Thursday 17 April 2014

அழகா அழகா!

அழகா!அழகா!

தங்கக் குணத்தழகா!
தாமரை முகத்தழகா!
திங்கள் ஒளியழகா!
சிங்க நடையழகா!!

சிங்காரச் சிரிப்பழகா!
சீர்திருத்தப் பொறுப்பழகா!
மங்காத பேரழகா
மக்களின் சீரழகா!

மெய்யுரைச் சொல்லழகா!
மெய்யொளிப் பொன்னழகா!
நெஞ்சு நிறை நேரழகா!
கொஞ்சுமொழி பேச்சழகா!

கரம்சிவந்த கொடையழகா!
உரம்கொண்ட படையழகா!
அறம் கவர்ந்த மனசழகா!
திறம் துணிந்த அரசழகா!

புரட்சிப் புயல் தலைவழகா!
அறிஞர் அவர் வழியழகா!
தமிழாட்சி முறையழகா!
தர்மத்தின் நெறியழகா!

இரட்டை இலை படைப்பழகா!
புரட்சித்தலைவி குருவழகா!
தன்னலம் தெறித்த தனியழகா!
நந்நலம் உரித்த மனிதழகா!

எம்ஜியாரெனும் புகழழகா!
அம்மா இதயக் கனியழகா!
அம்சம் கோவில் தேரழகா!
அம்சம் தமிழின் ஊரழகா!

தொடரும் ஆட்சி திருவழகா!
படரும் எம்ஜிஆர் அருளழகா!
மண்ணும் தமிழும் நினைவழகா!
மின்னும் பொன்மனம் அரசழகா!


கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment