Wednesday 30 April 2014

கொடியேறுது.

கொடியேறுது.

இரட்டை இரட்டை இலைகளாய்
பரந்து கொடிகள் பரவுது.
விந்திய மலைகள் தாண்டியும்
இந்தியாவை சுற்றுது..

இமய மலையை வளையுது.
எவரெஸ்ட் சிகரம் ஏறுது
தமிழனன்று நட்ட கொடி
தானுங்கண்டு வாழ்த்துது.

படர்ந்து படர்ந்து நிறையுது.
பார் முழுக்க படருது.
பாராளும் மன்றம் கண்டு
நாடாள விரையுது.

அய்யன் காம ராசரும்
அவர் காண நினைத்ததும்
மெய்யாகும் பசுமையும்
வைபவம் செய்யுதாம்`

அம்மா புகழ் பாடுது.
சிம்மாசனமும் ஏறுது.
எம்ஜியாரின் நாடிது
என்றே கொடி ஏறுது.

கொ.பெ.பி.அய்யா.





No comments:

Post a Comment