Monday 21 April 2014

வீறு கொள்ளுவோம்.


வீறு கொள்ளுவோம்.

வெற்றி வெற்றி என்றே வீறு கொள்ளுவோம்.
சுற்றி சுற்றி வென்றே பாரு வெல்லுவோம்..
கொட்டிக் கொட்டி கைகள் கொட்டி குலவை செய்யுவோம்.
தட்டித் தட்டி தாளம் தட்டி தமிழை வாழ்த்துவோம்.
இலை இலையாய் இரட்டை இலை எங்கும் தழையட்டும்.
அலை அலையாய் அம்மா படை அன்பில் விளையட்டும்.

அம்மா அம்மா அம்மா என்றே ஆடிப் பாடுவோம்.
அவர் புகழை ஓட்டுக்களாய் அள்ளிப் போடுவோம்.
சும்மா சும்மா சுயநலமாய் ஆடும் கூட்டத்தை
சுழி போட்டுப் பூஜ்ஜியமாய் விரட்டக் கூடுவோம்.
இலை இலையாய் இரட்டை இலை எங்கும் தழையட்டும்.
அலை அலையாய் அம்மா படை அன்பில் விளையட்டும்.

வல்லரசு இந்தியாவை வடிவில் காணுவோம்.
நல்லரசு தமிழகத்தில் நாளும் பேணுவோம்.
ஈழரசு இலங்கை மண்ணில் ஏற்றி ஊணுவோம்.
ஈழத்தோடு தமிழ் இணைந்து நட்பில் தோணுவோம்.
இலை இலையாய் இரட்டை இலை எங்கும் தழையட்டும்.
அலை அலையாய் அம்மா படை அன்பில் விளையட்டும்.

வறுமை எனும் கோடழித்து வளமை பெருக்குவோம்.
சிறுமை எனும் கேடழித்து சீர்மை செதுக்குவோம்.
அரசு எனும் எந்திரத்தை ஆய்ந்து தேற்றுவோம்.
தரிசுபட்ட செயல் செழிக்க தரத்தை ஏற்றுவோம்.  
இலை இலையாய் இரட்டை இலை எங்கும் தழையட்டும்.
அலை அலையாய் அம்மா படை அன்பில் விளையட்டும்.

நதிகள் எல்லாம் கைகோர்த்து ஒன்று கூடுமே!
விதிகளிலே வேளாண்மை நின்று ஆளுமே!
வணிகமான கல்வியுடன் மருத்துவம் தானே
மனிதம் வாழ புனிதமாகி சேவை ஆற்றுமே!
இலை இலையாய் இரட்டை இலை எங்கும் தழையட்டும்.
அலை அலையாய் அம்மா படை அன்பில் விளையட்டும்.

கொ.பெ.பி.அய்யா.




No comments:

Post a Comment