Saturday 26 April 2014

நன்றி சொல்லுவோம்


















நன்றி சொல்லுவோம்.

நன்றி சொல்லுவோம் நாமே வெல்லுவோம்
நமக்குள் நாமே நன்றி கொள்ளுவோம்.
நாளையப் பாரதம் நமது கைகளில்
வேளை வந்தது விடியல் காணுவோம்.

எம்ஜியார் படைத்ததும் இயக்கம் வென்றதும்
இரட்டை இலையதும் புரட்சி என்பதும்
தமிழன் உயர்ந்ததும் தரணி ஆள்வதும்.
தர்மம் ஜெயமெனப் பரணி பாடுவோம்.

தென்திசைக் கோடியும் விண்மிசை ஏறியும்
பண்ணிசைப் பாடியும் பரவசம் கூடியும்
வெற்றியை முழக்கியும் சுற்றியே கூவியும்
பற்றினோம் நடுவணை முத்தமிழ் சூடியும்.

கட்டியம் கூவிடும் நிச்சயம் ஒலிக்குது
சத்தியம் மேவிடும் பச்சையம் ஒளிருது.
சத்தியா சந்தியா அன்னையர் குலவைகள்
சத்தமாய்ப் பாடிடும் சங்கீதம் கேட்குது.

ஜெயம்ஜெயம் என்றங்கே ஜெயம்பாடும் வாழ்த்துக்கள்
பயமறியாப் பாவையவள் பாரதத்தாய் ஏற்புகள்.
ஜெயலலிதா எங்கள்தாய் தமிழகத்தின் நம்பிக்கை
புயம்தாங்கி ஏற்கிறாள் பிரதமராய்த் தன்சுமை.

கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment