விடிவெள்ளி அம்மா.
அம்மா நலம் வாழ இறையருள வேண்டும்--நிரந்தரம்
இம்மா நிலம் ஆள தமிழருள வேண்டும்.
எம்முள் உரமாக தாயருள வேண்டும்---எமக்கு
உம்முள் வரமாக வாழ்வருள வேண்டும்.
இல்லறம் துறந்த கோமள வள்ளி அம்மா--வாழ்வில்
சொல்லறம் சிறந்த நேர்மனப் புள்ளி அம்மா.
வெல்லறம் துணிந்த போர்க்குண வல்லி அம்மா--அரசியல்
நல்லறம் புரிந்திடும் சீர்விடி வெள்ளி அம்மா.
எம்ஜியார் கனவினை நிறை செய்யும் அம்மா--நெஞ்சில்
எம்முயிர் நினைவினை சுமை கொஞ்சும் அம்மா..
தன்னல உணர்வினை சிறை வைத்த அம்மா---என்றும்
எம்நலம் வினையினை அமைவித்த அம்மா.
சுய நலம் சுரண்டி சரிந்திட்ட மண்ணை--அம்மா
புய பலம் கொண்டு உயர்த்தினார் இன்னை
இட வலம் கண்டு இயக்கியும் அரசை--அம்மா
நெடு வளம் வென்று நிறுத்தினார் வரிசை.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment