Friday 27 April 2018

உன்னை நம்பித்தான்.

உன்னை நம்பித்தான்.

அம்மாவின் ஆருயிரே!
நம்பிக்கையின் வேர்நிகரே!
உன்னை நம்பித்தான்
தமிழ் தன்னை தேற்றுகிறது.

அம்மாவின் செல்வமே!
அன்னை வழி வெல்வமே!
கைகளை உயர்த்தி நீ
நம்பிக்கை ஊட்டுகிறாய்.
காலமும் உன் தோளில்
கனவுடன் தொடருதே!.

திசையெல்லாம் உன் பேச்சு
திரை பாடும் உன் வாழ்த்து.
தாய் வளர்த்த பிள்ளை நீ!
தமிழ் நிலத்தின் காவல் நீ!
செல்லமகன் உன்னை நம்பி
வல்ல தாய் கண்ணயர்ந்தாள்.

சதி செய்த கூட்டங்களை
விதி முடிக்க நீ இருக்க
கதியாக உந்தன் பக்கம்
கடலாக மக்கள் கூட்டம்.
வேராக அம்மா நிழல்
வினை முடிக்கத் துணை இருக்கும்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment