Sunday 20 April 2014

கும்மி

கும்மி

கும்மி அடி பெண்ணே கும்மி அடி.
குலவை பாடி கும்மி அடி.
அம்மா ஜெயிச்சு வாரான்னு
ஆடிப்பாடி கும்மி அடி.

அம்மா ஆட்சி நடக்குதுன்னு
அணிவகுத்து கும்மி அடி.
அடைச்சு வச்ச காவேரியை
அவுத்து விட்டான்னு கும்மி அடி.

ஆம்பளைங்க ஆண்டாங்க
அடங்கித்தான நின்னாங்க
பொம்பளதான் எங்கம்மா.
புலியாப் பாஞ்சானு கும்மி அடி.

பாவிப்பயல் ராஜபச்சயை
பதற வச்சதச் சொல்லியடி.
பூமியெல்லாம் நியாயம் சொல்ல
புரிய வச்சான்னு கும்மியடி.

மத்தி யென்ன பேரரசா
சுத்தி கொண்டு அடிச்சாளே!
பாவம் மக்கள் பேருயிரை
பாது காத்ததைப் பாடியடி.

ஆணு என்ன பெண்ணு என்ன
அம்மான்னு சொன்னா அதுருதுல்ல.
ஆளும் தகுதி அம்மாவுக்கே
ரெட்டலை காட்டிக் கும்மியடி.

கொ.பெ.பி.அய்யா.




No comments:

Post a Comment