Friday 25 April 2014

தங்கக் குணத்தான்.

தங்கக் குணத்தான்.

தங்கக் குணத்தான் தாராள மனத்தான்.
திங்கள் முகத்தான் தேனான அகத்தான்.
தங்கத் தாரகை நெஞ்சத் திருப்பவன்
எங்கள் எம்ஜியார் என்றும் புகழிருப்பான்.

அன்றவன் காட்டிய இரட்டை விரல்கள்.
நின்றெம் வாழ்வில் புரட்டும் இடர்கள்`
வென்றவன் ஏற்றிய புரட்சிக் கொடிகள்
என்றுமே போற்றிப் பறக்கும் புகழ்கள்.

பஞ்சம் விரட்டிய அன்னக் கனவு.
நெஞ்சம் நிரம்பிய அம்மா உணவு.
மிஞ்சும் தமிழகம் இந்திய மண்ணில்
அஞ்சா மனத்தினள் அம்மா செயல்கள்.

உன்வழி தொடர பின்வழி அம்மா.
நன்வழி படர உன்மொழி கொள்வம்.
என்றும் மறவா மந்திரம் அய்யா!
எம்ஜியார் புகழே நிரந்தரம் அய்யா.

கொ.பெ.பி.அய்யா.  



No comments:

Post a Comment