இரட்டை இலைக் கோலம்.
வாசல் எங்கும் இரட்டை இலைக்
கோலம் பாருங்கள்.—அது
பாசமுள்ள பச்சை வண்ணம்
ஜாலம் பாருங்கள்.
கோலம் போடும் கன்னியரின்
எண்ணம் கேளுங்கள்—நல்ல
காலம் கூறும் வண்ணமதன்
திண்ணம் கேளுங்கள்.
பின்னல் ஜடை பின்னலிலே
என்ன பாருங்கள்.—பச்சை
வண்ணமதில் இரட்டை இலை
சின்னம் பாருங்கள்.
இரட்டை இலை சூடிக்கொண்ட
வண்ணம் கேளுங்கள்.—பசுமை
வரட்டும் எனப் பாடுகின்ற
பண்ணும் கேளுங்கள்.
கருப்பு சிவப்பு இடையே தூய
வெள்ளை பாருங்கள்.-தமிழன்
கருத்து சிவந்த உடன்பிறப்பின்
உள்ளம் பாருங்கள்.
சட்டமான வண்ண ஓரம்
வகையைக் கேளுங்கள்.—அம்மா
திட்டம் நிறை தீர்கமெனும்
ஞானம் கேளுங்கள்.
கொ.பெ.பி.அய்யா.
அன்பு நெஞ்சங்களே என் பாடல்கள் அம்மாவின்
புகழ் பாடும்
No comments:
Post a Comment