Friday 16 May 2014

வீரலை பேரலை

வீரலை பேரலை.

யாரலை தமிழ்நாட்டில்
பேரலை ஆனது.
அம்மாவின் வீரலைதான்
அது அடித்து போனது.

தர்மத்தின் கோபலை
கர்மம் தீர்த்துப் போனது.
பொய்யான கசடுகளை
போக்கியே ஓய்ந்தது.

மோடி என்ன சொன்னாரு ?
மூடிக்கிட்டுப் போனாரு
டாடி என்ன ஆனாரு ?
லேடிதான நின்னாரு.

மோடி என்ன டாடி என்ன?
கூடி என்ன கிழிச்சாங்க.
பாடி என்ன ஓடி என்ன ?
லேடிதான ஜெயிச்சாங்க.

எங்களப் பாத்தா உங்களுக்கு
எப்படித்தான் தோணுது.
எது சொன்னாலும் கேப்போமுனு
இழிச்ச வாயன்னு தோணுதா?

மக்களென்ன மந்தை ஆடா?
மதியில்லா சந்தை ஆடா?
இன்னும் உங்கள அறியாமத்தான்
இருக்கோமுன்னு நெனசசிகளா?

எங்களுக்கும் புள்ள குட்டி
குடும்பம் கூட இருக்குது.
எங்களுக்கும் வாழஆசை
இருக்குத்தானே செய்யுது.

வியாபார அரசியல இன்னும்
வெளங்காம இருப்போமா?
வெளுத்துப்போச்சு சாயமெல்லாம்
வேற தொழில் செய்யுங்க.ளேன்.

கொ.பெ.பி.அய்யா.



 https://www.blogger.com/

No comments:

Post a Comment