Tuesday 15 December 2015

அம்மா நானுன்னுயிர்.

அம்மாதானே நான்.

அம்மாதானே கண்ணே நான்
ஆருக்காக நான்--உன்
அன்புதானே உள்ளே நான்
ஆன்மாவில்தான்.

உயிர்தானே உள்ளேன் நான்
உனக்காக நான்-என்
உதிரம்தானே உன்னில் நான்
உணர்வில்தான்!.

சொந்தம்தானே எல்லாம் நான்
சொத்தாக நான்-உன்
பந்தம்தானே உயிரே நான்
உந்தனால்தான்.

வஞ்சகர்தானே சொல்லும் நான்
அஞ்சாமல் நான்-என்
தஞ்சந்தானே உறவே நான்
நெஞ்சால்தான்!

வாசந்தானே உன்னால் நான்
பாசத்தாய் நான்-உன்
நேசந்தானே தமிழே நான்
பாசையால்தான்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment