Monday 28 April 2014

சவால்.

சவாலுக்கு சவால்.

நல்லார்க்கு நல்லாராய்
வில்லாற்கு வல்லாராய்
கள்ளார்க்குப் பொல்லாராய்
கல்லாற்கும் சொல்லோராய்
உள்ளாரும் ஒருவராய்
எல்லாம் அவர் அம்மாவாய்.

சேவலுக்கு சேவலாய்
கூவிடும் துணிச்சலாய்      
தூவலுக்குச் சீறலாய்
பாவிடும் அணிகளாய்
சவாலுக்கு சவாலாய்
காவல் அவர் அம்மாவாய்.

தீவினை அழிக்கவே!
தீர்வினை தேறவே!
நாவினை அடக்கவே!
நஞ்சுரை மடிக்கவே!  
நேர்வினை அம்மாவே!
நேர்ந்திட்டார் புரட்சியார்.

பொய் மொழி வழக்குகள்
புறமுதுகு காட்டாமல்
மெய்வழி வழக்கிலே
மெய்ப்பித்து நிறுத்தியே
வையத்துள் வாழ்வாங்கு
வாழ்ந்தம்மா நிலை செய்வார்.

கொ.பெ.பி.அய்யா.



No comments:

Post a Comment