Wednesday 30 April 2014

நலாலவேளை.

நல்ல வேளை.

நல்ல வேளை எம்ஜியாரை
கண்டு கொண்டோமோ!.
இல்லை யெனில் நாடு என்ன
ஆகும் கண்டமோ!!

அள்ளிக் கொள்ளை தானேன்னு
அடித்திருப்பாரோ!-ஐயோ
கொள்ளிக் குடம் அந்நாளே
உடைத் திருப்பாரோ!

சரியான நேரம் எம்ஜியாரை
கண்டு கொண்டாமோ!--பூமி
சரித்திரத்தில் தமிழ் நாட்டை
வென்றெடுத்தோமோ!

நிரந்தரமாய் தமிழர் புகழ்
நிலைத்திருக்கவே—தர்மம்
நிறை அம்மாவை எம்ஜியார்
தெரிந்தெடுத்தாரோ!

நினைக்கும் பொழுதே நெஞ்சம்
எல்லாம் பதற்றமாகுதே!--கொஞ்சம்
எம்ஜியார் அசந்திருந்தால்
என்ன கதி நேர்ந்திருக்குமோ!

விசக்கிரிமி பரவி மோசம்
ஆகிருப்போமோ!-–ஐயோ
விடியாத இருளுக்குள்ளே
துடிச்சிருப்போமோ!

விடிஞ்சதையும் அடைஞ்சு போக
ஊதிப் பாத்தாங்க--கதை
முடிஞ்சாருன்னு பழையபடி
நுழைய வந்தாங்க.

அம்மா யாரு எம்ஜியாரு
தேர்ந்த பேருங்க—நம்மை
அம்மா தெய்வம் போல
காத்து வாராங்க.

கொ.பெ.பி.அய்யா.





No comments:

Post a Comment