நமது இயக்கம்.
புரட்சித்தலைவர் எம்ஜியாரின் இதயத் துடிப்புக்களான இளைய இரத்தங்களே இனிய வெற்றிக்கால வாழ்த்துக்கள்.இன்றைய மகத்தான வெற்றி புதிய சிந்தனை
நிறைந்த இளைஞர்களாகிய உங்களின் உழைப்பும் பேராதரவும் என்றும் நமது இயக்கம்
நன்றாகவே புரிந்து கொண்டுள்ளது.
அஇஅதிமுக இயக்கம் தனிப்பட்ட யாருக்கும் சொந்தமென உரிமை கொண்டாடக்
கூடியது அல்ல.இது ஒரு திறந்தவெளி ஜனநாயக இயக்கம்.ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் கைக்குள்
சிக்கி அவர்களின் தலைமுறை வாரிசுகள் மட்டுமே மகன்கள்,பேரன்கள்,கொள்ளுப்பேரன்கள்
என்று பழைய மன்னர் கால ஆளுமை முறை இயக்கம்
அல்ல இது.இது நமது இயக்கம்.மக்கள் செல்வாக்குள்ள சேவை மனப்பான்மை கொண்ட எவரும்
தலைமை பொறுப்புக்கு வரலாம் என்பதே அன்று புரட்சித் தலைவர் வகுத்த தத்துவம்.
இதன் உண்மையை இன்றைய இளைய தலைமுறை
நன்றாகவே புரிந்து கொண்டுள்ளது என்பதை இத்தேர்தல் நமக்கு விளங்க வைத்துள்ளது.இததேர்தலில்
முதன் முதலாக வாக்களித்துள்ள புதிய வாக்காளர்கள் வாக்களித்த விதம் நமக்கு
உணர்த்துகிறது.தமிழ் நாட்டில் ஆனாலும் சரி அகில இந்தியாவில் ஆனாலும்சரி குடும்பத்
தலைமுறைக் கட்சிகள் பூஜ்யமாக்கப்பட்டுள்ளன அல்லது ஓரம் கட்டப்பட்டுள்ளன என்பதிலிருந்தே
நாம் விளங்கிக்கொள்ளலாம்.
ஆகவே நமது இயக்கத்தின் எதிர்காலம்
இன்றைய இளைஞர்களின் கைகளில்தான் ஒப்படைக்கப்பட இருக்கிறது.இதை சிந்தையில்
வைத்துக்கொண்டுதான் நமது அம்மா புரட்சித் தலைவி அவர்கள் இளைஞர்களின் எதிர்கால
வளர்சிக்கு வேண்டிய அனைத்து வளர்சித் திட்டங்களையும் தொலை நோக்குப் பார்வையோடு
கல்வி மேம்பாடு, விளையாட்டு மேம்பாடு,சுகாதார மேம்பாடு என அதிகப்படியான நிதிகளை
ஒதுக்கி மேபடுத்தி வருகிறார் என்பதை இளைய சமுதாயம் மனதில் பதித்துக்கொண்டு
அம்மாவின் வழியைப் பின்பற்றி அவரது கரங்களுக்கு நீங்கள்தான் வலிமையாக அமைய
வேண்டும்.அம்மாவின் கனவே நீங்கள்தான்.
இன்றைய சமுதாய வளர்சிக்கு பெரும்
சவாலாக இருக்கும் ஊழல் பேயை விரட்டி ஓட்டும் பொறுப்பை உங்களிடம் எவ்வாறு
ஒப்படைக்கலாம் என்பது பற்றித்தான் நமது அம்மா அவர்கள் ஆழமாக சிந்தித்து
செயல்விளக்கம் தர திட்டங்கள் தீட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.உங்கள் எதிர்காலம்
உங்கள் கையில் என்ற முனைப்போடு செயலாற்றவும் உங்கள் இயக்கம் உங்களுக்காக என்ற
உணர்வோடும் நீங்கள் நமது இயக்கத்தோடு இணைந்து உரிமையோடு ஒத்துழைத்து செயலாற்ற
வேண்டும் என்பதே அம்மாவின் ஆசையாகும்.
அன்று புரட்சித்தலைவர் அம்மாவின்
கரங்களில் எவ்வாறு நம்பிக்கையோடு இயக்கத்தின் பொறுப்புக்களை ஒப்புக்கொடுத்தாரோ
அவ்வாறே நாளைய நம்பிக்கையான உங்கள் கரங்களில் உங்கள் இயக்கம் அம்மா அவர்களால்
ஒப்படைக்கப்பட இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
இன்றைக்கு ஏனைய குடும்ப இயக்கங்கள்
தங்கள் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் எத்தனை முறை
ஆராய்ந்தாலும் கிடைக்கும் விடை ஒன்றுதான்.எப்பொழுது ஒரு இயக்கம் பொதுஉடைமை என்ற
நிலை தவறி சுய உடைமை என்ற நிலைக்கு மாறுகிறதோ அப்போதே அது மக்களின் நெஞ்சங்களை
விட்டு அகன்றுவிட்டது அல்லது மக்கள் அதை
மறந்து அதன் அடையாளத்தை அழித்துவிட்டனர் என்பதே நிசமாகும்.ஏமாற்று வித்தைகள்
எல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான்.மக்கள் இப்போது விழித்துக்கொண்டார்கள்.முன்போல்
எதைச்சொன்னாலும் தலை ஆட்டும் நிலை இப்போது இல்லை.அலங்காரச்சொற்களுக்கு மயங்கி
அடிமைப்பட்ட காலங்கள் மாறிவிட்டது.மக்கள் உண்மையைத் தேட முனைந்து விட்டனர்.இனி
எதிர்காலம் சுபிட்சமாகும்.
ஒரு நாடு பரிபூரண வளர்சியை எட்ட
வேண்டுமானால் அம்மாவைப்போன்ற ஆளுமைத்திறன் படைத்தவர்களிடம் தொடர்ந்து
ஆட்சிப்பொறுப்பை ஒப்படைக்கவேண்டும்.அதைவிடுத்து சுயநலவாதிகளிடம் ஒப்படைத்தால்
சுத்தமாக சுரண்டப்படும்.ஆகவே உண்மைகள் உணர்ந்துகொள்ளப்படும் போது.நன்மைகள் தானாக வந்தடையும்.இனி வேலை வாய்ப்புகள் பெருகும்.விவசாயம்
செழிக்கும்.பொருளாதாரம் சீரடையும்போது விலைவாசிகள் தானாக வீழ்ச்சியடையும்
பொருளாதாரம் சீரடைய நாம் ஒத்துழைக்கவேண்டும்.இத்தனையும் சாதனை ஆகும்.அம்மாவின்
கரங்களை வலுப்படுத்துவோம்.இளைஞர்களே ஒன்றுகூடுங்கள்.கரம் கொடுங்கள்.
ஸ்ரீரங்கம் எந்நாளும் நமது கழக அரங்கம்தான்.வெல்வோம் திருவரங்கம் சொல்வோம் அம்மாவின் புகழ் விளக்கம்.எதிரிகள் எவர்க்கும் உதிரி ஓட்டுக்கூட ஒன்றுமில்லையென பதிலாய் பாடுபடுவோம்.அம்மாவே தமிழ்.அம்மாவே தமிழகம்.அய்யன் எம்ஜியார் புகழே அனைத்து வெற்றிகளும்.
வாழ்க எம்ஜியார் நாமம்.
நன்றி
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment