கமழுந்தமிழ் சுதந்திரமே வா!வா!
தமிழ்மகளே! தமிழ்மகளே! வா!வா!
கமழுந்தமிழ் சுதந்திரமே வா!வா!
தமிழீழம் மலர்ந்ததென்றே வா!வா!
தமிழரிங்கு தலை நிமிர்ந்தோம் வா!வா!
தமிழாளுந் தனியரசி வா!வா!
தரணிக்கு வல்லரசி வா!வா!..
அமிழ்தமே இலக்கியமே வா!வா!
அம்மா
புரட்சித் தலைவியே வா!வா!
பெண்ணினப் பெருமையே வா வா!
பெண்ணிலை உரிமையே வா வா!
சுய உதவிப் பொருளே நீ வா வா!
தயவொளி அருளே நீ வா வா!
பட்டினியை ஒழித்தவளே வா வா!
பிச்சையவலம் முடித்தவளே வா வா!
தொட்டில்த்திட்டம் கண்டவளே வா வா!
தாய்க்குலத்தைக் காத்தவளே வா வா!
அனாதை சொல்லழித்தாய் வா வா!
அவலையற்கு வாழ்வளித்தாய் வா வா!
மழலையன்பில் மகிழ்பவளே வா வா!
தலைவராட்சி தொடர்பவளே வா வா!
புரட்சியாரின்
வாரிசே வா!வா!
வறுமையிருள் விடியலே வா!வா!
குலமுயர்த்துங் கலைமகளே வா!வா!
நலமருளும் காவேரியே வா!வா!
ஒற்றுமையின் உணர்வே நீ வா!வா!
பற்றுணர்த்துந் தாயே நீ வா!வா!
மாற்றாருந் தொழுவோளே வா!வா!
வேற்றுமை யொளித்தோளே வா!வா!
காற்றான கருணையே நீ வா!வா!
ஊற்றான உரிமையே நீ வா!வா!
ஆற்றான
அம்மா நீ வா!வா!
ஊற்றினோம் பூமழை நீ வா!வா!
.கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment