Tuesday 22 December 2015

அம்மாவியம்.

அம்மாவியம் 3

பதறி ஒடுங்காதே!
பாவம் எண்ணாதே!
பின்னால் ஒளியாதே!
பீதி நம்பாதே!
புண்படப் பேசாதே!
பூச்சியாய் வாழாதே!
பெண்டீரை இகழாதே!
பேதம் பழகாதே!
பைத்தியனாய் திரியாதே!
பொறாமை கொள்ளாதே!
போர்க்குணம் புதைக்காதே!
பௌசு பாராட்டாதே!
அப்பியாசம் தள்ளாதே!

மண்ணை துறக்காதே!
மாதாவை மறக்காதே!
மிகுந்தது மறைக்காதே!
மீட்டது சிதைக்காதே!
முன்சொல் மறுக்காதே!
மூத்தோரை வெறுக்காதே!
மெத்தனம் பேணாதே!
மேடைமொழி கேளாதே!
மையல்வெறி மாளாதே!
மௌசு மயங்காதே!
அம்மாவழி விலகாதே!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment