Saturday 19 April 2014

எம்ஜிஆர் போட்டவிதை

எம்ஜியாரு போட்ட விதை

ரெட்ட ரெட்ட இலையாத்தான்
மொத்த மொத்த கிளையாத்தான்
துளுத்துருக்கு நாடு எங்கும்
செழித்திருக்கு வீடு எங்கும்.

எம்ஜியாரு போட்ட விதை
எங்கம்மா காத்த அதை
மேய வந்த கறுப்பாடு
மேல பாத்து ஏங்குதடா.

நாட்டு மக்கள் தோட்டமிது
நட்டி வச்சார் எம்ஜியாரு.
யாருக்கென்ன சொந்தமிது
பேரு அண்ணா திமுகாது.

குடும்பச் சொத்தாக் கொண்டாடி
கொண்டு தின்று வாரிசாடி
தலைமுறை இயக்கமல்ல
தகுதி நிறை அதிமுக.

மக்கள் மனம் நின்றவரே
மக்கள் பலம் வென்றவரே
மகாத்துமா எம்ஜியாரே
மறுபிறப்பார் என்றவரே!

மனித சேவை தொடர்வதற்கே
புனித சபை அதிமுக.
மாமனிதம் ஜெயலலிதாவே
மகான் அவர் எம்ஜியாரே .

கொ.பெ.பி.அய்யா.





No comments:

Post a Comment