Wednesday 23 April 2014

ஜெயம் ஜெயமே

தனியொரு அகராதி.

ஜெயம் ஜெயம் என்றால் ஜெயலலிதா
ஜெய சக்தி என்பதும் ஜெயலலிதா.
பயம் பயம் என்று மிரள்வோற்கும்—பயம்
திருத்தும் அருள்முகம் ஜெயலலிதா.

பயம் என்ற சொல்லும் பயந்தோடும்.
பயந்தும் அச்சமும் நடு நடுங்கும்,
பயமும் அச்சமும் பழக்கமில்லை.-அதன்
பழக்கம் அறிவதும் வழக்கமில்லை.

அம்மா என்றோர் மொழி யுண்டு.
அம்மாவுக் கென்றோர் வழி யுண்டு.
அச்சமும் பயமும் ஜெயம் மொழியில்
அப்படி எதுவும் கிடையாது.

பிறந்தோம் என்பது உண்மை யென்றால்
இருந்தோம் என்பதும் அவசியம்.—அந்த
அவசியம் தொலையும் பயம் இருந்தால்.
அம்மா ஜெயம்தான் வரலாறு.

குடும்பம் என்றொரு தன்னலம் துறந்து
தடையாய் நிற்கும் அச்சமும் மறந்து
கடமை உணர்ந்த அம்மாவே.பொதுவாழ்வு
உடமை யாகினள் தமிழுக்கே அகவாழ்வு.

அம்மா தானொரு அகராதி நூலே!
அம்மா என்பதன் பொருளும் போலே!
அச்சமும் பயமும் ஜெயமிடம் இல்லை.
அவசியம் என்பதும் இனியென்ன வேலை.


கொ.பெ.பி.அய்யா.

அன்பு நெஞ்சங்களே என் பாடல்கள் அம்மாவின் புகழ் பாடும்
இசை வட்டுகளாக்கிப் பரப்புவீர்.

No comments:

Post a Comment