Monday 28 April 2014

காந்த சக்தி.

காந்த சக்தி.

இனிக்கும் தமிழ் அறிஞர் அண்ணா 
இதயக் கனி எம்ஜியார்.
கழகத்தின் காந்த சக்தி
கலைச் செல்வன் எம்ஜியார்.

முகம் காட்டு போதும் கோடி
தகும் ஒட்டு எம்ஜியார்.
அரசியலும் அழகு என்றால்
அது விளங்கும் எம்ஜியார்.

வற்றாத ஜீவ ஆறு
வள்ளல் அவர் எம்ஜியார்.
பொன் மனச் செம்மல் அவர்
மென் குணத்தார் எம்ஜியார்.

சிலை அழகு கலை என்றால்
கலை அழகு எம்ஜியார்.
அண்ணாவின் கழகம் என்றால்
அண்ணல்அவர் எம்ஜியார் .

தமிழ்த் தாயின் செல்லப் பிள்ளை.
தங்க மகன் எம்ஜியார்.
தலைவர் அண்ணா புகழ் காக்க
கழகம் கண்டார் எம்ஜியார்.

அலைந் தலைந்து சேவைசெய்து
களைத்த புரட்சி எம்ஜியார்
தலைவியிடம் ஒப்படைத்து
அலை அயர்ந்தார் எம்ஜிஜியார்..

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment