Saturday 3 May 2014

ஜெயம் ஜெயலலிதா.

தனியொரு அகராதி.

ஜெயம் ஜெயம் என்றால் ஜெயலலிதா
ஜெய சக்தி என்பதும் ஜெயலலிதா.
பயம் பயம் என்று மிரள்வோற்கும்—பயம்
திருத்தும் அருள்முகம் ஜெயலலிதா.

பயம் என்ற சொல்லும் பயந்தோடும்.
பயந்தும் அச்சமும் நடு நடுங்கும்,
பயமும் அச்சமும் பழக்கமில்லை.-அதன்
பழக்கம் அறிவதும் வழக்கமில்லை.

அம்மா என்றோர் மொழி யுண்டு.
அம்மாவுக் கென்றோர் வழி யுண்டு.
அச்சமும் பயமும் எதுவென்று-அவரறிய
அப்படி எதுவும் கிடையாது.

பிறந்தோம் என்பதும் உண்மை யென்றால்
இருந்தோம் என்பதும் அவசியம் கண்டால்.
பகையும் தொலையும்  துணிவிருந்தால்-அம்மா
தகைதான் நிலையும் வரலாறு..

குடும்பம் என்றொரு தன்னலம் துறந்து
தடையாய் நிற்கும் அச்சமும் மறந்து
கடமை உணர்ந்த அம்மாவே-பொதுவாய்
உடமை யாகினர் தமிழுக்கே!.

அம்மா தானொரு அகராதி நூலே!
அம்மா என்பதன் பொருளும் போலே!
அச்சமும் பயமும் துளியில்லை-அம்மா.
உச்சமும் ஜெயமே எதுஎல்லை?.


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment