Monday 7 December 2015

அம்மா நான் உன்னருகே.

அம்மாதான் அம்மா!

நான் இருப்பேன் நின்னருகே
ஏன் கலக்கம் என்னுறவே!
வீண் மயக்கம் என்னதான்!
தான் துடைப்பேன் அம்மாநான்!

என்நெஞ்சம் உன் வாசம்.
உன்தஞ்சம் என் நேசம்.
நம்சொந்தம் முன் பந்தம்
அம்மா நான் என்றென்றும்.

எண்ணும் போதும் சும்மாதான்.
எண்ணித் தேடும் அம்மாநான்.
என்னை முந்தி சிந்தைதான்.
உன்னை கண்டு ஆறும்நான்.

அம்மா துணை இருக்கிறேன்.
அஞ்சும் வினை அறுக்கிறேன்.
தும்முந் துயர் பொறுப்பேனோ!
அம்முன் அர வணைப்பேனே!

அம்மா தான் அம்மாவாம்.
சும்மா தான் மற்றெல்லாம்.
என்னுயிர் போல் போற்றும்
உன்னுயிர்  நான் அம்மா.

இரட்டை இலையே செழித்திருக்கு.
புரட்சிசித் தலைவி பலமிருக்கு.
இருட்டை விலக்கிய கழகமடா!
நிரந்தர முதல்வர் அம்மாடா!

கொ.பெ.பி.அய்யா.




No comments:

Post a Comment