தமிழகம் தலை நமிர்ந்தது.
தமிழகத்
தாயே நீ வாழ்க-நின்
தன்னிகரில்லா தன்மானம் வென்றது.
காவிரித்தாயே வா
வா-இரு
கரை நிறப்பி வளமே
தா,தா..
அரசிதழ் வெளியீடு
அம்மா உன்
அபாரச் சாதனை
அல்லவோ
காவிரி மேலாண்மை
அம்மா-உன்
கருணைக்கு அடையாளம்
சொல்லவோ!
தேவைக்குத் தீர்வது
செய்யட்டும்-உன்
தீர்க்கத்தின் முயற்சிகள்
உய்யட்டும்.
திருவினைகள் மழையாகிப்
பெய்யட்டும்-உன்
தாயுள்ளம் தமிழ் புகழ்
கொய்யட்டும்.
நஞ்சை நனையட்டும்!நாடு செழிக்கட்டும்!.
நெஞ்சின் ஈரம்போல் நித்தியம் கொழிக்கட்டும்!
தஞ்சை சேறானால் தமிழுக்குச் சோறுண்டு.
அஞ்சா நெஞ்சமே அம்மா உன் பேருண்டு.
வேளாண்மை வாழட்டும்!தாளாண்மை கூடட்டும்!
ஆளும் காலம்
நீளட்டும்!அம்மா கரம் உயரட்டும்!.
அம்மா என்றால் சும்மாவா!அசத்தி விட்டாய்
நீயம்மா!
செம்மாந்து தமிழ்
நிமிர்ந்து சிறக்க வைத்தாய் தாயம்மா!
பிறந்த நாள் பரிசாக
பெற்ற பெரும் பரிசம்மா.
சிறந்த நல்
தீர்ப்பம்மா செழித்தது தரிசம்மா.
வையகம் உள்ளவரை வாழும்
உன் புகழம்மா! .
வாழ்த்தும் மெய்
சொல்லாண்டு வாழ்க நீ பல்லாண்டு!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment