Saturday 19 December 2015

அன்புள்ள மகனுக்கு.


அன்புள்ள மகனுக்கு.

அன்பு மகனுக்கு தாயின்
அன்புக் கடிதம் வரைகிறேன்.
அம்மா உந்தன் ஆன்மாதான்
வாழும் நானுன் கழகமாய்
நெஞ்சம் வாழ்கிறேன் ஆயிரம்
காலம் தொடரும் நிரந்தரந்தான்.
பந்தம் பாசம்  நானேதான்
சொந்தம் எனக்கு நீயேதான்.

உணவாய் நலமாய் நானேதான்.
உடுத்தத் துணியும் நானேதான்.
உறங்க விடுதியும் அமைதியும் நான்
வழங்கும் அரசும் அம்மா நான்.

ஆலயந் தோறும் அன்னதானம்
அட்சய பாத்திரம் நானேதான்.
பசியை தொலைத்த மேகலையே
பசுமை அம்மா நானேதான்.

அன்ன பூரணி ஆள்வதும்
அம்மா அரசு வாழ்வதும்
மகனே மனது சாட்சியே
சுகமே அம்மா காட்சியே.

தமிழில் அம்மா என்றாலே
தர்மம் என்பார் என்னாலே.
அனாதை அற்ற தமிழ் நாடே
ஆனது தொட்டில் ஒன்றாலே.

ஏழை என்றொரு பாவச் சொல்
இல்லை என்றானது நானே சொல்.
கடமை உனது செயலாலே
நிசமே அம்மா நினைவாலே.

கவிஞர்கொ.பெ.பி.அய்யா.



No comments:

Post a Comment