Friday 18 April 2014

உரிமைக்குரல்.

உரிமைக்குரல்

கொண்டையிலே இரட்டை இலை
குண்டு குத்திப் போறபொண்ணே!
கண்டு வந்த மச்சானுக்கு
நிண்டு சொல்ல வேகமென்ன?

கச்சிக்கற வேட்டிகட்டி
கச்சிதமா வந்த மச்சான்
உரிமைக்குரல் எம்ஜியார
உரிச்சி வச்சி அசத்துறய.

ஆயிரத்தில் ஒருத்தியம்மா
அப்படித்தான் அம்மாளம்மா.
வாத்தியாரு பொருத்தமாத்தான்
வடிவழகே சொலிக்கிறியே!

ஓட்டுப்போட போறேன் மச்சான்
வீட்டக்கூட பூட்டலயே.
கள்ள ஓட்டுக் குத்துமுன்னே
நல்ல ஓட்டுப் போடப்போறேன்.

நானும் கூட அதுக்குத்தானே
மானே உன்னத் தேடி வந்தேன்.
எனக்குமுன்னே முந்துறயே
ரெட்ட இலை சுந்தரியே!

நீயும் நானும் சேர்ந்தது போல்
வானும் மண்ணும் வாழ்வதுபோல்.
ரெட்ட இலை நமது சின்னம்
கட்டி அது ஆளும் திண்ணம்.

சரியாத்தான் சொன்னயடி
சமதுக்காரி பெண்ணே நீ!
ஏழைகளின் சின்னமடி
எம்ஜியாரின் ரெட்ட இலை.

கொ.பெ.பி.அய்யா.



 

No comments:

Post a Comment