது போதும்.ஆகவே இந்நிலைக்கு யார் காரணம் என்றும் ஆராய்ச்சி செய்ய வேண்டாம்.அவர்களைப்பற்றி நாம் வீண் விளம்பரம் செய்துகொள்ள வேண்டாம்.துஷ்டரைக்கண்டால் தூர ஒதுங்கு என்ற பொன்மொழிக்கு ஒப்ப நாம் நம்மை நம் நிலையில் நிறுத்திக்கொள்வோம்.நாம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் வந்தவர்கள்.அவர் நமக்குக் கற்றுத் தந்த தூய்மை,நேர்மை,வாய்மை,கடமை ஆகிய ஒழுக்க நெறிகள் நம்மிடம் அவர் அடையாளமாக உள்ளது.அந்த அடையாளமே நமது வெற்றியின் சின்னமான இரட்டைஇலை.அதை இருவிரல்களால் ஏற்றிக்காட்டுவோம்.அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்றால் அது தர்மத்தின் கூட்டம்.பிறர்க்கின்னா செய்யா பேராளன் புரட்சித் தலைவரின் பாசத்தின் சொந்தங்கள்.அன்பின் விளக்கமான புரட்சிதலைவி அம்மாவின் பந்தங்கள்.நாமெல்லாம் ஒரு குடும்பம்.நமது குடும்பத்தலைவியின் சொல்லுக்கு அடிபணிவோம்.நாம் நமக்கென்று நமக்காக நம் நாட்டுக்காக நமது அம்மா இடும் கட்டளை எதுவோ அதையே நாம் நமது கடமையாக ஏற்போம்.நாட்டின் சட்டம் ஒழுங்கை நமது ஒழுக்கமாக உள்ளத்தில் கொள்வோம்.

சட்டம் ஒழுங்கிற்கு இலக்கணம் கற்றுத்தரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு என்றால் அது மிகையாகாது.தனிமனித விருப்பு வெறுப்புகளால் எதிர்பாராது நிகழக்கூடிய அசம்பாவிதங்களைக் கூட ஒரு நாட்டின் சட்டம் ஒழுங்கோடு சம்மந்தப் படுத்திப் பேசுவது எந்த விதத்தில் நியாயமாகும் என்பதுதான் எந்த அறிவுக்கும் எட்டவில்லை.இந்த விஞ்ஞான யுகத்தில் ஊடகங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டதால் எத்தனை தொலைதூரமானாலும் எங்கெங்கு என்ன நிகழ்ந்தாலும் எல்லோரும் அறியும்வண்ணம்  செய்திகள் அவ்வப்போது வந்து சேர்ந்துவிடுகின்றன. அதை சில ஊடகங்கள் பூதாகாரமாக்கிவிடுகின்றன .அது மாத்திரம் அல்ல முன்போல் காவல் நிலையங்களுக்கு வரும் புகார்களை பதிவுசெய்து விசாரிக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்வதை ஒழித்து இந்நாளில் அனைத்துப்புகார்களும் பதிவு செய்யப்படுவதால் அவை பத்திரிக்கைகளில் செய்திகளாக வந்து விடுகின்றன என்பதுதான் உண்மை.ஆனாலும் படிப்படியாக ஆண்டுக்கு ஆண்டு குற்றங்கள் குறைந்து வருகின்றன என்பதும் காவல்துறை ஆய்வறிக்கைப்படி உண்மையே.

தாயாளும் தமிழ்நாடு.தர்மத்தின் தாய்வீடு.எதிர்ப்பாரை எதிரி என எண்ண வேண்டாம்.இன்று எதிர்ப்பார்.நாளை நண்பராவர். பொறுமை என்பது அமைதி.பொறுமையும் அமைதியும் பெருமையின் நியதி.சட்டம் அதன் கடமையைச் செய்யட்டும்.ஒழுக்கம் உயர்வினை நல்கட்டும்.

அறவழி நடப்போம் !அமைதி காப்போம்!

நன்றி!

கொ.பெ.பி.அய்யா.

தர்மம் மீணாடது.


மீண்டது தர்மம்!

கொதித்துத் துடித்த தமிழகம்
குளிர்ந்தது இன்று காண்!
மிதித்துக் கிடந்த தருமம்
முகிழ்த்து மீண்டது காண்!

கண்ணைக் கட்டிக் கொண்டவள்
காந்தாரிப் பேதையோ அவள் ?
விண்ணைமுட்டியும் வெளிப்படுவாள்
விளங்கும் நீதியரசி அவள்.

எண்ணும் நீதி என்றும்
எழுதப்படும் இதயங்களில்.
பின்னும் வலைகள் எல்லாம்.
என்ன செய்யும் மூச்சுக்காற்றில்?

மக்கள் சக்தி ஒன்றுகூடி
மனம் விளங்கி தீர்ப்பெழுதி
எக்காலும் எம் தலைவி
எனப்பதித்தோம் வாழ்வுறுதி,

இன்றுதான் எமக்குத் தீபாவளி.
வென்று வந்தாள் மாகாளி.
கொண்டாடும் தமிழ் நாடே!
நன்றி பாடும் நீதிக்கே!

 யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத்யா
அப்யுத்தாநம அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ரஜாம்யஹம்
பரித்ராணாய சாதுநாம் விநாசாய ச சதுஸ்க்ரதாம்
தர்மசன்ஸ்தாபனாய சம்பவாமி யுகே யுகே "

எங்கெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் அதை அழிக்க நான் பிறந்து வருவேன் என்ற கிருஸ்ண பரமாத்மாவின் கீதை வரிகளுக்கிணங்க அன்னை அதர்மத்தை அழிக்க இன்று மீண்டு(ம்) வருகிறார்....

கொ.பெ.பி.அய்யா.
http://aiadmkpaadalkal.blogspot.in/search?updated-max=2014-10-17T14:48:00-07:00&max-results=7&start=7&by-date=false

Tuesday 7 October 2014

மனம் உழுத்த மனிதர்கள்

அன்னை உன்னை விடுவோமா?

நாய்கள் சூழ்ந்த கூட்டத்தில்
தாய்தான் வீழ்ந்த நேரத்தில்
சேய்தான் பதறித் துடிக்காதோ!—அய்யோ
வாய்தான் கதறி வடிக்காதோ!

பேய்கள் கூடும் ஆட்டத்தில்.
தாய்தான் பாடும் ராகத்தில்
யாரது காதும் கேட்காது.—பாவம்
சேயது சோகம் பார்க்காது.

மனமும் உளுத்த மனிதர்கள்
இனமும் பழித்த சனிதர்கள்.
தாயையும் மதியாத் தறுதலைகள்—இந்த
சேய்கள் விதியோ கடலலைகள்.

சேயும் எம்மைப் பறிப்பாரோ?
தாயும் உன்னைப் பிரிப்பாரோ?
வாய்தான் அழுதும் வாழ்வோமோ?—தீய
பேய்தான் தொழுதும் தாழ்வோமோ?

எங்கள் சொந்தம் நீயம்மா
எல்லாம் உந்தன் சேயம்மா.
உயிரில் கலந்த தாயம்மா.—எங்கள்
உணர்வில் எழுந்த தீயம்மா.

அன்னை உன்னை விடுவோமா?
மண்ணை வீணே படுவோமா?
தன்னைத் தானே கெடுவோமா?---அம்மா
முன்னைத் தமிழே முடிவோமா?

கொ.பெ.பி.அய்யா.

Friday 3 October 2014

விஸ்வரூபம்.


விஸ்வ ரூபம்.

அம்மா என்றால் அதிருமடா!
அற்பர் நெஞ்சம் பதறுமடா!
தும்மல் தோன்றவும் அஞ்சுமடா!-எதிர்
துட்டன் யாரிங்கு மிஞ்சுமடா!

பெண்ணின் உருவில் பீஸ்மரடா!
தன்னில் தரும ஈஸ்வரடா!
கண்ணன் வடிவில் கடவுளடா!--அஞ்சா
விண்ணின் விஸ்வ சொருபமடா!

பெண்ணென்றுஞ் சின்ன எண்ணமாடா!
முன்னின்றும் வெல்லத் திண்ணமாடா!
பின்னம்பு விடுவதும் வீரமாடா!--நீ
பெண்ணம்பில் படுவதும் தூரமாடா!

எதிர்க்கவும் வல்லவனா அறிவாயடா!
உதிர்க்கவும் நல்லவனா புரிவாயடா!
தகுதியும் அற்றுப்பின் ஒளிந்தாயடா!--ஒரு
தொகுதியும் அற்றுநீ தொலைவாயடா!

ஆர்ப்பரிக்கும் கடலடக்க ஆசையோடா!
தூர்ப்பறிக்க இமயமலை சாயுமோடா!
தானடக்கித் தான்தோன்றும் தவம்தானடா!--புகழ்
வானடங்கா வல்லதேவி ஜெயம்கேளடா!

அன்னையவள் வடிவமே அம்பாளடா!
முன்னையவர் தருமமே எம்தாயடா!
சந்தியா கண்டதமிழ் மகள்தானடா!.--அம்மா
இந்தியா என்றதமிழ் புகழ்தானடா!


கொ.பெ.பி.அய்யா..