Tuesday 29 April 2014

வாராரு வாத்தியாரு






















வாராரு வாத்தியாரு வாராரு.!


வாராரு வாராரு 
வாத்தியாரு வாராரு 
வணங்காமுடி வீரரவர் 
வரிச காட்டி வாராரு.
சாட்டை கொண்டு சுழட்டியே
வேட்டையாட வாராரு.
புரட்சித் தலைவி ரூபத்திலே
புதுமை செய்ய வாராரு.

பட்டப் பகல் கொள்ளைகளை 
பட்டொழிக்க வாராரு.
வெட்டவெளி வீதிக் கொலை 
தட்டி ஒடுக்க வாராரு.
வன்கொடுமைக் கற்பழிப்பு 
இன்னல் நீக்க வாராரு.
பெண்ணடிமை செய்வோரை 
பிச்செறிய வாராரு.

ஊழல்செய்யும் பேயர்ககளை
ஓட்டத்தானே வாராரரு
கூலிப்படை நாய்களையும் 
காலிசெய்ய வாராரு.
பொய்யரசியல்ப் பித்தர்களைப் 
புறம்போக்க வாராரு..
கையூட்டுக் கள்வர்களைக் 
களையெடுக்க வாராரு..

சுயநலக் கூட்டத்திற்கு 
சூடு வைக்க வாராரு..
சுரண்டும் பேர்வழிகளுக்கு 
கரண்டு வைக்க வாராரு..
பதுக்கும் கொள்ளைத் திருடர்களை 
ஒதுக்கி வைக்க வாராரு..
பணம் பறிக்கும் பாவிகளை 
இனம் பிரிக்க வாராரு..

காமவேட்டைக் கயவர்களை 
காவு கொள்ள வாராரு..
பாவச்செயல் பாவிகளை
ஆவிபோக்க வாராரு.
ஊதாரிக் கூட்டங்களை 
ஒழித்துக்கட்ட வாராரு.. 
நீதிவழி நியாயங்களை 
நிலை நாட்ட வாராரு..

ஈழத் தமிழ் மக்களுக்கு 
தோள்கொடுக்க வாராரு..
வீரம் போற்றும் வீரருக்கு
வாள்கொடுக்க வாராரு..
ஈனங்கொண்ட எதிரிகளை 
வேரறுக்க வாராரு..
மானம் போற்றும் தமிழினத்தை 
மகுடமேற்ற வாராரு..

புரட்சித் தலைவி பேரிலே
புரட்சித்தலைவர் வாராரு.
கனக்கும் நம்ம  சுமை இறக்கக்
கட்டாயம் வாராரு..
கணக்குப் போட்டு வாராரு.
காலம் இது வாராரு.
கணக்குத் தீர்க்க வாராரு
காவல்காரன் வாராரு.

கொ.பெ.பி.அய்யா.




No comments:

Post a Comment