Saturday 19 December 2015

அன்புள்ள அம்மாவுக்கு.

அன்புள்ள அம்மாவுக்கு.

அன்புள்ள அம்மாவுக்கு உந்தன்
ஆருயிர்ச் செல்வங்கள்-அன்புடன்
வந்தனம் கூறி நன்றியுடன்
சிந்தையிற் கடிதம்.

காமராசர் அண்ணா எம்ஜியார்
சாமிகள் வழியில்-அம்மா
நீயும் எம்முடை உயர்வில்
நீள்கிறாய் வாழி!

கல்வியொன்றே செல்வம் என்றே
சொல்லிய முன்னோர் --உண்மை
கண்டுந்தன் நாடும் நிமிர்த்தியும்
வென்றயம்மா பூர்த்தி!

பெற்றது மட்டும்தான் பெற்றோர்
மற்றது எல்லாம்நீ--நற்றார்
கற்றது நடுஊர் கனிமரம்
உற்றதும் உன்னறம்.

படிப்பதற்கு என்னென்ன வேண்டும்
மடிக்கணினி வரைதான்--தத்தாக
தானெடுத்தாய் தாயே உனக்காக
நாங்கள் இருக்கிறோம்.

கோடி கோடியாய் குழந்தைகள்
கூடிய செல்வங்கள்--அம்மாநீ
தேடிய சொந்தங்கள் நாங்கள்
நீடியும் நீயாள்க!

கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment