Wednesday 14 May 2014

உலகம் அறியித புதுமை.

உலகம் அறியாத புதுமை.

உலகம் அறியாத புதுமை—இது
உலகம் அறியாத புதுமை.-தன்
உளத்துணிவாலே களத்தனியாக
பலப்பரிசோதனை---இது
உலகம் அறியாத புதுமை.

அறுபத்தேழு தேர்தல் பின்னே
ஒரு கட்சியாக பலமுனை எதிர்த்த.
வரலாறு பதித்த புரட்சித்தலைவி
உரம்பாடும் பரணி உலகம் எழுதும்—இது
உலகம் அறியாத புதுமை.

ஊடகம் எல்லாம் பாடங்கள் படிக்கும்.
நாடகம் எல்லாம் நாடும் கணிக்கும்.
புதுமை இதனை புரட்சி என்றிடும்
பழமை அறிவினை பழகிட மறுப்பதும்—இது
உலகம் அறியாத புதுமை.

துணிச்சலைப் போற்றத் துணியா உலகம்
அனிச்சச்செயலாய் அலறிடும் வினோதம்.
தனித்தவள் இல்லை தாயவள் செல்வி
மனிதருள் மனத்தில் மொத்தமும் அம்மா—இது
உலகம் அறியாத புதுமை.

லட்சம் கோடிகள் மிச்சம் இன்றியே
துச்சம் சேர்த்தவர் பாவியர் இன்றும்
வெட்கம் கெட்டும் வேட்பாளா ரென்றால்
மக்கள் என்ன மழலைய ரென்றோ!—இது
உலகம் அறியாத புதுமை.

அம்மா என்றால் அம்மா அன்றோ!
ஆருக்காக அவள் உழைப்பாளோ!
அண்ணல் எம்ஜியார் அவர்போல் தானே
அம்மா தானும் நாட்டுயிர் தானே—இது
உலகம் அறியாத புதுமை.

எத்தனை காலம் ஏமாற்றி வாழ்வார்
அத்தனை வெளுத்தது அய்யோ போனார்.
நித்தியம் நிலைக்கும் சத்தியம் நின்றார்
இத்தரை பெருமை இயல்பை வென்றார்—இது
உலகம் அறிந்த பழமை.

கொ.பெ.பி.அய்யா.  



No comments:

Post a Comment