Sunday 6 December 2015

அரசியல் தர்மம் கட்டுரை.

அரசியல் தர்மம்.

கண்களை நம்பாமல்தான் நீதி தேவதை கண்களைகட்டிக்கொண்டுள்ளாள்.சில நேரங்களில் காட்சிகளும் பொய்யாகிப் போகின்றன.ஆகவேதான் சாட்சிகளின் நேர் மொழிகளை கேட்கமட்டும் தன் செவிகளைமட்டும் தீட்டி வைத்துக் கொண்டு உண்மைகளை ஆராய்கிறாள் நீதி தேவதை என்பதே நீதி தர்மத்தின் நம்பிக்கையாக உள்ளது,ஆனால் இன்றைய போலியான அரசியல் வாதிகள் நேர்மையாக அரசியல் செய்யும் மெய்யான பொதுவாழ்வை மேற்கொண்டு நாடே வீடென்றும் நாட்டு மக்களே தன் சொந்தமென்றும் சுயநலம் துறந்து அரசியல் அறம் நிலை கொண்டு மக்கள் தொண்டாற்றும் நல்லோரை எவ்விதத்தில் ஒழித்து அழிக்கலாம் என்பதையே தங்கள் கொள்கையாகக் கொண்டு அதற்கான முயற்சிகளில் தங்கள் வாழ்நாளை அற்பணித்து அலைகிறார்கள்.அதற்காக பொய்வழக்குகள் போட்டும் பொய்ச்சாட்சிகளை இட்டுக்கட்டி சோடித்தும் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

மற்றவர் மீது குற்றம் சுமத்தும் எவரும் சுத்தமானவர்கள் இல்லைஎன்பதையும் நாட்டு மக்கள் புரிந்துகொள்ளாமலும் இல்லை.ஆனாலும் இந்த வேடதாரிகள் எந்த நம்பிக்கையில் தங்கள் மனச்சாட்சியை மறுத்தும் மக்களை ஏமாற்றவும் வெக்கமில்லாமல் விதிகளில் திரிகிறார்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.மக்களுமா மனச்சாட்சியை மதிக்காமல்இருப்பார்கள்.அல்லது மறந்திருப்பார்கள் என்ற நப்பாசையா?அடப்பாவிகளா இன்று திடீர் ஆயத்த அரிச்சந்திரர்களாக மாறிவிட்டீர்களாக்கும்.நாங்களும் நம்பிவிட்டோம் நாசமாய்ப் போக.அடப்போங்கடா போக்கற்றவங்களா!

இயற்கையின் பேரழிவில் இடர்பட்டுக்கிடக்கும் அப்பாவிமக்களிடம் போய் அரசியல் பேசுகிறீர்களே!இதுதான் அரசியல் தர்மமா? இதுதான் அதற்கான தருணமா?பேரிடர் என்பது உங்களைப்போல் திட்டம் தீட்டி வஞ்சம் தீர்க்கும் வடிவிலா வேடமாட வரும்!எதிர் பாரா திடீர் சூழலில் திடீர் தாக்கமாக விளைவதுதானே இயற்கைப் பேரிடர் என்பது.இதற்கு யார்தான் பொறுப்பாக முடியும்.?அதையும் அஞ்சாமல் எதிர்கொள்வதுதான் திறமை.இதையும் ஒரு சவாலாகவே ஏற்றுக்கொண்டு சமாளிப்பதுதான் அம்மாவின் சாதனைக்கு சான்றாக இதுவும் இயற்கை ஏற்படுத்திய சோதனைகளில் ஒன்று.இடர்களைக் கடக்கும் வல்லமை அம்மாவுக்கு அருளப்பட்டுள்ளது என்பதையும் ஆண்டவனும் அறிவான்.அதனால்தான் என்னவோ ஆண்டவனும் சோதித்துப் புடம் போட்டுப் பார்க்கிறான்.

சோதிக்கிறவனே சாதிக்கவும் துணை நிற்பான்.மீட்புப்பணிகளில் தீவிரம் காட்டிக்கொண்டிருக்கும் அம்மா வேறு சிந்தனைகளில் வீண் பேச்சுக்கு வேண்டாம் வெட்டித்தனம் என்று அமைதி காத்து வருகிறார்.தங்கள் இன்னுயிரைப் பணயம் வைத்து பகல் இரவு பாராமல் பாரபட்சமின்றி மீட்புப்பணிகளில் ஈடுபட்டுவரும் அரசுப்பணியாளர்கள் மற்றும் சமூகத் தொண்டர்கள் படைகளாக அணிவகுத்து பாடுபடுகிறார்கள்.அவர்களின் எதிர்பார்ப்பில்லா வீர தீர செயல்களை பாராட்டும் பக்குவம் இல்லை என்றாலும் நன்றிகூறும் நல்லெண்ணம் இல்லை என்றாலும் அப்புண்ணியர்களின் தூய மனங்களை காயப்படுத்தி வேடிக்கை பார்க்காமல்
இருந்தாலே தங்களுக்கும் பாவ விமோச்சனம் கிட்டும்.

நன்றி

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment