Wednesday 16 April 2014

உயிர் தந்த தாயே

உயிர் தந்த தாயே நீ வாழ்க!

தாயே!உன்னைத் தாயெனச்சொல்லத்
தமிழ் இனி கூசாது.
அம்மா!உன்னை அம்மாவென அழைக்க
அணி தமிழ் மறக்காது,

எட்டாவது வள்ளலாய் ஏற்றம் பெற்றாய்.நீ!
எட்டுத் திக்கிலும் உன் புகழ் எட்டுவாரில்லை.
கட்டிய சுருக்கினை வெட்டிய கருணை நீ வாழ்க!--நீ
நட்டிய நீதி நாற்புரங்களும் பரவ முதலே நீ வாழ்க!

மூவரின் உயிரை மீட்ட முத்தமிழ் அன்னையே!
ஈவரின் இது போல் எவர் செய்வர் நன்மையே !
உயிர் தந்ததால் அன்னை நீ !
உலகினில் இதுவன்றி வேறென்ன கொடை இனி.

அன்னையின் கருணை அளப்பரியது என்பர்
உண்மை விளக்கம் இன்னை புரிந்தனர்.
முன்னைத் தடயங்கள் உன்னை ஒப்பிட
என்ன தேடினும் உன்னையே காண்பர்.
வாழ்க நீ தாயே வாழ்கவே!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment